Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான பாக்கிஸ்தானின் புதிய தூதுவர்

Featured Replies

பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் புலனாய்வுத்துறையினர் இந்தியாவக்கு எதிரான தமது புலனாய்வு வேலைகளை, ஸ்ரீலங்காவில் மிகவும் ஆழமாக்கும் பணிகளில் முனைப்பாகச் செயல்படுகின்றனர்.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரும் முன்னர் இராணுத்திலும் புலனாய்வுத்துறையிலும் தேர்ச்சி பெற்ற மற்றுமொரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னைய தூதுவர் பஷீர் வாலி மொகமட் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றை தெளிவாக தெரியப்படுத்துகின்றது. அதாவது, பஷீர் வாலி மொகமட்டினால் சீராக புடம்போட்டுள்ள புலனாய்வுக் களத்தினை வழிநடத்துவதற்கான முயற்சியின் ஒரு கட்டமே, இந்த ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஷெசாட் அஸ்லாம் சவுத்திரியின் நியமனம் என்பது சர்வதேச இராஜதந்திர நகர்வுகளை உற்றுநோக்குபவர்களுக்கு தெளிவாகப் புரிந்துள்ளது.

ஸ்ரீலங்காவின் பாதுகாப்புப் படைகளில் தேர்ந்து எடுக்கப்பட்ட 200 சிறப்புப் படையினர் தற்போது பாக்கிஸதானில், அமெரிக்க போர் வல்லுநர்களின் மேற்பார்வையில் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தேவையான பயிற்சிகளை பெறும் நோக்கிலும், ஸ்ரீலங்கா வான்படையினருக்கு உதவுவதாக கூறிக்கொண்டு பத்து முதல் பதினைந்து வரையிலான பாக்கிஸ்தானின் வான் படையினர் தற்போது கொழும்பில் தங்கியுள்ளனர்.

அண்மையில் தமிழர் தலைநகரை அண்மித்த பகுதிகளிலும் மற்றும் இதயபூமியிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்கள் இதற்கு சான்று பகிர்கின்றன. சிங்கள வான்படையின் விமான ஓட்டுநர்களால் மிகவும் துல்லியமாக இலய்குகளைத் தாக்கியழிக்கும் வல்லமை இல்லவே இல்லை என்பது கடந்த கால யுத்தங்களின் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வகையில், புதிதாக பதவியேற்றிருக்கும் தூதுவர் பற்றி தமிழர்களாகிய நாம் அறிந்து வைத்திருத்ததல் மிகவும் நல்லது.

ஏனெனில், எமது பெரும்பான்மையான தமிழ்ச் சமூகத்தில் தோன்றிவரும்; குறைபாடுகளில் ஒன்று, உலக நாடுகள் குறித்த ஆழமான அறிவின்மையாகும்.

எந்த நாடு எமது விடுதலை குறித்து கரிசனை காட்டுகின்றது அல்லது காட்டுவது மாதிரியான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை இனம்காணுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

மேலும், தமிழ் ஊடகத்துறையினரும் செய்திகளை தேடிச் சென்று, ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களை அலசுவது இன்றைய காலங்களில் குறைந்து செல்வது மிகவும் ஒரு ஆபத்தான நிலையினை எமக்கு கோடிட்டுக் காட்டுகின்றது.

புதிய தூதுவர், ஷெசாட் அஸ்லாம் சவுத்திரி பலோச்சிஸ்தானின் விடுதலை வீரர்களுக்கு எதிராக இடம்பெற்ற விமானத் தாக்குதல்களுக்கு பொறுப்பெடுத்தவர் என்பது இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

இவ்வாறான ஒரு அதிகாரியை பாக்கிஸ்தான கொழும்புத் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை இந்தியாவிற்கு ஓர் எச்சரிக்கை வெளிப்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு பாக்கிஸ்தான் தனது படை வல்லுனர்களை கொடுத்து வருவதாக இந்தியா கருதி பாராமுகமகமாகச் செயல்படுமானால,; இது இந்தியாவின் அழிவிற்காக அமெரிக்க – பாக்கிஸ்தானிய புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சதி வலைப்பின்னல் என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.

எனினும், இந்தத் தூதுவரின் நியமனம் தமிழர்களின் போராட்டத்தின் திசையை எந்த வகையிலும் மாற்றம் செய்யமாட்டாது. மாறாக, தமிழர் போராட்டம் புதியதொரு பரிமாணத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தப்போகின்றது. சர்வதேச போர் வல்லுநர்களின் புத்தகங்களில் புதிய போர்க்கலை அத்தியாயத்தையும் பதியப்போகின்றது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தகவல்களைப் படிக்கின்றபோது, புலிகளுக்கும், இலங்கையளரசுக்கும் அப்பால், அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், இந்தியாவிற்கிடையே பனிப்போர் நடைபெறுவதாகவே எனக்கு புலப்படுகின்றது.

