Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னைக்கு குடிநீர் வழங்க புதியதோர் நீர்த்தேக்கம்

Featured Replies

சென்னை நகரின் குடிநீர் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்தாவதாக நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

130912152817_chennai_water_public_304x17

ஒரு குடம் தண்ணீருக்கு காத்திருக்கும் மக்கள்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் இருக்கும் இரு பெரிய ஏரிகளை ஒன்றாக இணைத்து நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் 330 கோடி ரூபாய்கள் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு டி எம் சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று அரச தரப்பு கூறுகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மேம்படும் எனவும் அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உபரி நீரைத் தேக்க உதவும்
130912153215_chennai_water_lorry_public_

சென்னையில் குடிநீர் பிரச்சினை ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா நதியிலிருந்து, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னைக்கு தண்ணீர் வரும் போது, பூண்டி மற்றும் இதர நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தது போக உபரியாக உள்ள நீரை சேமித்து வைக்க இந்தப் புதிய நீர்த்தேக்கம் உதவும் எனவும், இது வரவேற்கத்தக்கது என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரும் நீரியல் வல்லுநருமான பேராசிரியர் எஸ் ஜனகராஜன்.

"ஒருங்கிணைப்பு தேவை"

திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான ஏரிகள் உள்ளன எனவும் அவற்றையும் இதே போன்று மேம்படுத்தினால் நீண்டகால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியும் எனவும் பேராசிரியர் ஜனகராஜன் மேலும் தெரிவித்தார்.

130912153407_metro_water_office_chennai_

எனினும் விநியோக கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், கசிவுகள் மூலம் நீர் விரயமாவதை தடுக்கவும் அரசு திட்டங்களை தீட்டி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தமிழோசையிடம் கூறினார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசிடம் ஒருங்கிணைந்த திட்டம் இல்லை எனவும் அது காலத்தின் தேவை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/india/2013/09/130912_chennai_water_newscheme.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.