Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளி வாய்க்கால் ஜோதி ஓட்டமும் முடக்கம்

Featured Replies

1385899_552018004876293_1871942506_n1-301457655_539495032802987_1306990368_n-3001463089_539492889469868_899761799_n-300x

நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைதுபோலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜோதி தொடர் ஓட்ட பயணம்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

வருகிற 8-ந் தேதி தொடர் ஓட்ட பயணம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்றடைய இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் சார்பாக கூடலூரில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் கூடலூர் காந்தி திடலில் நேற்று மதியம் 12 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்கபேரவை மாநில தலைவர் தா.வெள்ளையன் தலைமை தாங்கி ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை பிரகாஷ் வரவேற்றார். 

ஜோதியை எடுத்து கொண்டு ஓட்டம்

பின்னர் ஜோதியை ஏந்தியபடி தா.வெள்ளையன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் ஓட்டம் மேற்கொள்வதற்காக பழைய பஸ் நிலையம் வந்தனர். அப்போது தடையை மீறி பயணம் செய்வதாக போலீசார் அவர்களை கைது செய்தனர். 

இந்த சமயத்தில் ஜோதியை எடுத்து கொண்டு மாணவர்கள் கூட்டமைப்பினர் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் மாணவர் கூட்டமைப்பினர் பின்னால் ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக மாணவர்களின் கூட்டமைப்பினரை மடக்கி பிடித்து அவர்களின் கையில் இருந்த ஜோதியை கைப்பற்றினர். 

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் மாநில தலைவர் தா.வெள்ளையன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்,, இளைஞர் பாசறை பாலசுப்பிரமணியன், மாணவர் பாசறை சூரியதீபன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கேதீசுவரன், நிர்வாகிகள் பைந்தமிழ்பாரதி, ஜார்ஜ், கார்மேகம், பொன்.மோகனதாசு உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

http://tamilworldtoday.com/home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.