Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாக்குகளை திசை திருப்ப ஒட்டுக்குழு டக்ளசின் “விதவைகள் முன்னணி” பெண்கள் அமைப்பு

Featured Replies

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற “விதவைகள் முன்னணி” என்ற சுயேட்சைக் குழுவானது ஈ.டி.டி.பி ஒட்டுக்குழுவின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் களமிறக்கப்பட்ட பெண்கள் அமைப்பாகும். யாழ்.குடாநாட்டிலுள்ள விதவைகளின் வாக்குகளை திசை திருப்புவதற்காக இந்தப் பெண்கள் அணியை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு களமிறக்கியுள்ளது என்று யாழ்ப்பாணத்திலுள்ள சங்கத24ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை ஆண்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயிரக்கணக்கான விதவைகளை உருவாக்கியுள்ள டக்ளஸ் தேவாநந்தாவும் அவரின் ஈ.பி.டி.பி கட்சியும் இன்று அதே விதவைகளிடம் வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் கனவுடன் விதவைகள் முன்னணி என்ற பெயரில் சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்கியுள்ளமை குறித்து குடாநாட்டிலுள்ள விதவைப் பெண்களும் பொது மக்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதாகவும் சங்கதி24ன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணியுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்த ஈ.பி.டி.பி அடுத்த நாள் கூட்டமைப்பின் வேட்புமனுவைப் பார்த்தபின் அதிர்ச்சியடைந்ததன் விளைவாகவே மேற்படி விதவைகள் முன்னணி என்ற அமைப்பு களமிறக்கப்பட்டுள்ளது.

காரணம் என்னவென்றால், கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் திருமதி அனந்தி எழிலன் களமிறக்கப்பட்டமையால் குடாநாட்டிலுள்ள பெண்களின் வாக்குகள் அனைத்தும் அனந்திக்கு சென்றுவிடும் என்று அஞ்சிய டக்ளஸ் தன்னுடன் நெருக்கமான “உறவுடைய” பெண் சட்டத்தரணி தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரை முதன்மை வேட்பாளராக கொண்டு மேற்படி விதவைகள் முன்னணி என்ற பெண்கள் அமைப்பை களமிறக்கியுள்ளார். ஈ.பி.டி.பி கட்சியால் கணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட 10 விதவைகளை டக்ளஸ் இந்த சுயேட்சைக் குழுவில் களமிறக்கியுள்ளார்.

மேற்படி விதவைகள் அமைப்பினர் யாழ்.குடாநாட்டிலுள்ள வீடுகளுக்குச் சென்று, குறிப்பாக விதவைகள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் உண்மைத் தன்மை பல பெண்களுக்குப் புரியாத நிலையில் புரிந்துகொண்ட நிலையிலுள்ள பெண்கள் மேற்படி விதவைகள் அமைப்புக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். தங்கள் கணவர்களின் சாவுகளுக்கு காரணமாக இருந்த ஈ.பி.டி.பி யால் களமிறக்கப்பட்ட விதவைகள் அமைப்புக்கு தாங்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள் என்று அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

தமது வாக்குகள் அனைத்தும் கூட்டமைப்பின் பெண் வேட்பாளரும் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளருமான எழிலனின் மனைவி அனந்திக்கே என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை ஈ.பி.டி.பியினரால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல நூற்றுக்கணக்கான ஆண் குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்;. இவர்களால் கடத்தப்பட்ட பல ஆண்கள் இன்றுவரை எங்கேயென்று தெரியாதுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற காரணத்தாலேயே மேற்படி ஆண்கள் ஈ.பி.டி.பியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆண்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு ஆயிரக்கணக்கான விதவைகளை உருவாக்கியுள்ள டக்ளஸ் தேவாநந்தாவும் அவரின் ஈ.பி.டி.பி கட்சியும் இன்று அதே விதவைகளிடம் வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாண சiபியில் ஆட்சியமைக்கும் கனவுடன் விதவைகள் முன்னணி என்ற பெயரில் சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்கியுள்ளமை குறித்து குடாநாட்டிலுள்ள விதவைப் பெண்களும் பொது மக்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

 

http://goldtamil.com/?p=7936

1185695_229609623859738_1378525417_n.jpg

உங்க பாசத்தை பார்த்தாலே தெரியுது தமிழ் விதவைகளை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டீங்க என்று.  உங்களை எல்லாம் நல்லாய் வருவீங்க என்று யாருடா சொன்னது? ஏற்கனவே தமிழனை உலையில போட்டு நல்லாய் வந்திட்டீங்க

 1240187_648039508554332_1619759582_n.jpg

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.