Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கூடுவார்கள் ஆனால் கூட்டமைப்பல்ல.. பேசுவார்கள் ஆனால் பொதுமுடிவல்ல.. ஏசாதையுங்கோ இதுதான் TNA"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கூடுவார்கள் ஆனால் கூட்டமைப்பல்ல.. பேசுவார்கள் ஆனால் பொதுமுடிவல்ல.. ஏசாதையுங்கோ இதுதான் TNA"

28 அக்டோபர் 2013

குமரன் கார்த்திகேயன்

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உத்தியோகபூர்வமாக கேட்டதா என்பதல்ல தற்போதைய பிரச்சனை, பெருவாரியான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் நான் கேட்கிறேன் படை அதியாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி பொதுவான ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்' என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு சவால் விடுத்துள்ளார்.

வடக்கின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாக தெரிவானோருக்கு நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்த  கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற மாகாணசபையின் முதலாவது அமர்வில் கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய சீ.வீ விக்னேஸ்வரன் படை அதிகாரி ஒருவர் ஆளுநராக இருப்பது யுத்தத்தின் பின்னரான மீள் கட்டுமானம், மீள்குடியேற்றம் மற்றும் இன நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஆரோகியமான வகையில் பங்களிக்காது என்பதனால் தற்போதைய ஆளுநர் மாற்றப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறான கோரிக்கையையே முன்வைக்கவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அந்தப் பதிலுக்கு மீண்டும் சவால் விடுத்துள்ள சீ.வீ. விக்னேஸ்வரன் வடக்கு மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட நான் ஆளுநரை மாற்றும்படி கேட்கிறேன் அதற்கமைவாக ஆளுனர் மாற்றப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன் பாதுகாப்புச் செயலருக்கு வழங்கிய உடனடப் பதிலடி பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. எனினும் இந்த பதிலுக்கு பின்னால்  ஒரு சந்தேகம் தொக்கி நிற்கிறது.  ஏற்கனவே கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாகச் சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளதையும்  இங்கு நினைவு கூரவேண்டும். மேலும் அரசாங்கம் கூட்டமைப்பில் உள்ள தனிநபர்களையும் கட்சிகளையும் பிரித்தாள முயற்சி செய்து வருவதை யாவரும் அறிவர்.  

ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பிரித்தாளும் தந்திரத்தை  சிங்கள அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள் நன்றாகப் பயன்படுத்தக் கூடியவர்கள்  என்பதைக் கடந்த காலவரலாறு புலப்படுத்தி நிற்கிறது.

அரசியற் தலைவர்களயும் போராளிகளையும் தம்பக்கம் இழுத்துகொண்டு தமிழ் மக்கள் மீது ஒடுக்கு முறையைப் பிரயோகிப்பதில் அவர்கள் என்றும் வல்லவர்கள்.

கூட்டமைப்பின் பலமான வெற்றிக்குப் பின் தோன்றிய  இக்கட்டான நிலைகளைத் தாண்டி அடுத்தகட்ட முன்னேறிப் பாயும் நடவடிக்கைக்கு ஆட்சியாளர்கள் தம்மைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் வேறுபட்ட கட்சிகளிடையேயும் தனி நபர்களிடையேயும், மென்போக்குக் கொண்டவர்கள் என்றும்  வன்போக்குக் கொண்டவர்கள் என்றும் இரு வகையினரை அவதானிக்க முடிகிறது. இந்த இரு பிரிவினருக்குள்ளும் முரண்பாடுகளை வலுக்கச் செய்யும்  சூழ்நிலைகளை ஏற்படுத்துவதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது,

இந்த நிலையில் ஒரு அமைப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரே குரலில் சொல்ல வேண்டிய விடயங்களை   உதிரியாக தமக்குத் தோன்றிய படிக்கு தனித்தனியே பிரிந்து நின்று  கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான  கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு என்ன என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இது குறித்து தெளிவான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவைசேனாதிராசா பொதுநலவாய மகாநாட்டில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்பு பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளாது எனத் தெரிவித்துள்ளனர். பா. அரியநேந்திரனின்  தனது முகப்பக்கத்தில் கீழ் வருமாறு தெரிவித்துள்ளார். (பொதுநலவாயமாநாட்டை தமிழ் தேசியக்கூட்டமைப்பு புறக்கணிப்பது எனவும், அனைத்து நாட்டுத்தலைவர்களுக்கும் விரிவான அறிக்கை அனுப்பவும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளது - அரியம்-)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான  குழப்பம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளமை அதன் அமைப்பொழுங்கைக் கேள்விப்படுத்தும் ஒன்றாகியுள்ளது. இக்குழப்பம் அரசாங்கத்திற்கு நன்மை தருவதாகவே இருக்கும். மக்களுக்கு அவநம்பிக்கை தருவதாக இருக்கும். 

