Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படையினரின் அடாவடித்தனங்கள் தாக்குதல்கள் விரட்டியடிப்புக்களை தாண்டி வடக்கில் கணிசமான வாக்களிப்பு ...

Featured Replies

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இணைப்பு 2

election1_CI.jpg

 

வடமாகாண சபைத் தேர்தலில் இன்று மதியம் வரையிலான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 22 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 29 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வவுனியாவில் 24 சதவீதமும், மன்னாரில் 30 சதவீதமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தல் வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது.  ஆனாலும் 70 வீதமானவர்கள் வரையில் வாக்களிக்காமல் முடங்கியிருப்பதால் தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக வாக்களிப்பில் 60 வீதமானவர்கள் வாக்களித்தால் மட்டுமே கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும் என கூறப்படுகிறது. 

பரவலாக தேர்தல் வன்முறைகள் தொடர்வதுடன் தேர்தலை குழப்புவதில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். 

வலிகாமம் வடக்கு மாதகல், ஊர்காவற்துறை தம்பாட்டி முல்லைத் தீவின் கொக்குத் தொடுவாய் கருநாட்டுக் கேணி, கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங் கண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் படையினரின் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் படைத்தரப்பால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேணை சாவகச்சேரியில் அங்கவீனம் உற்றவர்களை அழைத்துச் சென்ற தேர்தல் கண்காணிப்புக் குழுவான பவ்ரல் அமைப்பின் வாகனம் முகத்ததை மறைத்த மோட்டார் சைக்கிள் படையினரால் வழி மறிக்கப்பட்டு சாரதி கடுமையாகத் தாக்கப்பட்டு உள்ளார். ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் நேரடி ஆதரவுத் தனியார் தொலைக்காட்சி கூட்டமைப்பிற்கு சேறு பூசும் நடவடிக்கையை தொடர்ந்ததனை அடுத்து நேரடியாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று மதியம் வரை கண்டியில் 42 சதவீதமும், குநாகலில் 27 சதவீதமும், புத்தளத்தில் 20 சதவீதமும், நுவரெலியாவில் 35 சதவீதமும், மாத்தளையில்  35 சதவீதமும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி-பன்னங்கண்டி மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படை யினர் மற்றும் அரச அதரவு குழுக்கள் இணைந்து வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்

வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சூடு பிடித்துள்ள நிலையில் இன்று மதி யம் 12மணி வரை யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 22சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்ளிப்பு வீதம் அதிகரித்துள்ளபோதும் 70சதவீத வாக்காளர்கள் வீடுகளுக்குள் முடஙகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதல் வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபோதும், சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்தகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவு வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, வாக்களிப்பதையும் காண முடிந்தது. இதனிடையே பல பகுதிகளிலும் பகிரங்கமாக படையினர் வாக்களிக்க வந்த வாக்காளர்களை விரட்டியமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. இன்று காலை தென்மராட்சி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில், அங்கவீனர்களை வாக்களிப்பதற்காக ஏற்றிவரப்பட்டபோது படையினர் என நம்பப்படு பவர்கள் வாகனத்தின் சாரதியை கடுமையாக தாக்கியதுடன், வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களையும் தீத்துள்ளனர். இதேவேளை வலி,வடக்கு மற்றும் மாதகல் ஊர்காவற்றுறை தம்பாட்டி, கொக்கிளாய், கொக்குதொடுவாய், கிளிநொச்சி-பன்னங்கண்டி மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படை யினர் மற்றும் அரச அதரவு குழுக்கள் இணைந்து வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாக்களிக்க விடாது திருப்பியும் அனுப்பியுள்ளனர். இதேவேளை பிந்திய தகவல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில். நண்பகல் 29சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பரவலாக தேர்தல் நடவடிக் கைகளில் படையினர் தலையிடமாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் மீறி படையினர் வாக்களிப்பு நிலைய வட்டாரங்களில் உலவி வருவதாக  குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொல்லங்கலட்டி பகுதியில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் மாவைசேனாதிராசா வாக்களிக்கச் சென்றிருந்த சமயம்; அங்கு வாக்களிக்க வந்த ஏனைய வாக்காளர்களை புலனாய்வாளர்கள் என அடையாளப் படுதியவர்கள் அச்சுறுத்துவரை அவதானித்துள்ளார். 

பின்னர் விடயத்தை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த புலனாய்வாளர்கள் பொலிஸாரினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு விசாரணைக்குட் படுத்தப்பட்டிருக்கின்றனர். இதேபோன்று மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று நிலமைகளை நேரில் அவதானித்து வருகின்றனர். மன்னார் மாவட்டத்திலும் வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருவதாக தெரிவி க்கப்படும் நிலையில் வணபித ஒருவர் பொலிஸாரினால் வாக்குச்சாவடி பகுதியில் முறைகேடாக நடமாடியதற்றாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை மற்றுமொரு வணபிதா பொலிஸாரினால் தாக்கப்பட்டிருப்பதாக தெரிவி க்கப்படுகின்றது. 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96789/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.