Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் சிறப்புப் பார்வை சங்கதி24 செய்திகளுக்காக - தாயகத்திலிருந்து வீரமணி

Featured Replies

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு பெரும் வன்முறைகளுடன் தொடங்கி வன்முறைகளுடனேயே நிறைவடைந்துள்ளது. இந்த வன்முறைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என்று வடக்கிலுள்ள மக்கள் சர்வதேசத்தை நோக்கி கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.

யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டுகளிலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தன. ஆனால் இந்த தேர்தலை நடத்தினால் தன்னால் வெற்றிபெற முடியாது என்று உணர்ந்த சிறிலங்கா அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் பின்னடித்து வந்தது. ஆயினும், வடக்கில் தேர்தலை நடத்தி அங்குள்ள மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துமாறு சர்வதேசம் மகிந்த அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்களை விடுத்து வந்தது.

சுpறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வருகை தர மறுத்தமைக்கும் சிறிலங்காவில் இந்த மாநாட்டை நடத்த வேண்டாமென்று வற்புறுத்தல்கள் எழுந்தமைக்கும் சிறிலங்கா வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமையும் ஒரு காரணமாக அமைந்தது. இவையனைத்துக்கும் மேலாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையால் சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கு வழங்கிவந்த நிதி உதவிகள் பாதிக்கப்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே வடக்கு மாகாண சபைத் தேர்தலை இன்று 21 ஆம் திகதி நடத்துவதற்கு மகிந்த அரசாங்கம் இணங்கியது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடனேயே, இந்த தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெறவேண்டுமாயின் வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அவர்கள் தேர்தலில் குறுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தேர்தல் தினத்தன்று என்றாலும் வடக்கிலுள்ள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குமாறு கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் அவர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில், அனைத்துமே செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்த நிலையில் இந்த வடமாகாண சபைத் தேர்தலில் இராணுவம் தனது விசுவாசிகளை வேட்பாளர்களாக களமிறக்கியது. அவர்களுக்காக வன்முறைகள் நிறைந்த பிரசாரங்களை மேற்கொண்டது. சக வேட்பாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் மகிந்த ராஜபக்சவோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவோ இந்த விடயங்களில் எந்தவித அக்கறையும் எடுக்காமல் படையினரின் அராஜகங்களுக்கு பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலைமையின் காரணமாகவே படையினர் தேர்தல் பிரசார காலத்தில் பல வன்முறைகளை அரங்கேற்றினர். இறுதியாக கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் அனந்தி எழிலனின் வீடு மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தேர்தலுக்கு ஒரு நாள் இருக்கத்தக்க நிலையில் படையினரால் பெரியதொரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் பின்னராவது படையினரை முகாம்களுக்குள் முடக்காத மகிந்த அரசும் படைகளும் படையினரின் செயற்பாடுகளை நியாயப்படுத்தினர். அனந்தியின் வீட்டைத் தாக்கியவர்கள் இராணுவத்தினர் அல்ல என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

புடையினர் செய்த அட்டுழியங்களை கண்டுகொள்ளாததன் விளைவே இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலின் போது படையினர் வன்முறைகளை கட்டவிழ்;த்து விடகக் காரணமாக அமைந்தது. இன்றைய தேர்தலின் போது ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு முன்பாகவும் சிவில் உடை தரித்த படையினரும் படைப் புலனாய்வாளர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். இது மக்களின் சுதந்திரமான வாக்களிப்புக்கு தடையாக அமைந்தது. இவ்வாறு படையினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்ற கதை பரவியதால் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லப் பின்னடித்தனர்.

மேலும், இன்று காலைவேளையில் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் நீண்ட கால நம்பிக்கைக்குரியதாக இருந்த உதயன் பத்திரிகையையின் அச்சொட்டான பிரதியொன்றை படைப்புலனாய்வாளர்கள் அச்சிட்டு வெளியிட்டிருந்தனர். “அரசுடன் இணைந்தார் வேட்பாளர் அனந்தி: தேர்தலைப் புறக்கணிக்கிறது தமிழரசுக் கட்சி- சிந்தித்து வாக்களியுங்கள். வேண்டுகோள் விடுக்கிறார் மாவை சேனாதி ” என்று பிரதான தலைப்பிட்டு வெளியிடப்பட்ட மேற்படி பத்திரியைப் பார்த்ததும் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதைவிட இந்தச் அரசின் அனுசரணையுடன் இயங்கும் டான் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது. இதனால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

இதனை விட, தென்மராட்சியில் ஊனமுற்ற வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு ஏற்றி வந்த பஸ் ஒன்று சாவகச்சேரியில் வைத்து இராணுவத்தால் மறிக்கப்பட்டு சாரதி தாக்கப்பட்டதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருக்கின்றது. மேலும் வரணியில் கூட்டமைப்பு வேட்பாளர் சயந்தன் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் மக்கள் உச்சமாக வாக்களிப்பில் ஈடுபடும் நண்பகல் வேளை நடைபெற்றன. இதனால் ஆயிரக்கணக்கான வாக்காளர்;கள் வாக்களிக்கச் செல்லாமல் வீடுகளில் இருந்தனர்;.

இந்த நிலையில் இந்தத் தேர்தலில் யாழ்.மாடவட்டத்தில் வாக்களிப்பு வீதம் 67 ஆகப் பதிவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் இராணுவத்தினரின் வன்முறைகள், அச்சுறுத்தலகள் இல்லாவிட்டால் நிச்சயமாக 80 தொடக்கம் 85 வீதமான மக்கள் வாக்களித்திருப்பாhர்கள் என்று நம்பப்படுகின்றது. இதேபோன்றே கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இராணுவத்தினரின் வன்முறைகள் காரணமாக வாக்களிப்பு வீதம் குறைவடைந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலில் படையினரின் அச்சுறுத்தல்கள் இடம்பெற்றமையை கபே, பவ்ரல், மற்றும் சி.எம்.ஈ.வி போன்ற தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களே உறுதிப்படுத்தியுள்ளன. ஏன், வன்னியில் பவ்ரல் கண்காணிப்பு நிறுவனத்தின் உத்தியோகத்தர்களே தாக்குதல்களுக்க இலக்காகியிருக்கின்றனர்.

இந்த தேர்தலில் படையினரால் கட்டவிழ்;த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளனர். மாவை சேனாதிராஜா எம்.பி ஒரு இராணுவப் புலனாய்வாளனை கையோடு பிடித்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றார். கிளிநெர்சசியில் சிறிதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் இந்தத் தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு சர்வதேம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்று வடக்கு மாகாண மக்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். தேர்தலை நடத்தி வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைய நிலைநிறுத்துமாறு சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுத்தது சர்வதேசம்.

ஆனால், தேர்தல் நடத்தப்பட்ட போதிலும் பெயரளவிலேயே இது சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தால் நடத்தப்பட்ட தேர்தலாக உள்ளது. ஆனால், முற்றுமுழுதாக இது இராணுவத்தால் நடத்தப்பட்ட தேர்தலாகவே தமிழ் மக்களாலும் தேர்தல் கண்காணிப்பாளர்களாலும் நோக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த தேர்தல் தொடர்பில் சர்வதேச நாடுகள் என்ன முடிவை எடுக்கப்போகின்றன? என்ன நிலைப்பாட்டில் உள்ளன என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று வடக்கு தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

http://www.sankathi24.com/news/33453/64/24/d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.