Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 32 காரைக்கால் மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

Featured Replies

18-fishermen-boats-600.jpg

நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

 

எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். தற்போது மீனவர்கள் அனைவரும் திரிகோணமலையில் தங்க வைகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று காலையில் கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் உள்ளதால் ஒருவேளை அவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கக்கூடுமோ என்று அஞ்சப்படுகிறது.

http://tamil.oneindia.in/news/tamilnadu/sri-lankan-navy-arrests-32-fishermen-from-karaikkal-185538.html

வடமாகாண கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்கள் கடற்றொழில் பற்றிய தாற்பரியமும், அறிவும், அனுபவமும், ஈடுபாடும் அற்ற நிலையை எடுத்துக் காட்டுவதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

 

கடற்றொழில் அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் கூறிய  'இந்திய மீனவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்க கூடாது' என்ற கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

வடமாகாண கடற்றொழில் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினரை  சந்தித்த போது, இந்திய மீனவர்கள் கடல் எல்லை தெரியாமல் எமது கடற் பிரதேசத்திற்குள் வருகின்றனர். எமது கடல் வளங்களை அழிப்பதற்கு வரவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடயம் உண்மைக்குப் புறம்பானது. அத்துடன், இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் முன்னர் கடற்றொழில் சமூக தலைவர்கள், அங்கத்தவர்களிடம் கலந்தாலோசித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தால், ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.

வடமாகாண கரையோரங்களுக்கு அண்மையில், வன்னி நிலப்பரப்பிற்கு அண்மித்த கடற்பிரேதசமான பாலைதீவு, காரைநகர், மாதகல் மற்றும் வடமராட்சி கடற்பிரதேசங்களிலும் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அம்மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் தாங்கள் அறியாமல் இருப்பது கடற்றொழிலாளர்கள் மீதும், அவர்களது நல்வாழ்க்கை மீதும் தாங்கள் கொண்டுள்ள அக்கறையினை வெளிப்படுத்துகின்றது.

இந்திய மீனவர்கள் எமது கடற் பிரதேசத்தில் அத்துமீறி பிரவேசித்து இழுவைப்படகைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதன் மூலம் எமது மீனவர்களின் பல லட்சம் பெறுமதியான வலைகள் அழிக்கப்படுவதையும், அதேவேளை இந்திய மீனவர்கள் இழுவைப்படகு மூலம் எமது கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவார்களாயின் எமது கடல்வளம் முற்றாக அழிவடையவுள்ளதுடன், 30 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் விரைவில் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வருமென தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து ஆயிரக்கணக்கான எமது மீனவர்கள் யாழில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவரும் இவ்வேளையில், வடமாகான மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சரின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக்கைகளினால், அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதகமான நிலை ஏற்படுவதற்கு சந்தர்ப்பமாக அமையும்.

எனவே, எதிர்காலத்தில் எமது மீனவ குடும்பங்களின் நலனில் அக்கறைகாட்டி, எமது மீனவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வலுவூட்டும் வகையில், இந்திய இழுவைப்படகின் அத்துமீறலை தடுப்பதற்கு இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறும் மீனவர் சமூத்தினர் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.