Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்சினை தமிழ்நாட்டில் சூடுபிடிக்கிறது; நாளும் பேரணி

Featured Replies

இலங்கை பிரச்சினை தமிழ்நாட்டில்

சூடுபிடிக்கிறது; நாளும் பேரணி.

இலங்கை பிரச்சினை தமிழ் நாட்டில் சூடுபிடிக்கிறது. தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் பயங்கரவாத காரியங் களைக் கட்டவிழ்த்து விடுவதை எதிர்த்துக் கடந்த இரண்டு வார காலமாகவே சென்னையில் அன்றாடம் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருக் கும் முல்லைத்தீவில் இலங்கை ராணுவம் குண்டு போட்டு 61 தமிழ் மாணவிகளைக் கொன்றது முதல் தமிழ்நாட்டில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேரணி களும் ஆர்ப்பாட்டங்களும் நடக் கத் தொடங்கிவிட்டன.

மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் இலங்கை அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங் களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் அன் றாடம் அரங்கேற்றி வருகின்றன.

அண்மையில் மதிமுக கட்சி தலைவர் வைகோ பேசிய பேச்சு பெரும் பிரச்சினையைக் கிளப்பி இருப்பதாகத் தெரிவிக்கப்படு கிறது. திங்கட்கிழமை பொதுக் கூட்டமொன்றில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆற்றிய உரை தொடர்பாக அவர் கைது செய்யப்படலாமென்று பரபரப்பு நேற்று ஏற்பட்டது.

இந்திய அரசு மேற்கொண்ட நிலைப்பாடுகளையும், அணுகு முறைகளையும் அவர் மிக கடுமையாக விமர்சித்தார்.

இலங்கையின் ஒருமைப் பாடும், இறையாண்மையும் காக்கப்பட வேண்டும் என்று கூறுவதற்கு இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இலங்கைப் பிரச்சினையில் தலை யிட நாட்டாண்மையை இந்தியா குத்தகை எடுத்திருக்கிறதா என்றும் அவர் கேட்டார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு மத்திய அரசு உதவி செய்தால், தெற்கிலும் ஒரு காஷ்மீர் உருவாகும் என்று வைகோ அந்தக் கூட்டத்தில் பேசி னார்.

ஆயினும், வைகோவின் பேச்சைக் பொருட்படுத்த தேவை யில்லையெனக் கருணாநிதி தமிழகச் சட்டசபையில் தெரி வித்த கருத்தால் வைகோ கை தாகும் சாத்தியம் இல்லையெனத் தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் சூடுபிடித்திருக்கும் நிலையில் ஈழத்தமிழர்களை அறவழியில் பாதுகாப்போம்' என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அழைப்பு விடுத் திருக்கிறார்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற் பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப் பட்ட எட்டுத் தமிழர்களுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள் ளார். விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க முற்பட்டனர், விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக் காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்க அரசுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டனர், விடு தலைப் புலிகளுக்கு அமெரிக்கா வில் நிதி சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இரண்டு கனடியத் தமிழர்களும் ஆறு அமெரிக்கத் தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது கைது சம்பவம் தொடர்பாக புலிகளின் ராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்டவர்களுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் நாம் செயற் படும் முறை இதுவல்ல என்றும் இப்படி ஒரு காரியத்தை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

TAMILMURASU-SINGAPORE.

  • தொடங்கியவர்

அகதிகள் பிரச்சினையும் அரசியலும்.

-------------------------------

இலங்கைப் பிரச்சினை தமிழ்நாட்டு அரசியலில் விளைவுகளைக் காட்டத் தொடங்கியது. கத்தி மேல் நடப்பது போன்ற பதற்றமான நிலை கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது. இதுதான் சமயம். இதை விட்டு விடக் கூடாது என்று வைகோ புயலாய்ச் சீறுகிறார்.

எரிமலையாய் வெடிக்கிறார். ‘தமிழகத்தை இன் னொரு காஷ்மீர் ஆக்கி விடாதீர்கள்’ என்று அவர் பேசிய பேச்சுக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நெஞ்சு ‘பனிமலை’ என்று பாராட்டியதற் கும் காங்கிரசார் மத்தியில் பலத்த எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.

காங்கிரஸ்காரர்கள் வைகோவை விடக்கூடாது என் கிறார்கள். வைகோ மீது நடவடிக்கை எடுத்தால் அது தமக்குப் பாதக மாக அமைந்துவிடும் என் பதில் கலைஞர் மிக எச்சரிக்கையாய் இருக்கிறார். அதனால் ஆவேசமாகப் பேசும் வைகோ மீது நடவடிக்கை எடுப்பதில் அவர் மௌனம் சாதிக்கிறார்.

ஆனால் வைகோ பேசும் பேச்சு, வெளிப்படையாக தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்துக்கு அவர் தெரிவிக்கின்ற ஆதரவு, இவை கலைஞரை இக்கட்டில் மாட்டி உள்ளது.

