Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய தலைவர் பதவிக்காக சம்பூர் அனல்மின்நிலையத்தை இந்தியாவுக்கு கப்பமாக கொடுத்த மகிந்த - ஜே.வி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Anura_seithy-2-150.jpg

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கி கொள்ள இந்தியாவுக்கு கப்பமாக சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலைய உடன்படிக்கையில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; சம்பூர் உடன்படிக்கையில் மூலம் இலங்கை மின்சார சபைக்கு வருடாந்தம் 763 கோடி ரூபா இழப்பு ஏற்படும். அத்துடன் இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு தலா ஆயிரத்து 525 ரூபா இழப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

  

சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையானது நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மின்சக்தி உரிமையானது மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் மிகவும் முக்கியமான வலுசக்திகள் இரண்டு இருக்கின்றன. ஒன்று மின்சாரம் மற்றது எரிபொருள். இந்த எரிபொருள் சக்தியின் விற்பனை மற்றும் விநியோக பங்கில் 33 வீதமான பங்கு இந்தியாவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இதற்கு அடுத்த மிக முக்கியமான மின்சக்தியாகும். மின் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் முக்கிய பங்கை வகிப்பது இலங்கை மின்சார சபையாகும்.

 

எனினும் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்டமூலம் காரணமாக தனியாரும் அந்த துறையில் பிரவேசிக்க இடமளிக்கப்பட்டது. இது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான அழுத்தம். இதற்கு அமையவாக செயற்பட்டு சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் முதல் தடையாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இலங்கையில் நிர்மாணிக்கப்படும். இதன் ஊடாக இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையின் தேசிய பாதுகாப்பில் தலையிட்டு அழுத்தங்களை கொடுக்க முடியும்.

 

சம்பூர் அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 500 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது. இந்த காணிகள் யாருடையது?. போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிலம் இலங்கை அரசினால் கைப்பற்றபட்டது. இந்த காணிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களுக்கு அவற்றை வழங்கியிருக்க முடியும். சம்பூரில் தமது சொந்த காணிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை திருகோணமலையில் உள்ள முகாம் ஒன்றில் சிறை வைத்து விட்டு 500 ஏக்கர் காணியை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்குகிறது. இந்த காணிகளின் உண்மையான உரிமையாளர்கள் இலங்கையில் வாழும் மக்கள் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94668&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அதனாலென்ன??! பிற்பாடு சிறீலங்காவின் (அ)நீதி மன்றத்தில் ஒரு வழக்குப் போட்டு முடக்கலாம்தானே.. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.