Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் கிழக்கில் வேரூன்றும் வஹாபி தீவிரவாதம் – இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் கிழக்கில் வேரூன்றும் வஹாபி தீவிரவாதம் – இந்திய ஊடகம்
[ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 06:30 GMT ] [ கார்வண்ணன் ]


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர், ஷபாஸ் ஷெரீப்பின் ஆதரவுபெற்ற, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின், பாதுகாப்பாக பிரதேசமாக சிறிலங்கா வேகமாக மாறிவருகிறது என்று, அனைத்துலக தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சியைக் கண்காணித்து வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மூவர், சிறிலங்காவில் லஷ்கர் தொய்பா - குறிப்பாக, பின்தங்கிய பகுதிகள் மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளில், ஒரு தளத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய தகவல்கள் வழங்கினர்.

பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய, பாகிஸ்தான் இராணுவத்தினர், இந்த இடங்களுக்கு, சுற்றுலா என்ற போர்வையில் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்காவில், ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக லஷ்கர் இ தொய்வின் முயற்சிகளுக்கு, பாகிஸ்தான் இராணுவம் உதவி வருகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இவர்கள் சிறிலங்காவில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளும் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்று கூறும் ஆய்வாளர்கள், இந்தியாவிலும், ஐரோப்பாவிலும், தாக்குதலைகளை நடத்துவதற்கான ஒன்று கூடும் இடமாகவும், திட்டமிடும் இடமாகவும், அவர்கள் சிறிலங்காவைப் பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

சிறிலங்கா, உணவில் பன்றி இறைச்சியைப் பயன்படுத்தும், தாராளமாக மதுசாரம் கிடைக்கும் நாடாகவும், மேற்கத்திய பாணி உடைகளை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அங்கு ஆண்களும் பெண்களுமான, வஹாபி விருந்தினர்களின் வருகை அதிகரித்துள்ளது.

அந்த விருந்தினர்கள், விடுமுறைக்காக வரவில்லை, ஏனைய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை ஏனையோருடன் இணைந்து வகுப்பதற்காகவே வருகிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

லஷ்கர் இ தொய்பா, தனது பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு, போலி நாணயம் ஊடாக, மும்பை, லக்னோ நகரங்களில் செயற்படும், தீவிரவாதக் குழுக்களின் மூலம் நிதி வழங்குகிறது.

எனவே, இந்தியாவுக்குள் போலி நாணயத்தாள்களைக் கடத்துவதில், நேபாளத்துடன் சிறிலங்காவும் இணைந்திருப்பது ஆச்சரியமானது அல்ல.

சிறிலங்காவில் இருந்து போலி நாணயத்தாள்களை விநியோகிப்பது இடைமறிக்கப்பட்டுள்ளதாக, இந்தியத் தூதரக மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக லஷ்கர் இ தொய்பா, இந்தியாவில் விநியோகங்களுக்கான உள்ளூர் ஆதரவுத் தளம் ஒன்றை உருவாக்குவதற்காக, சுமார் இரண்டு டசின் சிறிலங்கா குடிமக்களை வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்புச் செய்துள்ளதாகவும், தீவிரவாத குழுக்களைக் கண்காணிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில், பெருமளவு புலம்பெயர் இலங்கையர்கள் உள்ளனர்.

கிழக்குக் கரையோரத்தில், சித்தாண்டிக்குடி தொடக்கம் கோமாரி வரை, அரபு மயமாகி விட்டது.

குறிப்பாக, 2008இல் மும்பையில் நிகழ்ந்த 26/11 தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியாவின் சுற்றுப்புறத்தில் உள்ள லஷ்கர் இ தொய்பாவின் முதன்மை வலயமான, நேபாளத்தில், புலனாய்வு மற்றும் தீவிரவாத முறியடிப்புச் செயற்பாடுகள் தீவிரமடைந்ததை அடுத்து, வஹாபி மதகுருக்கள், பல்கிப் பெருகியுள்ளனர்.

அடிப்படைவாத சக்திகளுடன் உள்ளூர் மக்கள் உறுதியாக உள்ளதால், மியான்மரைப் போன்று சிறிலங்காவில் வஹாபி - பெளத்த கலவரம் வெடிக்கலாம் என்ற கவலை உள்ளதாக, மூத்த உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புத்தகயாவில் றொகிங்யா குழுக்களின் தீவிரவாத தாக்குதல், தேரோவாத பௌத்தத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள சிறிலங்காவையும் பாதித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் எச்சங்களுக்கு எதிரான இறுதிப்போரில், இந்திய, சிறிலங்கா தீவிரவாத முறியடிப்பு செயற்பாட்டாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, லஷ்கர் இ தொய்பா, மற்றும் அதன் கிளைகள் மூலம், வஹாபி தீவிரவாதம் புதிய முனை ஒன்றைத் திறந்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வளர்ந்து வரும் அச்சுறுத்தலை நன்று அறிவார், எதிர்நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர் பணித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

மிதவாத இஸ்லாமியர்களையும், இந்துக்களையும் மட்டுமன்றி, பௌத்தர்களையும் கூட வஹாபி தீவிரவாதம் இலக்கு வைப்பதை, சிறிலங்கா அவதானித்துக் கொண்டிருப்பதாக, இன்னொரு அதிகாரி சொல்கிறார்.

சிறிலங்கா அரசியலில் தீவிரமாக செயற்படும் தமிழ்த் தலைவர்கள் கூட, அவர்கள், ஆலயங்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கவலை கொண்டுள்ளனர்.

எனினும், இதுவரை லஷ்கர் இ தொய்பாவும் அதன் உள்ளூர், மூலவளங்களும், எதிர்காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தே கவனம் செலுத்தி வருகின்றனர்.

லஷ்கர் இ தொய்பா, சிரியாவில் உள்ள சில ஆயுதக்குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நாசகாரச் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க உதவியுள்ளது என்கிறார் ஆய்வாளர் ஒருவர்.

மேலும், லிபிய மற்றும் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்கவும், உதவியுள்ளது என்கிறார் அவர்.

அமெரிக்காவும், பிரித்தானியாவும், இந்த இரண்ட நாடுகளிலும் உள்ள குழுக்களுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் கடைசியில் லஷ்கர் இ தொய்பாவிடம் சென்று சேரும் என்று அவரும், அவரது நண்பர்களுக்கும், கருதுகிறார்கள்.

13 ஆண்டுகளுக்கு முன்னர், கந்தகாரில் இந்தியன் எயர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது, தீவிரவாதக் குழுக்கள் நேபாளத்தை ஒரு தளமாகப் பயன்படுத்துவது குறித்து இந்திய அதிகாரிகளை எச்சரிக்கை கொள்ளச் செய்தது.

சிறிலங்காவில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் இருந்து லஷ்கர் இ தொய்பா தாக்குதலுக்குத் திட்டமிடுவதற்கு முன்னர், இந்தியப் பெருங்கடலின், சமீபத்திய தீவிரவாத தளம் குறித்து, இந்திய அரசாங்கம் வழித்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

ஆங்கில வழிமூலம் – Sunday guardian


http://www.puthinappalakai.com/view.php?20131007109208

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.