Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவனீதம்பிள்ளையின் நடவடிக்கைகள் குறித்து சரத் பொன்சேகா அதிருப்தி

Featured Replies

sarath%20fonswka19_CI.jpg

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பி;ள்ளையின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
தமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்து கொள்ள நவனீதம்பிள்ளை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வார காலம் நவனீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருப்பதாகவும், தம்மை சந்திக்க போதியளவு கால அவகாசம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே சந்திப்பு ஒன்றுக்கு வாய்ப்பு அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தாம் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவனீதம்பிள்ளை மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய தம்மை சந்தித்திருக்க வேண்டியது அவசியமானது என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தற்போதைய அரசாங்கத்தின் எதேச்சாதிகார செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை எனவும், தனிப்பட்ட நபர்கள் இராணுவ தீர்மானங்களுக்கு புறம்பாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எனவும் அவர் சுட்டிககாட்டியுள்ளார். இது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிரமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு விளக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
 
நாடு பாதக நிலைமைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெற்கில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை சந்தித்து மக்களை கொன்றீர்கள் தானே எனும் போது இல்லை என்று தானே சொல்வீர்கள்.பிறகு ஏன் அவர் தனது நேரத்தை விரயப்படுத்த வேண்டும்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.