Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்ததே இந்தியாதான்’ ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

Featured Replies

4th November 2013

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்ததே இந்தியாதான் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.

சேலம் காந்தி ரோட்டில் உள்ள மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 சாக்குப்பைகளில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு 4 பேர் கும்பல் தப்பிச்சென்றது. மேலும் அந்த கும்பல், ‘திராவிடர் விடுதலை கழகம்‘ என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற துண்டு பிரசுரங்களையும் வீசிச்சென்றனர்.

இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சாக்குப்பைகளில் தீ வைத்து வீசுவதற்கு தூண்டுதலாக இருந்ததாக திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியை கடந்த 2 –ந் தேதி அதிகாலை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியை சந்தித்தார். அவருடன் சேலம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தாமரைக்கண்ணன், வக்கீல் அணி செயலாளர் ஆனந்தராஜ், கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி ஆகியோரும் சென்றனர். காலை 11.15 மணிக்கு சென்ற வைகோ சுமார் 30 நிமிட நேரம் கொளத்தூர் மணியை சந்தித்து பேசிவிட்டு 11.45 மணிக்கு சிறையை விட்டு வெளியில் வந்தார்.

பின்னர் சிறைவாசலில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் ஜெயலலிதா அரசு ஏதேச்சதிகார அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களை மிரட்டும் வகையில் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

சேலம் வருமானவரித்துறை அலுவலகத்திற்குள் கோணிப்பையில் பெட்ரோல் ஊற்றி வீசப்பட்டது. இதற்கான முதல் தகவல் அறிக்கையில்( எப்.ஐ.ஆர்.) யாருடைய பெயரும் இல்லை. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது என நாங்கள்தான் வீசினோம் என திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 4 பேர் கூறியுள்ளனர். அங்கு குண்டு வீசவில்லை.

ஆனால், கடந்த 1–ந் தேதி நள்ளிரவு கொளத்தூர் மணி வீட்டிற்கு சென்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துளியும் சம்பந்தம் இல்லாத கொளத்தூர் மணி மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதன் மூலம் அ.தி.மு.க. அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும், தற்போது அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கும் முரண்பாடு உள்ளது. தற்போதைய தீர்மானத்தில் இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதான் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் பித்தலாட்ட அரசியலை அ.தி.மு.க. செய்து வருகிறது என்கிறேன். இப்படி அச்சுறுத்தல் காட்டி மிரட்டுவது நடக்காது. இந்த அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. பொய்வழக்குகளையும், ஏவப்படுகிற அடக்கு முறைகளையும் கால்தூசாக மதிப்போம்.

இலங்கை தமிழர்கள் மீது அ.தி.மு.க. அரசுக்கு உண்மையான உணர்வு கிடையாது. இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் முத்துக்குமார் உள்பட 19 பேர் தீக்குளித்து மாண்டனர். ஆனால் ஒரு இரங்கல் கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை.

16 சிங்கள வெறியர்களால் இலங்கையில் இசைப்பிரியா கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தை சேனல்–4 தற்போது வெளியிட்டுள்ளது. இதே சேனல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ படத்தை குறுந்தகட்டில் ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டோம். ஆனால், தற்போது வெளியிடப்பட்ட இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரம் உண்மைபோல தோன்றுகிறது என மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏன், இதுவரை ப.சிதம்பரம் கோமாவிலா இருந்தார்.

இலங்கைக்கு நீங்கள் கொடுத்த ஆயுதங்களும், ராடரும்தானே விடுதலைப்புலிகளை கொன்று குவிக்க காரணமாக இருந்தது. அவர்களின் 16 கப்பல்களை மூழ்கடித்தீர்களே. இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவார் என்பதால், அதை தடுக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்படுகிறது. அதன் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேவை தப்பிக்க வைப்பதற்காக கமலேஷ் சர்மா மூலம் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்ததே இந்தியாதான். பின்னர் எப்படி இந்தியா அதில் பங்கேற்காமல் தவிர்க்கும். அப்படியே இந்தியா பங்கேற்றாலும் ஒரு பயனும் கிடைக்காது. இலங்கையில் சுதந்திர தமிழகம் மலர வேண்டும். அதற்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

ஏற்காடு தொகுதியில் போட்டியிடுவீர்களா? பதில் சொல்ல வைகோ மறுப்பு

சேலம் மத்திய சிறை வாசலில் பேட்டி அளித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம், நிருபர்கள் சூழ்ந்துகொண்டு, ஏற்காடு இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா? என்பதை தெரிவிக்க வேண்டும் என கேட்டனர்.

அப்போது வைகோ, இனி எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன் எனக்கூறி விட்டு வேகமாக நடந்து காரில் ஏறிக்கொண்டார்.

முன்னதாக வைகோ பேட்டியின்போது, ‘1976–ம் ஆண்டு மிசா காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தேன். பின்னர் என்னை சேலம் மத்திய சிறைக்கு மாற்றினார்கள். அண்ணா பிறந்த நாளின்போது விடுதலை செய்யப்பட்டேன்.

கிட்டத்தட்ட 20 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மத்திய சிறைக்கு வந்துள்ளேன். கொளத்தூர் மணியை கைது செய்ததன் மூலம் சேலம் மத்திய சிறைக்கு வரும் வாய்ப்பை அ.தி.மு.க. அரசு தேடித்தந்துள்ளது‘‘ என்றார்.
 

http://newsalai.com/details/tamil-nadu-news-11-04-2013-Sri-Lanka-the-country-has-committed-to-hold.html#sthash.ObKm3vTh.dpbs

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.