Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் 6 ஆவது ஆண்டு வீர வணக்க நிகழ்வும் கேணல் பரிதி அவர்களின் உருவப்படம் பொறித்தல் நிகழ்வும் பிரான்சில் 01.11.2013

Featured Replies

1433_335445546600225_79422374_n.jpg

 

 

TCC

(facebook)

  • தொடங்கியவர்

1453536_645582945494581_1272378030_n.jpg

 

(facebook)

  • தொடங்கியவர்

பிரான்சில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 6ஆம் ஆண்டு நினைவுகூரலும், கேணல் பரிதியின் உருவச் சின்னம் பொறித்ததும் இடம்பெற்றது

பிரான்சில் பிரிகேடியர் சு.ப. தமிழச்செல்வன் அவர்களின் 6 வது ஆண்டு நினைவுகூரலும், கேணல் பரிதி அவர்களின் உருவச்சின்னம் பொறித்தலும் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவாக பிரான்சில் லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

திருவுருவச்சிலைக்கு முன்பாக 01.11.2013 வெள்ளிக்கிழமை காலை பிரான்சு வாழ் மக்களால் நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரினை லாக்கூர்னோவ் மாநகரசபை உதவி முதல்வர் மியூரியல் தொன்தோறோ அவர்கள் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை லெப். சின்னவீரனின் தாயார்.

ஏற்றி வைத்தார். பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலையை 18.03.2009 ல் மாவீரரான கப்ரன் முல்லைமதி,03.03.2009 இரணைப்பாலத்தில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட கப்டன் இளங்கோவன் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரர்.

அணிவித்தார்.

தமிழ்ச்செல்வனின் நிழற்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் துணைவியார் மலர்மாலை அணிவிக்க கேணல் பரிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர். மக்கள் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

உதவி முதல்வர் அவர்கள் கேணல் பரிதி அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டயத்தை திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்கத்தலைவர்கள் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய லாக்கூர்னோவ் உதவி முதல்வர் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றும் போது கண்ணீரோடும் கவலையோடு அந்ததாய் ஏற்றினார் என்றும் தானும் ஒரு பெண் என்றபோது பிள்ளையை பறி கொடுத்த பாசம் என்ன வேதனை என்ன என்பதை தான் அறிவேன் என்றும் உங்கள் பிள்ளைகளின் உறவுகளின் பிரிவானது உயர்வானது. என்றும் அதன் பயனை தமிழ்மக்கள் நீங்கள் நிச்சயம் அடைவீர்கள் என்றும் அதற்கு என்று பெரும் பலமாக பிரெஞ்சு மக்கள் நாங்கள் இருப்போம் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தமிழின உணர்வாளரும், கேணல் பரிதியின் நண்பரும், மாநகரசபை உறுப்பினருமாகிய திரு. அந்தோனியோ றுசெல் அவர்கள் உரையாற்றியிருந்தார். அதனோடு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றியிருந்தார். பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் 2007 பிரான்சுக்கு வரப்போகும் சந்தோசச்செய்தியில் இருந்த போது அவர் வீரச்சாவடைந்த செய்தி வந்தது பற்றியும், இதே போலவே கேணல் பரிதி அவர்களும் இறுதியாக 2011 நவம்பர் 1ம் நாள் இந்நினைவு நிகழ்வே அவர் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வு என்றும் இருவருக்கும் இருந்த ஒற்றுமைகள் பற்றி பலதை குறிப்பிட்டிருந்தார்.

ஆகையால் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவச்சிலையோடு கேணல் பரிதி அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டயம் இன்று நிறுவப்படுகின்றது என்றும் கூறியிருந்தார். கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்து ஓராண்டுகள் ஆகிவிட்ட நிலையில்

அவரின் படுகொலைக்கு காரணமானவர்களை வெளிக்கொண்டு வரவேண்டுமெனக்கோரி எதிர் வரும் 8ம் நாள் ஐரோப்பிய மக்களுடன் இணைந்த நீதிக்கான மாபெரும் பேரணி பற்றியும், அதனோடு ஒட்டிய பிரான்சில் உள்ள சங்கங்கள், பொது அமைப்புகள் இணைந்து இன்று முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் காலை 10.00 மணிமுதல் மாலை 17.00 மணிவரை நடைபெறும் அடையாள உண்ணாமறுப்புப்போராட்டம் பற்றியும் அதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

காலநிலை மாற்றத்திற்கும் மத்தியில் இடைவிடாத மழைக்கும் மத்தியில் குழந்தைகள், பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் உறுதியுரையுடன் நினைவு நிகழ்வு நிறைவு பெற்றது.

 

TCC

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.