Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலமாகும் அரச பயங்கரவாதம்! - கந்தரதன்

Featured Replies

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் - யாழ்.மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வன்னிப் பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் - சிறீலங்கா அரசும் அதனோடு இணைந்துள்ள கைக்கூலிகளும் தமது கையாலாகாத் தனங்களை மேலும் முனைப்போடு அரங்கேற்றி வருகின்றதாக தாயகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

arasa%20payankaravatham.jpg

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லங்கலட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ள கொடுமை சிறிலங்கா இனவாதத்தின் கோரமுகத்தை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு கொல்லங்கலட்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அப்பகுதியிலுள்ள மக்கள் குறித்த மண்டபத்தில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அவ்விடத்திற்கு ஆயுதங்களுடன் வந்த சிறீலங்கா இராணுவத்தினர், அங்குகூடியிருந்தவர் மீது தடிகள், கொட்டன்களால் சரமாரியாக தாக்கி அவர்களை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இராணுவத்தினரின் இந்த காட்டுமிராண்டித்தனத்தால் தாம் ஏற்பாடுசெய்த தேர்தல் கூட்டத்தை நடத்தமுடியாது போயுள்ளதாக கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பவ்ரல் அமைப்பினருக்கு தெரியப்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அமைப்பினர் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியவர்களுடைய வீடுகளிற்குள் புகுந்த சிறிலங்கா அரச ஆதரவாளர்கள் காடைத்தனம் புரிந்துள்ளனர். அத்துடன் குறித்த நபருடைய வீட்டின் பின்புறமாக இருந்த தோட்டத்தில் நின்ற வாழைகள் மற்றும் பயனுள்ள செடிகளை வெட்டி எறிந்து நாசம் செய்து தமது அடாவடிகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.

யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறிலங்கா அரச கட்சியினர் குறித்த பிரச்சாரக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியவருடைய வீட்டிற்குள் புகுந்தே இந்த காடைத்தனத்தை புரிந்துள்ளனர்.

இதனையடுத்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். வடக்குமாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா இராணுவத்தினரின் சிபார்சில் வேட்பாளராக்கப்பட்ட சிராஸ் என்பவருடைய ஆதரவாளர்களே மேற்படி காடைத்தனத்தினை புரிந்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தனக்குத் தெரிவித்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ். நாவற்குழி, தச்சன்தோப்புப் பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுட்டிருந்த  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் கஜதீபனின் ஆதரவாளர்கள் மீது சிறிலங்கா அரசின் கைக்கூலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிஷோர் (வயது 24) மற்றும் ராஜ்குமார் றஜிந்தன் (வயது 19) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை அவர்கள் பயணித்த வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது. வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய குண்டர்கள் சிங்களத்தில் கத்திக்கொண்டு வந்து எங்களைத் தாக்கினார்கள் என்று நாவற்குழியில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கள் வாகனத்திற்கு குறுக்கே தங்கள் வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினர். இதனால் எங்கள் வாகனம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அந்த வெள்ளை வாகனத்தில் வந்த பத்து வரையான குண்டர்கள் இரும்புக் கம்பிகளால் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் செய்வதறியாது ஓடினோம் என்றும் அவர்கள் சாவகச்சேரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறிலங்கா படையினரே உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தனங்கிளப்பில் பிரச்சாரம் நிறைவடைந்து நாவற்குழிக்கு திரும்பிய போது தச்சந்தோப்பு சந்தி காவலரணிலிருந்த படையினர் தங்களை எங்கே செல்கிறீர்கள் என்று விசாரித்ததாகவும் இதன் பின்னணியிலேயே வெள்ளை வானொன்றில் தங்களைப் பின்தொடர்ந்தவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவுப் பகுதியில் கூட்டமைப்பின் வேட்பாளர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் வீட்டின்மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அவர் குடும்பத்துடன் அருகில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்விற்கு சென்றவேளை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்தவாரம் புதன்கிழமை கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் பாடசாலை அதிபர் இளைஞர்கள் மீது, சிறிலங்கா இனவாத படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உருத்திரபுரம் கூழாவடிப்பகுதியில் சிறிலங்கா படைமுகாமிற்கு அண்மையில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞர்களை வழிமறித்த படையினர் அவர்களை பலமாக தாக்கியுள்ளதுடன் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த சிவநகர் பாடசாலை அதிபரையும் தள்ளிவிழுத்தித் தாக்கியுள்ளார்கள்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து குறித்த படையினரின் தாக்குதல் தொடர்பில் மக்கள் காவல்துறையில் முறையிட்டுள்ளதுடன் குறித்த படைமுகாமினை இடமாற்றுமாறும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிளிநொச்சியில் மகிந்த ராஜபக்சவின் அடியாட்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,  கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் இம்மாதம் ஆறாம் நாள் இரவு 10 மணியளவில் மகேந்திரன் விஜயேந்திரன் என்ற வர்த்தகர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைநத நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வெண்சுருட்டு (சிகரட்) கேட்ட ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கு அதனை வழங்க தாமதித்த காரணத்தால் சினிமாபாணியில் மேற்படி வர்த்தகரைக் கடுமையாகத் தாக்கிய மேற்படி ஆதரவாளர்கள் அவரது சட்டைப் பையில் இருந்த 43 ஆயிரம் ரூபா பணத்தையும் அபகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வைத்தியசாலைக் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச, ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு எம்.பி.சந்திரகுமார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி போன்றோர் தமக்கென அடியாட்களை வைத்திருக்கின்றனர். இவர்கள் மூலமாக கிளிநொச்சி மாவட்ட மக்களை அடக்கியாள முற்பட்டுவருகின்றதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உலகெங்கும் வாழ் தமிழ் உறவுகளே இது உங்களின் கவனத்திற்கு!

நீங்கள் ஓய்ந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிறிலங்கா இனவாதத்திற்கு சாதகமே.

நாம் சிந்திக்கும் நேரமல்ல ஒருமித்து செயற்படும் நேரம்!

(சூறையாடல்கள் தொடரும்)  

http://www.sankathi24.com/news/33396/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.