இந்தியா, 3 வருடத்திற்கு முன்பு சொன்ன, அமெரிக்க உற்பத்திகளில், நஞ்சுக்கலவை என்ற விடயம், திரும்பத் தூசு விடயத்தைப் பார்க்கின்ற போது அப்படித் தோன்றுகின்றது. பிஜேபி அரசு அதை அப்போது அமழ்த்தி வாசிக்கவே முற்பட்டது. அது பிஜேபியின் கொள்கையாக இருக்க முடியாது. அப்போது இந்திய அமெரிக்க உறவு என்பது நல்ல நிலையில் இருந்ததே காரணமாகும்.

ஆனால் இப்போதைய நிலையைப் பார்க்கின்றபோது, அதில் ஏதோ விரிசல் விழுந்து விட்டதைத் தான் உணர முடிகின்றது. இந்தியாவின் அணுஆயுதம் தொடர்பாக, அமெரிக்கா அரசு சமீபத்தில் சட்ட மூலம் இயற்றியால் ஏற்பட்ட சர்ச்சசையின் தொடர்;ச்சியாக இதன் விரிசல் விழுந்திருக்கலாம்.

அதுவும், அமெரிக்கா, பாகிஸ்தானின் அணுஆயுதங்களைப் பற்றி, அதுவும் மற்றய நாடுகளுக்கு அணுஆயுத இரகசியங்களை விற்றனர் என்ற குற்றச்சாட்டு, வந்த பின்னரும், அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஆனால் இந்தியாவின் அணுஆயுதத் திட்டங்களை முடக்க எடுக்கும் சதி, என்பது இந்தியாவில் தன் ஆக்கிரமிப்பை நிலை நிறுத்தி, அதனைத் தன் கையினுள் போட்டுக் கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக இருக்கும்.

சமீபத்தில், பாகிஸ்தான் தூதுவருக்கு எதிரான இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல் முயற்சியின் பின்னால் றோ தான் இருக்கின்றது என்பதும், இந்தியாவில் அமெரிக்கா செயற்பாட்டளராக, பாகிஸ்தான் காலூன்ற நினைக்கின்ற முயற்சியின் தாக்கத்தால் என நினைக்க மடியும்.

அவ்வாறே மூதூர் நகரம் திடீரென்று தாக்கப்பட்டதற்கு, பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்ட, ஜிகாத் அமைப்பினரை, கைது செய்ய எடுக்கப்பட்ட, முயற்சியாகவும் இருக்கலாம்.

எனக்கு என்னவோ, இந்தியா தனிமைப்பட வைக்க உலகநாடுகள் முயற்சி செய்கின்றன எனத் தோன்றுகின்றது. முன்பு இந்தியாவோடு நெருக்கமாக இருந்த ரசியாவும், ஜ8 நாடுகளோடு நெருக்கமாகி, இப்போது இந்தியாவில் இருந்து சற்றுத் தூர விலகியிருப்பது போலப் படுகின்றது.

இதற்கு மேலாக நான் கவலைப்படுவது எல்லாம், எம் போராட்டத்தை இந்த நாடுகள் தங்களின் பலப்பரிட்சைக்கு பயன்படுத்தக் கூடுமா என்பது தான். அதிலிருந்து நாம் தப்பிக்கின்ற செயற்பாட்டில் தான் எம் வெற்றியிருக்கின்றது.

அமெரிக்காவை விட, இன உறவால் இந்தியா தான் அதிகம் நெருக்கம் உள்ளது. ஆனால் தங்களின் தேவைகளுக்காக தமிழீழத்தை தொட்டுக் கொள்ளும் விதமாக அமைவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேணும்.

எது எப்படியோ, எம் தலைமை சிறப்பான முடிவுகளை எடுக்கும். அரைகுறையான :wink: எனக்கே இப்படித் தோன்றுது என்றால் அவர்களுக்கு புரியாதா என்ன? :wink:

  • தொடங்கியவர்

இப்படியான தகவல்களைப் படிக்கின்றபோது, புலிகளுக்கும், இலங்கையளரசுக்கும் அப்பால், அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், இந்தியாவிற்கிடையே பனிப்போர் நடைபெறுவதாகவே எனக்கு புலப்படுகின்றது.