ஆளுநரை மாற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிடவில்லை என கோத்தாபய கூற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டதா இல்லையா என்பதற்கு அப்பால் 'நான் கேட்கிறேன் ஆளுநரை மாற்றும்படி என நல்லூரில் சீ.வீ விக்னேஸ்வரன் கோதாபயவிற்கு பதில் சொல்லி இருப்பது இன்னும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த வல்லது என்பது  சட்டவல்லுனரான முன்னை நாள் நீதிபதி கனம் சீ. வீ அவர்களுக்கு விளங்காததா?

வடமாகாண சபை என்பது  இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அமைய இலங்கை அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் அலகு.  தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் அலகாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாகாண சபைமுறைமை தொடர்பாக தமிழ் புத்திஜீவிகள் தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன. விடுதலைப்புலிகளும் இதனை நிராகரித்திருந்தனர். எனினும் முள்ளிவாய்காலுக்குப் பின்னர் ஏற்பட்ட  இக்கட்டான நிலமை காரணமாக இன்று வேறு வழியின்றி விமர்சனங்களுடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட சீ. வீ அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அவரின் தனிப்பட்ட முகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அல்ல. அவரின் முகத்தின் மீது தேர்தல்காலத்தில் படிந்திருந்த தமிழ்த்தேசிய முகத்திற்கு கிடைத்த வாக்குகள்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளுநரை மாற்றச் சொல்லி கேட்கவில்லையே எனக் கோத்தாபாயா கூறியதற்கு, இன்று நல்லூர் கூட்டத்தில் சீ.வீ விக்னேஸ்வரன்  எப்படிப் பதிலளித்திருந்தால் அது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் பதிலாக இருந்திருக்கும்?

'வட மாகாண முதலமைச்சராகிய நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மக்களின் பெரும்பான்மை  வாக்குகளைப் பெற்றே தெரிவானேன். எனவே நான் ஆளுநரை மாற்றும்படி கேட்டால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலான தமிழ் மக்களின் சார்பிலான கோரிக்கையே'

ஒரு முதலமைச்சராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் மக்களின் ஆணையை பெற்றவன் என்ற அடிப்படையிலும் தான் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்துகிறேன் என அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அப்படிக் கூறவில்லையே....

இலங்கை அரசாங்கத்தின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கிடையில் நேர்மையான கைச்சுத்தமான சட்ட வல்லுநராக, சிறந்த நீதியரசராக இருந்த அனுபவங்களை மட்டும் கொண்டு நின்று பிடிக்க முடியாது மக்களின் நலன்களில் நின்று கூட்டுணர்வுடன்  சிந்திக்கும் அரசியல்  வழியை தெரிவு செய்யவேண்டும் கடந்த கால அரசியல் தவறுகளை நன்கு தெரிந்து அவற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் முன்நகர வேண்டும்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரயநேந்திரன் திரு விக்னேஸ்வரன் அவர்களுக்கு தனது முகப்பக்கத்தில் அரசியற்பாடம் நடாத்தியிருந்தார்.

அக்குறிப்பு கீழேயுள்ளது.

ariam.jpg

முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான வரலாறு தெரியாவிட்டால் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டு விக்கி தெரிந்து கொள்ள வேண்டும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனை கூறியிருந்தார்.

இந்த விடையம் கூட ஒன்றை   இங்கு தெளிவாகப் புலப்படுத்துகிறது.  கூட்டமைப்புள் முடிவுகளை  அதி உயர்பீடத் தலைவர்களாக உருவெடுத்துள்ள முத்தலைவர்கள் எடுக்கிறார்கள். அல்லது அது முதலமைச்சர் தனியாக எடுக்கும் முடிவாக அமைகிறது.  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட உங்களுக்கு சமூக வலைத் தளங்களினூடாகவே ஆலோசனை கூறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பது தெளிவாகிறது.

