Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தும் செயல்

Featured Replies

தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தும் செயல்

ஆசிரியர் தலைப்பு

Saturday, 19 August 2006

தமிழர் தாயகத்தின் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கான போக்குவரத்து பாதைகள் யாவும் மூடப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரினவாதத்தில் ஊறி நிற்கின்ற மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு பக்கம் இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அதே வேளை மறுபுறம் திட்டமிட்ட பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தி மக்களைக் கொடுமைப்படுத்தும் இந்த நடவடிக்கை குறித்து சர்வதேச சமூகம் அக்கறையற்று இருக்கின்றதாகவே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் தற்போது வடக்கில் போர் மூண்டுள்ள ஒரு சூழல் காணப்பட்ட போதும் கூட இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை.

இந்த நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கையை அரசு நிராகரிக்கவில்லை என்றால் தற்போது மேற்கொண்டு வரும் பாதை அடைப்பு செயலானது மிக மோசமானதொரு சம்பவமாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த மூன்றாம் கட்ட ஈழப்போரின் போது வட பகுதிக்கு சிறிலங்கா அரசு திட்டமிட்ட பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் அந்த பொருளாதாரத் தடையை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தற்போது மீளவும் பொருளாதாரத் தடையை சிங்கள அரசு ஏற்படுத்தியது மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக பாதைகளை மூடி அணைத்து மக்களையும் பாதிப்படையச் செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி கடந்த மூன்றாம் கட்ட ஈழப்போர் கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் படை ஆக்கிரமிப்புப் பகுதிக்கும் இடையில் மக்கள் போக்குவரத்து இருந்தது. ஆனால் இன்று அதுவும் போர் நிறுத்தம் நடைமுறையிலுள்ளதாகக் கூறப்படும் இன்றைய சூழலில் இவ்வாறு வீதிகளை மறித்து மக்களின் போக்குவரத்தைத் தடை செய்திருப்பது சிறிலங்கா அரசின் பாரிய மனித உரி மை மீறல் என்பது மட்டுமல்ல மிகக் கொடூரத்தனமான செயலையும் மேற் கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. போரினால் பாதிப்புற்று மிக வும் வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களே படுவான்கரைப் பிரதேச மக்க ளாகும்.அன்றாடம் உழைத்து குடித்தனம் நடத்தும் மக்கள் தான் அதிகமாகவுள்ளனர். ஆனால் தற்போது வீதிகள் மூடப்பட்டுள்ளதால் இந்தக் குடும்பங்களுக்கு மிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி கறுத்தப்பாலம், வவுணதீவு பாலம், பட்டிருப்புப் பாலம், கிரான் பாலம், சித்தாண்டி சந்தனமடு வீதி ஆகிய வீதிகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் மண்முனைத் துறை, அம்பிளாந்துறையூடான நீர்வழிப் படகுப் பாதைப்போக்குவரத்தினையும் படையினர் தடை செய்துள்ளனர். இதனால் பொது மக்கள் படை ஆக்கிரமிப்புப் பகுதிக்குச் சென்று வர முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களிலுள்ள பொருட்கள் முடிவடைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி வைத்திய சேவையினை மக்கள் பெற முடியாத நிலை காணப்படுவதுடன் எரிபொருட்கள் உட்பட அனைத்து வகையிலும் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். வடக்கில் மோதல் நடைபெறுகின்றது. அதன் காரணமாக யாழ் ஏ.9 வீதியை மூடிய தாகப் படைத்தரப்பு அல்லது அரசாங்கம் நியாயம் கூறினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகளை மூடுவதற்கான காரணம் என்ன?

எனவே இன்று தமிழர் தாயகத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் பாதை மறிப்பு தொடர்பாக சர்வதேச சமூகம் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.போர் நிறுத்தப்பட்டு மீளவும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுவது அவசியம் என சர்வதேச சமூகம் வலியுறுத்திய போதும் இவ்வாறு சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டிருக்கும் மிக மோசமான மிலேச்சத்தனமான நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி மக்களின் போக்குவரத்துக்களை மீள வழமை நிலைக்குத் திரும்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்துக்குள்ளது. அத னை சர்வதேச சமூகம் விரைபுபடுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு

http://www.battieelanatham.com/newsite/ind...=1285&Itemid=36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.