Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கிராமிய அபிவிருத்தியில் பொதுமக்களின் பங்கேற்பு அவசியம்”- வல்வெட்டித்துறையில் உலக வங்கி ஆலோசகர் தெரிவிப்பு.

Featured Replies

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் புறநெகும (நெல்சிப்) திட்டத்தில், 2013ம் ஆண்டில் செய்யப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும், 2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும், உலக வங்கியைச் சேர்ந்த நிபுணத்துவ ஆலோசகர்களான திரு.சரத் விக்கிரமரட்ண, திரு.எம்.டி.ஏ. உறரோல்ட், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து நெல்சிப் திட்டத்திற்குப் பொறுப்பான சமூக அபிவிருத்தி அலுவலர் திரு.ஞானவேல்ராஜா ஆகியோரைக் கொண்ட குழுவினர் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்தனர்.

கடந்த வருடம் நெல்சிப் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வேலைகளில் ஒன்றான நெற்கொழு வைரவர் ஆலய முன்வீதி, ஆதிகோயிலடியில் சிதம்பரா வடக்கு கடற்கரையோரமாக அமைக்கப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் தார் வீதி வேலைகளையும், வல்வெட்டித்துறைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் இரு சந்தைத் தொகுதிகளையும் பார்வையிட்ட குழுவினர், அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகளை மதிப்பீடு செய்தனர்.

அதேவேளை, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த சமூகக் கண்காணிப்புக் குழுவினருடனும், பொதுமக்களுடனும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களையும், எதிர்காலத் தேவைகளையும் கேட்டறிந்தனர்.

மக்கள் சந்திப்புகளில் உலக வங்கிக் குழுவினருடன், உப தலைவர் திரு.க.சதீஸ் மற்றும் உறுப்பினர்களான திரு.ம.மயூரன், திரு.க.ஜெயராஜா, திரு.கோ.கருணானந்தராஜா, திரு.பொ.தெய்வேந்திரன், திருமதி.இ.கைலாஜினி ஆகியோருடன், செயலாளர் திருமதி.க.வாசுதேவன், உள்ளுராட்சி உதவியாளர் திருமதி நந்தினி, தொழில் நுட்ப அலுவலர்களான திரு.க.சதாகரன், திரு.எஸ்.பரந்தாமன், சமுகக் கண்காணிப்பு அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர்களது விஜயத்தின்போது, நெல்சிப் செயல் திட்டம் தொடர்பான அலுவலகக் கோவைகள், நிதி அறிக்கைகள் என்பனவற்றைப் பார்வையிட்டதுடன், சம்பந்தப்பட்ட விடய அலுவலர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் அவர்களால் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நகராட்சிமன்ற மகாநாட்டு மண்டபத்தில், வல்வெட்டித்துறை நகர பிதா திரு.ந.அனந்தராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், உலக வங்கியின் நிபுணத்தவ ஆலோசகர் திரு.சரத் விக்கிரமரட்ண மற்றும் திரு. எம்.டி.ஏ.உறரோல்ட் உப தலைவர் திரு.க.சதீஸ் மற்றும் உறுப்பினர்களான திரு.ம.மயூரன், திரு.க.ஜெயராஜா, திரு.கோ.கருணானந்தராஜா, திரு.பொ.தெய்வேந்திரன், திருமதி.இ.கைலாஜினி செயலாளர் திருமதி.க.வாசுதேவன், உள்ளுராட்சி உதவியாளர் திருமதி நந்தினி, தொழில் நுட்ப அலுவலர்களான திரு.க.சதாகரன், திரு.எஸ்.பரந்தாமன், சமுகக் கண்காணிப்பு அலுவலர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் உலக வங்கியின் செயற்பாடு மற்றும் புறநெகும எனக் கூறப்படும் வடக்குக் கிழக்கு உள்ளுர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாகவும், அதன் செயற்பாடு மற்றும் நிதிக் கையாளுகை தொடர்பாகவும் நிபுணத்துவ ஆலோசகரான திரு.சரத் விக்கிரமரட்ண கருத்துத் தெரிவிக்கும்போது,

“கிராமிய மட்டங்களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், உலக வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு பெருமளவு மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாக வழங்குகின்றது. ஆனால், அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அவற்றின் தேவை அடிப்படையில் நிதியை மானியமாக வழங்குவதால், இந்த நிதியைப் பயன்படுத்தும் பொழுது, அதற்கான அபிவிருத்தி வேலைகளில் மட்டுமல்லாது, அவற்றை முறையாகப் பராமரிப்பதிலும் மக்களின் பங்களிப்பு அவசியமாகின்றது.

இங்கு வந்து பார்வையிட்டபொழுது, அபிவிருத்தி வேலைகள் யாவும் மிகத் துரிதமாக நடைபெறுவதுடன், இத்திட்டம் தொடர்பாக பொது மக்கள் மிகுந்த அறிவுடையவர்களாகவும், விழிப்பாகவும் இருக்கின்றனர். அதேவேளை தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவேண்டுமென்பதில் உறுப்பினர்களதும், பொது மக்களினதும், அலுவலர்களினதும் பங்களிப்பு மிகச் சிறப்பாக உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

அதற்காக நகர சபை தலைவருக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மற்றும் அலுவலர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தற்பொழுது நீங்கள் எதிர்பார்த்தது போன்று உங்களுக்கு சிறந்ததொரு மாகாண சபை அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், உங்களுடைய நகரத்திற்குத் தேவையான அபிவிருத்திக்கான நிதியை மாகாண சபையினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு அரசாங்கமும், உலக வங்கியும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கின்றது. நெல்சிப் திட்ட வேலைகள் யாவும் எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் முற்றுப் பெறுமாயினும், வட மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வடமாகாண முதலமைச்சருக்கு, அதனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்குமாறு கோரிக்கை விட்டால், அது தொடர்பாக உலக வங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உலக வங்கிக் குழுவினர், செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நிகழ்த்திய பின், தொண்டைமானாறு ஆற்றங்கரை ஓரமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் வரை புறநெகும திட்டத்தின் கீழ், இடம்பெறும் தார் வீதி அமைப்பு வேலைகளையும், தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தையும் பார்வையிட்டு அதன் செயற்பாடுகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

புதிய சபை பொறுப்பேற்ற பின்னர், இது உலக வங்கிக் குழுவினரால் வல்வெட்டித்துறைக்கு மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.

www.radarnews.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.