Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதர்சன நாச்சியப்பனின் சூதாட்ட அரசியல்..

Featured Replies

ஈழத் தமிழனின் ஆவியிலும் அரசியல் பண்ணும் இந்திய அரசியல்வாதிகள்..

காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டு வாக்காளரை கவர்வதற்கு நயவஞ்சகமான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது.

இதற்கான முதலாவது துரும்புச் சீட்டை சுதர்சன நாச்சியப்பன் மூலமாக போட்டுள்ளது, அவர் பேசியிருக்கும் பொன் குஞ்சு வாசகங்கள் இவைதான்.

” இலங்கை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பூமி.. அந்தப் புண்ணிய பூமியை விட்டுவிட்டு அதற்கு எதிர்ப்பாக நீங்கள் எதைச் செய்தாலும் நாளைக்கு தமிழ் ஈழம் என்பது கனவாகவே போய்விடும் ”

” நாம் அந்தக் கனவை நனவாக்குவோம், பூமியை முதலில் கைப்பற்றுவோம், இஸ்ரேல் கைப்பற்றப்பட்டது, பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது அதுபோல இலங்கையில் உள்ள தமிழ் பூமியும் கைப்பற்றப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடன் பாடுபட்டுக் கொண்டிருங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்”

“இலங்கை நமக்கு சொந்தம் தமிழீழம் நமக்கு சொந்தம்..! ” என்று கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்து தற்செயலான கருத்தல்ல நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்ட ஓர் ஏமாற்று வியூகத்தின் வடிவமே.

எப்படி..?

01. இலங்கை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பூமி என்று கூறி, ஒன்றுபட்ட தாயகம் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்று மகிந்த ராஜபக்ஷவுக்கு முன் நாடகமாடக்கூடியவாறு ஒரு கருத்து இருக்கிறது.

02. தமிழ் நாட்டு தேர்தல் களத்தில் தமிழீழம் நமக்கு சொந்தம் என்று சீமான், வை.கோ கூறுவதைப்போலவே காங்கிரசும் கூறியிருக்கிறதே.. பிறகு எதற்கு காங்கிரசை எதிர்க்கிறீர்கள்..? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் களத்தில் இதையே உதாரணம் காட்டி பாமர மக்களை ஏமாற்ற முடியும்.

03. முதலில் நிலத்தை கைப்பற்றுங்கள் என்று சொல்லியிருப்பது மகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுங்கள் அதன் மூலம் ஒரு மாநில ஆட்சியை உருவாக்குங்கள் என்பதே எமது விருப்பம் என்று பொத்தாம் பொதுவில் வட இந்தியாவில் கருத்துரைக்க முடியும்.

04. இலங்கை என்பது தமிழீழம் அல்ல.. ‘

“இலங்கை என்ற புண்ணிய பூமிக்கு எதிராக கருத்துரைத்தால் தமிழீழம் என்பது கனவாகும் ”

அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்கு எதிராக கருத்துரைத்தால் தமிழர்களுக்கான தாயகம் என்ற அற்ப சொற்ப சலுகையையும் கனவாக்கி, ராஜபக்ஷவின் சிங்கள குடியேற்றங்கள் மூலமாக அனைத்தையும் அழிப்போம் என்ற சோனியா – மன்மோகன் சிங் எச்சரிக்கையையே நாம் சொன்னோம் என்று காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கற்பிதம் பண்ணவும் முடியும்.

” ஐயா.. இது சுதர்சன நாச்சியப்பன் சொன்னதல்ல சுதந்திரம் கிடைத்தவுடன் ஜவகர்லால் நேரு பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது இலங்கை என்பது இந்தியாவின் ஒரு மாநிலம் என்று கூறினாரே அதைத்தான் சொல்லியிருக்கிறார் நமது நாச்சியப்பன் ” என்று காங்கிரஸ் தனக்குள் மறைவாகக் கருத்துக் கொடுக்கும்.

கச்சதீவுதான் நமக்கு சொந்தம் என்கிறது அதிமுகவும், திமுகவும், ஆனால் நாமோ ஒருபடி மேலே போய் இலங்கைத் தீவே நம் தமிழருக்கே சொந்தம் என்கிறோமே.. இது எப்படியிருக்கு..?

அவர்களும் கச்சதீவை மீட்க முடியாது, நாங்களும் இலங்கையை மீட்க முடியாது.. நானும் நீயும் சோடி.. ஓடிப்பார்ப்போம் வாடி என்பதுதான் நாச்சியப்பன் கருத்து.

இந்தக் கோமாளித்தனங்களை நாம் ஏன் கவனிக்க வேண்டும்…?

இந்திய சர்க்கஸ் கோமாளிகளின் கையில் இலங்கைத் தமிழர்கள் பம்பரமாக சுற்றப்படுவது இன்னமும் நின்றபாடில்லை.. ஆகவேதான் கவனிக்க வேண்டும்.

இனி என்ன நடக்கும்..?

” பிரிவினைவாதத்தைத் தூண்டவில்லை ” என்ற மறுப்பறிக்கையை அமைச்சர் விடுவார், இந்தியன் எக்ஸ்பிரசில் வந்துவிட்டது.

அமைச்சரை கண்டிப்பாக காங்கிரஸ் பதவியில் இருந்து வெளியேற்றாது..

மகிந்த ராஜபக்ஷ இதற்கு எதிராக இதுவரை கருத்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அவருக்கு இந்த வசனக் கோர்வை அனுப்பப்பட்டு, அவரின் அனுமதி பெற்றே பேசப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு..

காரணம் இந்த வசனக்கோர்வை இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் போல நன்கு திட்டமிட்ட உருவாக்கமாகவே இருக்கிறது.

இதற்கிடையில்..

நாச்சியப்பனையும், நாராயணசாமியையும் வைத்து காங்கிரஸ் தமது டெசோ பித்தலாட்டத்தைவிட பெரிய பித்தலாட்டம் பண்ணுகிறதேயென்று பொருளற்ற வசன மன்னரான மு.கருணாநிதி சலித்துப் போய் நாளைக்கு இன்னொரு வசன விளையாட்டை விளையாட வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் தமிழருக்கு எதிராக செயற்படுகிறது என்று மு.கருணாநிதி சென்ற வாரம் வெளியிட்ட அறிக்கையும்..

தமிழக மீனவர்களையும் காங்கிரஸ் தமிழ் மக்களாக புறக்கணிக்காமல் இந்திய மக்களாக கருத வேண்டுமென்று அ.தி.மு.க பாராளுமன்றத்தில் சொன்னதையும் கருத்தில் கொண்டு..

எல்லாவற்றுக்கும் பொதுவாக காங்கிரஸ் வடிவமைத்த வசனக்கோர்வைதான் சுதர்சன நாச்சியப்பனின் பேட்டி..

இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால்..

ஈழத் தமிழன் இன்னமும் புண்ணாக்கு உருட்டிக் கொண்டிருப்பதாகவே இவர்கள் எடைபோட்டு வசனங்களை உருவாக்குவதுதான், சோகங்களில் எல்லாம் பெரும் சோகம்.

அலைகள்

575221_232030216951012_1390332851_n.jpg

1230046_232030186951015_263851661_n.jpg

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.