Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழியாச்சுடர்கள் - தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு - யேர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழியாச்சுடர்கள் - தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு - யேர்மனி

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.

DSC_0012.JPG

உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான். உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்னறிலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.

அந்த வகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று  யேர்மனி Frankfurt நகரத்தில்  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது . நிகழ்வில் தியாகி திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து எழுச்சி நடனங்கள் , நாடகம் என தாயக விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக கலைநிகழ்வுகள் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் அனைத்து மக்களும் உறுதி தளராமல் எமது தாயக விடுதலையை நோக்கி பயணிப்போம் என தமிழர்களின் தாரக மந்திரத்தை உரத்துக் கூறி நிகழ்வை முடிவுசெய்தனர் .

DSC_0019.JPG

DSC_0046.JPG

DSC_0073.JPG

DSC_0017.JPG

 

DSC_0021.JPG

DSC_0033.JPG

DSC_0044.JPG

DSC_0089.JPG

DSC_0095.JPG

DSC_0098.JPG

 

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் , சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!!

 

 

நன்றி - பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபன் நினைவாக.... யேர்மனியில் ESSEN, FRANKFURT, LANDAU நகரங்களில் நடைபெற்ற எழுச்சி நிகழ்வுகள்

 

 

 

http://www.pathivu.com/news/27211/57/ESSEN-FRANKFURT-LANDAU/d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.