இங்கே தமிழரசுக் கட்சியாக அந்தக் கட்சிக்குள் இளையவர்களாக தம்மை வெளிப்படுத்தி முன்னேறிவரும் சிவஞானம் சிறீதரன் மற்றும் பா. அரியநேந்திரன் முதலானோர் தமது தனிப்பட்ட மக்கள் பலத்தை கூட்டமைப்பிற்கு நிரூபித்து வருகிறார்கள்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தனது பலத்தை நிரூபித்த சிவஞானம் சிறிதரனின் உழைப்பு வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அந்த உழைப்பை கூட்டமைப்பில் தனது இருப்பிற்கான அல்லது தனது சொந்த நலனிற்கான பேரம்பேசும் சக்தியாக மாற்ற முனையக்கூடாது அந்தச் சக்தியை மாகாண அமைச்சுக்களை தன்னால் கொண்டுவரப்பட்ட பிரதிநிதிகளுக்கு பெற்றுக் கொள்வதற்காகவோ, கூட்டமைப்பிற்குள் தனக்கு பிடிக்காதவர்களை ஓரம் கட்டுவதற்கோ பயன்படுத்தாமல் மாறாக கூட்டமைப்பின் தலைமை அல்லது மாகாணசபையின் தலைமை தமிழ் மக்களின்  நியாயமான அரசியற் தடத்தில் இருந்து மாறிச் செல்ல முற்படுகின்ற போது அதனைத் தடுத்து நிறுத்தும் சக்தியாகப் பயன்படுத்த வேண்டும்.

அதுபோலவே கிழக்கில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் அரியநேந்திரனும் குறுகிய அரசில் சித்து விளையாட்டுகளுக்குள் தன்னை ஈடுபடுத்தாமல், ஒரே கூட்டுக்குள் இருப்பவர்களை விரட்டுவதில் காலம் கழிக்காமல், அரசியல் வேறுபாடுகளை களைந்து சொந்த நலன்களைத் தூக்கி எறிந்து கூட்டமைப்பில் தொடரும் முரண்பாடுகளை களைந்து முன்னோக்கிய பயணத்தை தொடர முனைய வேண்டும்.

சிறீதரன்  அரியநேந்திரன் மற்றும் அவர்களை ஒத்தவர்களும்  வெறுமனே தமிழ்த் தேசியம் என்ற சொல்லாடலுக்குள் சித்து விளையாட்டை விளையாடி மக்களை கொதிநிலையில் வைத்து அரசியல் செய்வது நீண்ட கால நோக்கில் சாதியமில்லை என்பதை உணரவேண்டும்.

30 வருடகால ஆயுதப் போராட்ட அரசியற் பேரவலம் தற் போக்கான முடிவுகளின் விளைவுகளைச் சுட்டி நிற்கிறது. துணிவான தெளிவான முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பது  உண்மையே. ஆனால் அந்த முடிவுகள் கூட்மைப்பைப் புறந்தள்ளி ஒரு சிறு குழுவினாலோ அல்லது தனி நபர்களினாலோ எடுக்கும் ஏதேட்சாதிகாரமான முடிவுகளாக இருக்கக் கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதில்லை என ஒட்டு மொத்தமாக முடிவு செய்திருப்பின் அதற்கு முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனும் ஏனையவர்களும் கட்டுப்பட்டவர்கள். அவ்வாறில்லாவிடின் கூட்டமைப்பின் தலைவரும் முதலமைச்சரும் தமது நிலைப்பாட்டை மர்மங்களை நீடிக்க விடாமல் தெளிவுபடுத்த வேண்டும்.

பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வது  தொடர்பாக என்றாலும் சரி ஆளுனரை மாற்றுவது தொடர்பாக என்றாலும் சரி முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான வரலாற்றை யார் எப்படிக் கற்பிப்பது என்பது தொடர்பாக என்றாலும் சரி  எதுவாயினும் சரி ஒன்றுகூடி சனநாயக ரீதியாக ஆழமாக விவாதித்து ஒரு முடிவை வந்தடையுங்கள். பின்னர் அதனை வெளிப்டையாக முறையான ஊடக மகாநாட்டில் அறிவியுங்கள். அதை விட்டு விட்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு உயர்பீட முத்தலைவர்களின் முடிவாக தனியாகவும், தமிழரசுக் கட்சியின் முடிவு தனியாகவும், ஏனைய கட்சிகளின் முடிவுகள் தனியாகவும், அல்லது முதலமைச்சரின் முடிவு தனியாகவும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருவது உங்கள் அரசியல் ஒற்றுமையின்மையின் வெளிப்பாடே.

இது ஆபத்தானதும் கூட. இதனைத்தான் இந்த அரசாங்கம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98199/language/ta-IN/article.aspx

சரி சரி சித்தார்த்னுக்கு என்ன பதவி வேணுமாம் globaltamilnewsகாரரே?. உண்மையை அவித்து விடுங்கோ. சும்மா விக்கியரா சுத்தி குடுமாறி பொழிந்து உங்கடை கதயை மார்ததேங்கோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.