Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணத்தில் காணிகளை மக்களுக்கு மீளவழங்குவதற்கான பொறுப்பு யாரிடம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் காணிகளை மக்களுக்கு மீளவழங்குவதற்கான பொறுப்பு யாரிடம்?
[ செவ்வாய்க்கிழமை, 08 ஒக்ரோபர் 2013, 07:23 GMT ] [ நித்தியபாரதி ]


வடக்கு மாகாணத்தின் பொது நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.

இவ்வாறு The Sunday Leader ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் என்.சத்தியமூர்த்தி* குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

வடக்கு மாகாண சபையை நிர்வகிப்பதற்கு முதன் முதலாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரத்தைத் தருமாறு கோரமுடியாத நிலையில் தனது ஆட்சியை அமைக்க வேண்டியுள்ளது.

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்கப்படாது சிறிலங்காவின் மத்திய அரசாங்கமே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததானது நாட்டில் அரசியல் மீளிணக்கப்பாடு ஏற்படுவதற்குத் தடையாக காணப்படுகின்றது.

இந்நிலையில் வடக்குமாகாண சபையின் அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏனைய அரசியல் நிர்வாகத்தைப் போன்று தனது பொறுப்புக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இது தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மிகவும் நேர்த்தியாகச் செய்துமுடிக்க வேண்டியுள்ளது.

மாகாண சபைகளுக்கு காணி தொடர்பான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானமானது தவறானது. 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்கின்ற தீர்ப்பானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள இனவாத உணர்வைக் கொண்ட விமர்சகர்கள், தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுக்கு எதிராகச் செயற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்ற போதிலும், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பகட்ட பிரதிபலிப்பைக் காண்பிக்காது அமைதி காத்து வருவதானது பாராட்டத்தக்கதே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது வடக்கு மாகாண சபைக்கான அமைச்சுக்களை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதில் கவனம் செலுத்துவதாலோ அல்லது முதன் முதலாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபையைக் குழப்பக்கூடாது என்றோ கருதி இவ்வாறான விமர்சனங்களைக் கருத்திலெடுக்காது அமைதி காக்கலாம்.

வடக்கு மாகாண சபையை நிர்வகிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசியல் நிர்வாகத்தை மட்டும் கற்றுக் கொள்ள முடியாது. கூட்டமைப்பானது தற்போதிலிருந்து அரசியல் ரீதியான பொறுப்புக் கூறுதல் மற்றும் வகைகூறுதல் போன்றவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

மாகாண சபை அரசாங்கமானது சலுகைகளுக்கு அடிபணியாது, சில விடயங்களில் மத்திய அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு இசைந்து நடக்காது, மக்களின் விருப்பிற்கேற்ப செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் அதிகார ஆட்சி நடைபெறவும் வழிவகுக்கக் கூடாது.

உச்ச நீதிமன்றின் தீர்ப்பானது 'தமிழ் மாகாணம்' என்பதைக் கவனத்திற் கொள்ளவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தால் மட்டுமே காணி தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது உறுதிப்படுத்துகிறது. அரசியல் யாப்பின் பிரகாரம், சிறிலங்காவின் நிறைவேற்று அதிபர் காணி தொடர்பான தீர்மானத்தை தனியொருவராக நின்று முன்வைக்க முடியும். இத்தீர்மானத்தை மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவானது மீளஉறுதிப்படுத்தியுள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதம நீதியரசரான மோகன் பீரிஸ் காணி தொடர்பான தீர்மானங்களை சிறிலங்கா அதிபரின் அனுமதியின் பின்னரே வடக்கு மாகாண சபை நிறைவேற்ற முடியும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 'காணி ஆணைக்குழுவே' மாகாணங்களுக்கு காணி தொடர்பான நடவடிக்கைகளை நிறைவேற்றும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட காணி தொடர்பான அதிகாரமானது சிறிலங்கா அதிபராலேயே சிபாரிசு செய்யப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காணி தொடர்பான அதிகாரத்தை சிறிலங்கா அதிபர் எப்போது எவ்வாறு வரையறுப்பார் என்பது இங்கு கேள்விக்குரிய ஒன்றாகக் காணப்படுகிறது. இது தொடர்பில் காணி ஆணைக்குழுவிடம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இதில் அரசியல் செல்வாக்குச் செலுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கதே. இந்நிலையில் சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினை என்பதும் அரசியற் தீர்வின் ஊடாகவே தீர்க்கப்பட முடியும். இங்கு அரசியற் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். இதேவேளையில், இதில் சட்டம், அரசியல் யாப்பு மற்றும் நீதிமன்றங்கள் போன்றன தமது பங்களிப்பை மேற்கொள்கின்றன.

போருக்குப் பின்னான காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது, 'காணி' அதிகாரங்கள் தொடர்பாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உடன்படிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது.

காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும். மாகாணங்களுக்கு காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு சிறிலங்கா அதிபர் அல்லது சிறிலங்கா அரசாங்கமானது அரசியல் யாப்பின் பிரகாரம் காணி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டிய தேவையுள்ளது. அதாவது மாகாணங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் காணிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

எந்தவொரு நாட்டிலும் காணி தொடர்பான தீர்மானத்தை அந்த நாட்டின் அதிபர் அல்லது நாட்டின் தலைவர் முடிவெடுக்க முடியும். ஆனால் சிறிலங்காவில் நாட்டின் தலைவரே அரசாங்கத்தின் தலைவராகவும் காணப்படுகிறார். இவரே அரசியற் கட்சியின் அல்லது ஆளும் கூட்டணியின் தலைவராகவும் காணப்படுகிறார். இந்நிலையில் அதிபருக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாகப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த அதிகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவின் உச்ச நீதிமன்றம் வரையறுத்துக் கொள்ளவேண்டும்.

மூன்று பத்தாண்டுகளாக யுத்தமும் வன்முறையும் இடம்பெற்ற வடக்கு மாகாணத்தின் பொது நிர்வாகத்தை சிறிலங்கா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்கள் காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களில் இந்த நிலை வேறுபட்டுள்ளது.

இவ்வாறு காணியற்றவர்களுக்கு நிலங்களை வழங்குவதற்கு முன்னர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் காணிஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இது ஒரு அரசியல் பிரச்சினையாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் மத்தியில் ஆளும் கட்சியா அல்லது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாகாண அரசாங்கமா காணிகளை இந்தக் காணிகளை வழங்குவது என்பது கேள்விக்குரியதாக உள்ளது. தமிழர்கள் அல்லாத மாகாணங்களில் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியானது மாகாண சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தின் நிர்வாகமானது கூட்டமைப்பின் கைகளில் உள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை மக்களுக்கு மீளவழங்குவதற்கான பொறுப்பை யாரிடம் கையளிப்பது என்கின்ற கேள்வி முடிவின்றி இன்னமும் தொடர்கின்றது.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தம்மை யார் ஆளவேண்டும் என்பதை வடக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் நிரூபித்துள்ள நிலையில், சிறிலங்கா அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தை ஆளுவதற்கான காணி அதிகாரத்தை வழங்காதுவிடின் தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பது தொடர்ந்தும் பறிக்கப்பட்டதாகவே இருக்கும்.

இது தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் அரசியற் தலைமை மீதும் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாகவே கருதப்படும். இந்நிலையில் சிறிலங்காவில் தொடரும் இனப்பிரச்சினையில் உண்மை என்பது பொய்த்துவிட்டதாக உணரப்படும்.

*The writer is Director, Chennai Chapter of the Observer Research Foundation, the multi-disciplinary Indian public-policy think-tank headquartered in New Delhi.


http://www.puthinappalakai.com/view.php?20131008109217

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.