Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்திற்குப் பிறகும் இயங்கும் உடல் பாகங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.

கேம்பிரிட்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் "மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே" என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!

மூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மூளை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு மூளையை பிளாஸ்டிக்காக மாற்றி பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி அதன் முப்பரிமாண அமைப்பை கணினிக்குள் செலுத்தும் அரிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இது மூளையைப் பொறுத்த மட்டில் கூறப்படுவது, இது தவிர மேலும் சில உடல் உறுப்புகளும் மரணத்திற்குப் பிறகு வாரக்கணக்கில் கூட இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் சிலர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

முடி மற்றும் நகத்திசுக்களை நம் உடல் அதிகம் உற்பத்தி செய்வதில்லை. ஆனால் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் கழித்துக் கூட முடி மற்றும் நகங்கள் வளருமாம்.

 

சரும செல் வளர்ச்சி:

மரணத்திற்கு பிறக் ரத்த ஓட்டம் நின்று மூளையை நிமிடங்களில் சாகடித்து விடும் என்றாலும் உடலுக்கு வெளிப்புறத்தில் இருக்கும் சருமத் தொகுதிகள் பல நாட்களுக்கு உயிருடன் இயங்குமாம்.

சிறுநீர் கழித்தல்:

மரணமடைந்த பிறகு உடல் விறைப்பு ஏற்படுகிறது. ஆனால் மரணத்திற்கு சில நிமிடங்கள் கழித்து உடல் விறப்பு தளர்வதால்தான் பிரேதத்திலிருந்து சிறுநீர் வருகிறது.

செரிமான உறுப்பு!

நாம் இறந்த பிறகு அனைத்தும் நின்று விடுவதில்லை. குடலில் உள்ள பாக்டீரியா சாவதில்லை. மேலும் அதற்கு உணவு செல்லாதபோதும் அது வேலையை அது செய்துகொண்டுதான் இருக்குமாம் மரணத்திற்குப் பிறகும் கூட!

பாலுறுப்பு விறைப்பு!

 

இருதயம் ரத்தத்தை உடலுக்கு அனுப்புவதை நிறுத்தியவுடன், ரத்தம் ஒரு இடத்தில் தங்குகிறது. சிலர் நின்றநிலையில் மரணமடைவர். சிலர் குப்புறப்படுத்தபடி மரணமடைவர். மரணத்திற்குப் பிறகு சவ்வுகள் மேலும் காசியம் ஊடுருவ அனுமதிக்கிறது. மேலும் செல்கள் அதிக சக்தியை செலவு செய்யவேண்டியதில்லை என்பதால் தசைகள் இறுகுகிறது. இதனால் விறப்பு ஏற்படுகிறது. இதனால் இறந்த பிறகும் குறி டென்ஷனில் இருக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல விந்து கூட வெளிப்ப்டும் வாய்ப்புள்ளது.

தசை இயக்கம்:

மூளை செத்தாலும் நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகள் இயக்கத்தில் இருக்கும். இறந்த பிறகும் கூட நரம்புகள் சிக்னல்களை தண்டுவடத்திற்கு அனுப்பும், மூளைக்கு அல்ல. இதனால்தா தசை இறுக்கம் ஏற்படுவதை பார்க்கிறோம்.

குரல் உறுப்பு:

இறந்த பிறகு உடல்விறைப்பு ஏற்படுவதால், தொண்டைத் தசைகளும் விறைக்கும், இதனால்தான் செத்த உடலிலிருந்து சில சமயங்களில் சப்தங்கள் கேட்பதுண்டு, லேசான முனகல் போன்ற ஒலி ஏற்படும்.

பண்டைய காலம்:

பண்டைய காலங்களில் மரணமடைந்த கர்ப்பிணிப்பெண்ணின் உடல் கருவையும் வெளியே துப்பி விடும் அதிசயங்களும் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் அரிதானதே, ஆனால் இன்று வரை இது வதந்தி என்றே நம்பப்படுகிறது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/letusknow/1312/05/1131205032_3.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.