Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற தேர்தலும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகளின் கடமையும் ! (நாம் தமிழர் கட்சியின் சிறப்பு கவனத்திற்கு)

Featured Replies

1511160_774815175866668_1286101905_n.jpg
 
வரும் 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு தமிழர் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை இரு பெரும் திராவிடக் கட்சிகள் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் பிடிக்கின்றன. இதற்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்று சிலர் எண்ணி தேசியக் கட்சியான பாஜக வுடன் மதிமுக பாமக போன்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளன. பாஜக காங்கிரஸ் ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் கொள்கை அளவிலும், ஊழல் அளவிலும், தமிழின விரோதப் போக்கின் அளவிலும் ஒரே நிலையில் இயங்கும் கட்சிகளாகும். இக்கட்சிகளோடு கூட்டணி வைத்து தமிழர்களிடம் வாக்கு சேர்ப்பது தமிழினத்திற்கு மேலும் ஒரு பின்னைடைவை தேடித்தரும். நடுவண் அரசிடம் பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் மீண்டும் இழப்பார்கள். திராவிடர்களும் ஆரியர்களும் கூட்டு சேர்வது தமிழர்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பு இல்லை.

திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், பொதுவுடைமை கட்சிகள் இல்லாத ஒரு கூட்டணியே தமிழகத்திற்கு தேவையாக உள்ளது . தமிழர்களின் உரிமையை மீட்க தமிழர்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் தமிழக கட்சிகள் தங்களுக்கு பெரிய பலம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் தனித்து தேர்தலில் நிற்க தயக்கம் காட்டுகின்றன . தமிழர்கள் தங்கள் தமிழுணர்வின் மீது நம்பிக்கை வைத்து தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தமிழர் நலன் சார்ந்த கூட்டணி வேண்டும் என்று நினைத்தாலும் தமிழ்க் கட்சிகள் தனியாக தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது என்றே நினைக்கின்றன. இப்போது தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் திராவிடக் கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைத்த பின்பு எஞ்சியிருக்கிற தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், இயக்கங்கள் போராட்டக் குழுக்கள் ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தான் தமிழினத்திற்கு இருக்கிற ஒரே வழியாகும்.

அந்த வகையில் பண்ருட்டி வேல்முருகன் தலைமையின் தமிழக வாழ்வுரிமை கட்சியும் , சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியும், போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர் அணியும், கூடங்குளம் அணு உலைப் போராட்டக் குழுவும், இதர சிறிய தமிழக கட்சிகளும், அமைப்புகளும் கரம் கோர்த்தால் நிச்சயம் தமிழர் நலக் கூட்டணி உதயமாகும். தமிழ் உணர்வாளர்கள் தங்கள் முழு பலத்தை காட்டி தமிழர் நலக் கூட்டணி வெற்றி பெற பாடுபட்டால் கண்டிப்பாக கணிசமான தொகுதிகளில் நாம் வெற்றி பெறலாம்.

இதில் நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலில் நிற்க மாட்டோம் என்று அறிவித்த நிலையில் யாருக்கு ஆதரவு தர உள்ளனர் என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். நாம் தமிழர் கட்சியை நம்பி இலட்சக்கணக்கான உணர்வுள்ள தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு என்ன வேலை கொடுக்க உள்ளது நாம் தமிழர் கட்சி . இனத்திற்காக கட்டமைக்கப்பட்ட கட்சி தான் நாம் தமிழர் கட்சி என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழர் நலக் கூட்டனிக்கு ஆதரவு வழங்கட்டும். அவர்கள் தேர்தலில் நிற்காவிட்டாலும் தேர்தலில் நிற்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும் , மாணவர் அணிக்கும் , சுயேச்சை அணிக்கும் ஆதரவு வழங்கட்டும் . வரலாறு நாம் தமிழர் கட்சியின் பக்கம் நிற்கிறது . அதை பயன்படுத்தி நாம் தமிழர் கட்சி களமாட வேண்டும் . தங்கள் பலத்தை தமிழர் நலன் சார்ந்த கூட்டணிக்கு செலவிட்டால் நிச்சயம் சில பல தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் . ஒரு வேளை அப்படி நாம் தமிழர் கட்சி மௌனமே சாதித்தால் அவர்கள் மறைமுகமாக திராவிட கட்சிகளுக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்று பொருள்.

மேலும் தென்தமிழகம் கடலோர மாவட்டங்களில் அணுஉலைப் போராளிகளுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர்கள் சார்பிலும் சில வேட்பாளர்கள் நிற்கட்டும். அவர்களும் தமிழர் நலக் கூட்டணியில் இணையட்டும். இந்த பகுதியிலும் தமிழர்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே போல் தமிழகமெங்கும் போராடிய மாணவர் படையணி தமிழர் நலக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இந்த மாணவர்கள் நினைத்தால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணலாம். இவர்கள் தேர்தலில் களமாட காத்து நிற்கின்றனர். நாற்பது தொகுதிகளில் 5 தொகுதிகள் தமிழர் நலக் கூட்டணி வெற்றி பெற்றால் கூட அது தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த கூட்டணி காலத்தின் தேவையாக உள்ளது.

ஆகவே தோழர்களே இந்த கூட்டணி அமைவது உங்கள் கைகளில் தான் உள்ளது . நாம் தமிழர் கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சி , அணு உலை போராட்டக் குழு , மாணவர் அணி, தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து தமிழர் நலக் கூட்டணி உருவாக வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் எண்ணமாக உள்ளது . களமாட நாங்கள் தயார் . அரசியல் கட்சிகள் தயாரா ? தயார் என்றால் சொல்லுங்கள் உடனே அதற்கான செயல் திட்டத்தில் ஈடுபடுவோம் . தமிழர் நலனை உரிமைகளை மீட்போம்!
 
Rajkumar Palaniswamy
(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.