எது நடந்தாலும் அது தனக்கு ஆதாயமே என்னும் நோக்கில் இப்பிரச்சினையில் வாய் திறக்காமல் வேடிக்கை பார்க்கிறார் ëஜயலலிதா. என்றோ பேசிய பேச்சைக் காரணம் காட்டி வைகோ மீது நடவடிக்கை எடுத்த ëஜயலலிதா இப்போது இது பற்றி எதுவும் கூறாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே வைகோ, 1989ல் தாம் மேற்கொண்ட ஈழப் பயணம் பற்றி பொதுக் கூட்டத்தில் பேசத் தொடங்கிவிட்டார். இந்திய இராணுவத்தால் வீசப்பட்ட குண்டைத் தான் தாங்கிக்கொண்டு சரத் என்னும் புலித் தளபதி தன்னைக் காப்பாற்றியதாக உணர்ச்சி பொங்கப் பேசிவருகிறார்.

தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என் னும் அனுமானத்தில் செய்ய வேண்டிய பணிகளை முன் கூட்டியே செய்து வருகிறார். ஆனால் அதற்கு அவசியம் ஏற் படவில்லை. கலைஞர் இந்த விஷயத்தில் அவசரப்பட மாட்டார் என்றே தோன்றுகிறது.

ஆனால் காங்கிரஸ் காரர்கள் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடமும் சோனியாவிடமும் சொல்லும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் அறிவாலயம் வைகோவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி அவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யிலிருந்து விலக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வைக்கப் போகிறதாம்.

ஆவேசம், மௌனம், வேடிக்கை மூன்றில் எதற்கு ஆதாயம்? சில நாட்களில் தெரிந்துவிடும்.

இதற்கிடையே இலங்கையின் யாழ்ப் பாணப் பகுதியில் இருந்து வெளிநாட்டி னரை செஞ்சிலுவைச் சங்கம் மீட்டு இருக் கிறது. உதவிப் பொருட்களையும் அது மக்களுக்கு வழங்கியது.

அங்கு புலிகள் விட்டுச் சென்ற கண்ணிவெடி வெடித்து ஆறு வீரர்கள் மாண்டுவிட்டனர் என்று ராணுவம் நேற்று தெரிவித்தது.

இதற்கிடையே அமெரிக்காவில் விடுதலை புலிகளுக்காக ஆயுதங்களை வாங்க முயன்றதாக 13 பேர் கைதா னதை அடுத்து மேரிலாண்டில் செயல் படும் தமிழர் மறுவாழ்வு அமைப்பு என்ற ஓர் அமைப்பின் தலைவரான மருத்துவர் நாகரத்தினம் ரஞ்சிதனை போலிஸ் விசாரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய அலுவலகத்தில் இருந்து ஐந்து கணினிகள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை கூறியது.

TAMILMURASU-SINGAPORE.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சியின் பின்னனியில் பல தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. குறிப்பாக ஆனந்தவிகடன், தினமணி, ... போன்றவற்றை கூறலாம். இதில் இதே பத்திரிகைகள் முன்பு சில காலம் "நாயுக்கு எங்கே அடித்தாலும் முன்னங்காலைத்தானாம் துக்குமாம்" என்பது போன்று தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் ஈழத்தமிழர்கள் மீதே போடப்பட்டது. ஆனால் காலகட்டத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இது ஒரு பெரிய மாற்றம். இம்மாற்றம் காலகட்டத்தில் ஏனைய ஊடகங்கள் மட்டுமல்லாது ஏனைய அரசியல் கட்சிகளிலும் கட்டாயம் ஏற்படும். இம்மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் நாமும் மிக அவதானமாக இருக்க வேண்டும். பழையதை குழப்பிக் கலக்கிக் கொண்டே இருப்பதில் பயனேதும் இல்லை. உலகில் நடக்காதவைகளா நம் நாட்டில் நடந்து விட்டது. நாமும் காலத்திற்கேற்ப பழையவைகளை மறந்து புதிய உலகில் காலடி எடுத்து வைக்கத் தயாராக வேண்டும்.

மலரப்போகும் எம் தேசத்தின் சார்பில் நேசக்கரத்தை இந்தியாவை நோக்கி நீட்டுவோம். அதுதான் காலத்தின் கட்டாயமும்.

தமிழ்நாட்டில் இலங்கை விவகாரம் எல்லை மீறி பரவாமல் இருக்க வேண்டும். அங்குள்ள இயல்பு வாழ்கை தொடர்ந்து பாதிக்கப்படுமானால் அது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். இவை மத்திய அரசிற்கு பிறகு காரணங்களாகிவிடும். இவற்றில் நிதானம் அவதானம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

உம். சில பேரின் அதீன பேச்சுக்கள், மத்திய அரசிற்கு காரணங்களைத் தேடிக் கொடுக்கின்ற என்பதை மறுக்க முடியாது. இதை வைத்து மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள காரணமாக அமையும்

உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது அவதானமாக இருப்பது நல்லது!

பழையதை குழப்பிக் கலக்கிக் கொண்டே இருப்பதில் பயனேதும் இல்லை.

யதார்த்தத்தை உணர்ந்த அருமையான கருத்து.... இதே உபதேசம் இந்தியத் தமிழர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.