Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு பொதுநலவாயத்தின் தலைமையை கொடுக்கக் கூடாது : சுமந்திரன் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது மீள்பரிசீலனை செய்து தலைமைப் பதவியினை தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
Sumanthiran-MP_0.jpg
இலங்கையில் இன்று மனித உரிமை மீறல்களை நாங்கள் தான் செய்கின்றோம் என அரசாங்கம் சர்வதேசங்களுக்கு வெளிப்படையாகவே காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் 'சமகி" அமைப்பினால் நேற்று 'மனித உரிமைகளுக்கான போராட்டம்" என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
 
இலங்கையின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலான மக்களை கொன்றுகுவித்த, சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஓர் சர்வாதிகாரிக்கே இன்று அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவி வழங்கப்படவுள்ளது.
 
இவ்வாறான சர்வாதிகாரிக்கு ஓர் முக்கிய பொறுப்பினைக் கொடுப்பது சரியானதா என்பதை இப்போதாவது பரிசீலனை செய்து சரியானதொரு முடிவினை எடுக்க வேண்டும்.
 
பொது நலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளாத பிரதான நாடுகள் தமக்கான முடிவினை சரியாக எடுத்துள்ளன. கனடா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றமையினாலும், போர்க்குற்றம் புரிந்த ஓர் தலைவரின் அழைப்பினை விரும்பாததன் காரணத்தினாலேயுமே இம் மாநாட்டினைப் புறக்கணித்துள்ளனர். அதேபோல் மொரிஷியஸ், டிரினிடாட் போன்ற நாடுகள் இறுதிநேரத்தில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து இவ் உச்சிமாநாட்டினை புறக்கணித்துள்ளன.
 
அதேபோல், இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நாடுகளும் தமது அழுத்தங்களை பிரயோகித்து மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு கட்டளைகளிடவே வந்திருக்கின்றன. எந்தப் பக்கத்தில் பார்தாலும் அரசாங்கம் அழுத்தங்களை சந்திப்பது உறுதியே.
 
மேலும், இலங்கையில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை நாங்கள் தான் செய்கின்றோம் என்பதனை வெளிப்படையாகவே அரசாங்கம் காட்டிக்கொண்டிருக்கின்றது. ஒருபுறம் பொது நலவாய அரச தலைவர் உச்சிமாநாட்டினை நடத்தும் அரசாங்கம், மறுபுறம் மனித உரிமை மீறல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இன்று வடக்கில் இருந்து வரவிருந்த பலரை இராணுவத்தினர் மூலமாகத் தாக்கி அவர்களை இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத வண்ணம் செய்துள்ளனர்.
 
சர்வதேச ஊடகங்கள், சர்வதேசத் தலைவர்கள் முன்னிலையில் அரசாங்கம் குற்றச்செயல்களை செய்கின்றது. எனவே, இப்போதாவது சர்வதேசம் சிந்திக்க வேண்டும். பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்குவதை தடுக்க வேண்டும்.
 
இறுதி நேரத்திலாவது சரியான பரிசீலனைகளை மேற்கொண்டு இலங்கையின் தற்போதைய நிலைமையினை அவதானித்து சிறந்ததொரு முடிவினை பொது நலவாய அமைப்பு எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

கமலேஷ் சர்மா, பொதுநலவாய செயலாளரா? இலங்கை ஜனாதிபதியின் செயலாளரா?  - மனோ கணேசன் கேள்வி

