Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும் – எமது குடும்பங்கள் குடிய அமர்த்தப்படவுள்ளன'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும் – எமது குடும்பங்கள் குடிய அமர்த்தப்படவுள்ளன'
28 அக்டோபர் 2013


'இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாது – பிரிகேடியர் நிஸங்க' - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-


army%20jaff2_CI.jpg
 
வலி. வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்பட உள்ளன. விரைவில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாகும். அதன் பின்னர் எமது படையினரது குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட உள்ளன. இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாதென தெரிவித்தார் பிரிகேடியர் நிசங்க. வலி.வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் 513 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான அவர் பத்திரிiகாயளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அதிகாரி கடைமையிலிருந்து விலகி சென்றுள்ளார். அவரது இடத்திற்கு இன்னொருவர் நியமிக்கப்பட்டதும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியாகும். அதன் பின்னர் பாதுகாப்பு வலயம் என்ற பேச்சுக்கே இடமிருக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வலி.வடக்கு பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்களது விடுகள் படையினரால் உடைக்கப்படுவது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்த பத்திரிகையாளர்களை மிரட்டுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளியே பத்திரிகையாளர்கள் நேரில் பார்த்திருக்க படையினர் மும்முரமாக பொதுமக்களது வீடுகளை உடைத்துக் கொண்டிருந்துள்ளனர். பத்திரிகையாளர்கள் சிலர் அதனை புகைப்படம் பிடிக்கவும் முற்பட்டுள்ளனர். இவ்வேளையில் அனைவரையும் சுற்றிவளைத்துக் கொண்ட படையினர் அவர்களை தாக்க முற்பட்டுள்ளனர். இவ்வேளை அங்கு சென்றிருந்த பிரிகேடியர் நிசங்க இத்தகவல்களை வெளியிட்டார்.

பத்திரிகையாளர்களது கமராக்கள் பறிக்கப்பட்டு அதிலிருந்த படங்கள் படையினரால் அழிக்கப்பட்டிருந்தது. ஒலிப்பதிவுகளும் அழிக்கப்பட்டது. அதே வேளை பத்திரிiகாயளர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் நிசங்க இச்சம்பவம் தொடர்பாக செய்திகளை வெளியிட்டாலோ புகைப்படங்களை வெளியிட்டாலோ நடக்கப்போவதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எனக்கு பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தெரியும். அவர்களை எவ்வாறு கையாள்வதென்பதும் தெரியுமெனவும் அவர் மிரட்டியுள்ளார்.

பெரும்பாலான வீடுகள் எந்தவித சேதமுமின்றி காணப்பட்டன. இவை கூட ஓடுகள் மற்றும் பொருத்துக்கள் களற்றப்பட்ட பின்னரே கனரக வாகனங்கள் மூலம் இடித்தழிக்கப்பட்டிருந்தது. படை அதிகாரிகளது நேரடி மேற்பார்வையில் இவை இடித்தழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98241/language/ta-IN/article.aspx

வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவு
Written by Tamil   //  November 1, 2013   //
Mahinda_CIயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினரால் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்

இந்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனிடம் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

நேற்று காலை சம்பந்தன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார்.

வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவது யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இதன்போது சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதனையடுத்தே ஜனாதிபதி யாழ்ப்பாண கட்டளை தளபதியுடனும், கொழும்பில் உள்ள இராணுவத் தளபதியுடனும் தொடர்பு கொண்டு இராணுவத்தின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார் என்று லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் விரைவில் இது விடயத்தில் தாம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

http://news.tamilstar.com/archives/52437

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.