இந்தியா, 3 வருடத்திற்கு முன்பு சொன்ன, அமெரிக்க உற்பத்திகளில், நஞ்சுக்கலவை என்ற விடயம், திரும்பத் தூசு விடயத்தைப் பார்க்கின்ற போது அப்படித் தோன்றுகின்றது. பிஜேபி அரசு அதை அப்போது அமழ்த்தி வாசிக்கவே முற்பட்டது. அது பிஜேபியின் கொள்கையாக இருக்க முடியாது. அப்போது இந்திய அமெரிக்க உறவு என்பது நல்ல நிலையில் இருந்ததே காரணமாகும்.

ஆனால் இப்போதைய நிலையைப் பார்க்கின்றபோது, அதில் ஏதோ விரிசல் விழுந்து விட்டதைத் தான் உணர முடிகின்றது. இந்தியாவின் அணுஆயுதம் தொடர்பாக, அமெரிக்கா அரசு சமீபத்தில் சட்ட மூலம் இயற்றியால் ஏற்பட்ட சர்ச்சசையின் தொடர்;ச்சியாக இதன் விரிசல் விழுந்திருக்கலாம்.

அதுவும், அமெரிக்கா, பாகிஸ்தானின் அணுஆயுதங்களைப் பற்றி, அதுவும் மற்றய நாடுகளுக்கு அணுஆயுத இரகசியங்களை விற்றனர் என்ற குற்றச்சாட்டு, வந்த பின்னரும், அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஆனால் இந்தியாவின் அணுஆயுதத் திட்டங்களை முடக்க எடுக்கும் சதி, என்பது இந்தியாவில் தன் ஆக்கிரமிப்பை நிலை நிறுத்தி, அதனைத் தன் கையினுள் போட்டுக் கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக இருக்கும்.

சமீபத்தில், பாகிஸ்தான் தூதுவருக்கு எதிரான இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல் முயற்சியின் பின்னால் றோ தான் இருக்கின்றது என்பதும், இந்தியாவில் அமெரிக்கா செயற்பாட்டளராக, பாகிஸ்தான் காலூன்ற நினைக்கின்ற முயற்சியின் தாக்கத்தால் என நினைக்க மடியும்.

அவ்வாறே மூதூர் நகரம் திடீரென்று தாக்கப்பட்டதற்கு, பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்ட, ஜிகாத் அமைப்பினரை, கைது செய்ய எடுக்கப்பட்ட, முயற்சியாகவும் இருக்கலாம்.

எனக்கு என்னவோ, இந்தியா தனிமைப்பட வைக்க உலகநாடுகள் முயற்சி செய்கின்றன எனத் தோன்றுகின்றது. முன்பு இந்தியாவோடு நெருக்கமாக இருந்த ரசியாவும், ஜ8 நாடுகளோடு நெருக்கமாகி, இப்போது இந்தியாவில் இருந்து சற்றுத் தூர விலகியிருப்பது போலப் படுகின்றது.

இதற்கு மேலாக நான் கவலைப்படுவது எல்லாம், எம் போராட்டத்தை இந்த நாடுகள் தங்களின் பலப்பரிட்சைக்கு பயன்படுத்தக் கூடுமா என்பது தான். அதிலிருந்து நாம் தப்பிக்கின்ற செயற்பாட்டில் தான் எம் வெற்றியிருக்கின்றது.

அமெரிக்காவை விட, இன உறவால் இந்தியா தான் அதிகம் நெருக்கம் உள்ளது. ஆனால் தங்களின் தேவைகளுக்காக தமிழீழத்தை தொட்டுக் கொள்ளும் விதமாக அமைவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வேணும்.

எது எப்படியோ, எம் தலைமை சிறப்பான முடிவுகளை எடுக்கும். அரைகுறையான :wink: எனக்கே இப்படித் தோன்றுது என்றால் அவர்களுக்கு புரியாதா என்ன?

:):D:D:D:D

விமானப்படை தலைவர் இலங்கைக்கான தூதுவரா..?? நல்ல விசயம்... :wink:

சிறீலங்கா இவ்வளவுகாலமும் உக்கிரைன் காறரையும், இஸ்ரேல் காறன் இப்போ பாக்கிஸ்தான் விமான ஓட்டிகளை வைத்து வித்தை காட்ட முயலுகினம் போலகிடக்கு....

ஓ..... ஐரோப்பா காறன்களுக்கு குடுக்குற சம்பளத்தின் பாதியை பாக்கிஸ்தான் காறன்களுக்கு குடுத்தா போதும்தான்.... ஆனால் இந்தியா பல்லை நெருமுகிறது கேக்குதே...??? :roll: :wink: :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.