668b43cf-ff80-45d9-aeca-dad671a2a2381.jp
ஐந்து கண்டங்களை சேர்ந்த 53 நாடுகளை கூட்டிணைக்கும் பொதுநலவாய சம்மேளனத்தின் செயலாளர் நாயகம்  கமலேஷ் சர்மா, இலங்கை நாட்டு அதிபரின்  செயலாளரை போன்று நடந்து கொள்ள கூடாது. அவர் பொதுநலவாய கொள்கைகளை காப்பாற்ற விளைகிறாரா அல்லது இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற முயல்கிறாரா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் பதினாறு அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான விதிகளான ஜனநாயகம், மனித உரிமைகள், மத சுதந்திரத்தை வலியுறுத்தும் சகிப்புத்தன்மை, பேச்சு சுதந்திரம், நீதி-பாராளுமன்றம்-நிர்வாகம் ஆகியவற்றின் பரஸ்பர சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, சுகாதாரம்-கல்வி-குடிநீர் ஆகிவற்றுக்கான உரிமை ஆகிய எட்டு விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் கறை படிந்த வரலாற்றை செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கழுவி சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்த முனைய கூடாது.
பொதுநலவாய கொள்கைகளை அமுல் செய்யும்படி ஏனைய  பொதுநலவாய நாடுகளுக்கு  உபதேசம் செய்ய முன் தனது சொந்த நாட்டில் அவற்றை அமுல் செய்து உலகத்துக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளும்படியும், இவற்றுக்கு முதற்படியாக கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை முழுமையாக அமுல் செய்யும்படியும், பொதுநலவாயத்தின் புதிய தலைவரான மகிந்த ராஜபக்சவை, கமலேஷ் சர்மா வலியுறுத்த வேண்டும் எனவும் நாம் கோருகிறோம்.
இந்த பணியிலிருந்து கமலேஷ் சர்மா தவறுவாராயின், புதிய தலைவர் மட்டும் அல்ல, கமலேஷ் சர்மாவும் தனது பதவிலிருந்து விலகி வீடு போக வேண்டி வரும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து  ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது;
இந்த நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களை காப்பாற்றுவதில் ஐநா தவறிவிட்டது என ஐநா செயலாளர் நாயகம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது இந்த நாட்டில் யுத்த குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என அவர் கோடிட்டு காட்டுகின்றார். செனல் நான்கு தொலைகாட்சியில் காட்டப்பட காணொளிகள், படுகொலைகள், காணாமல் போனோர், தடுத்து வைகப்பட்டுள்ளோர் ஆகிய விவகாரங்கள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில்,சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை செய்வதாக அரசாங்கம் ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில், இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் ஏற்றுகொண்டனர்.
ஆனால், இந்த ஊடக மாநாடு நடக்கும் இவ்வேளையில்கூட, கொழும்பில் நடக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வடக்கில் இருந்து வந்து கொண்டிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல் இலங்கைக்குள் விசா வாங்கிகொண்டு வந்துள்ள செனல் நான்கு தொலைகாட்சி ஊடகவியலாளர் கொலம் மெக்ரே வடக்கு நோக்கி செல்லும்போது அனுராதபுரத்தில் தடுக்கப்பட்டுள்ளார்.
இவை என்ன? இந்த நாட்டில் மனித உரிமை, பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவை இருக்கின்றனவா? பொதுநலவாயத்தின் 53 நாடுகளுக்கும், பொதுநலவாய பிரகடனத்தில் அடங்கியுள்ள பல்வேறு கொள்கை விதிகளை அமுல் செய்யும்படி கூற வேண்டிய, இந்த அமைப்பின் புதிய தலைமை நாடான இலங்கை, தலைமை பதவியை ஏற்றுக்கொள்ள போகும் இன்றைய வேளையிலேயே பொதுநலவாய கொள்கை பிரகடனத்தை அப்பட்டமாக மீறுகிறது. இந்த நிலைமைக்கு பிரதான பொறுப்பை கமலேஷ் சர்மா  ஏற்றுகொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் பொதுநலவாய மாநாடு நடக்க கூடாது என்றும், அதற்கான தகுதி இந்த நாட்டு அரசாங்கத்துக்கு இல்லை என்றும்,  நாங்கள் சொன்னோம். இதையே சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சொல்கின்றன. இதையே இந்தியாவை சேர்ந்த பல அரசியல் கட்சிகளும் சொல்லுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம்  இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றி, பாதுகாத்து, இம்மாநாடு இந்த நாட்டில் நடைபெற பெரும் பங்களித்தவர் கமலேஷ் சர்மா ஆகும்.
இந்நிலையில் , இனி எதிர்காலத்திலும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் கமலேஷ் சர்மா இறங்கக்கூடாது. செயலாளர் நாயகம் என்ற முறையில் அவர் பொதுநலவாய அமைப்புக்கு பொறுப்பு கூறவேண்டுமே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு அல்ல.
புதிய தலைமை நாடான இலங்கையை, தனது சொந்த கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை ஒப்புகொண்டபடை அமுல் செய்யும்படியும், பொதுநலவாய கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளின் படி நாட்டை நடத்தி செல்லும்படியும், கமலேஷ் சர்மா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அறிவுரை கூற வேண்டும். இது நடக்காவிட்டால் தலைவரும், செயலாளர் நாயகமும் பதவி விலக வேண்டும்.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=668b43cf-ff80-45d9-aeca-dad671a2a238

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.