Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது முழுக் குடும்பத்துக்கும் எச்.ஐ.வி. தொற்று எப்படி வந்தது என ஒருவருக்கும் தெரியாது : பரிதவிக்கிறார் ஒர் இளம் தாய் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''சிலாபம் திண்ணனூரான்''

 

எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் சரிதம் எழுதப்படுவது விழிப்புணர்வுக்காகவும், சிந்திப்போம், சிந்திக்க வைப்போம் என்ற உணர்வுடனேயேயாகும். இன்று நாம் காணப்போவது அப்பாவியான ஒரு கிராமத்து பெண்ணின் சோகக் கதையாகும்.

எனது பெயர் பொடி மெனிக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த வெற்றிலைக்கு பெயர் கொண்ட கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு வயது இப்போது இருபத்தெட்டு. இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது ஐந்து வருடம் ஒன்பது மாதம். இளையவனுக்கு வயது பதினெட்டு மாதங்களே. எனது கணவர் வெற்றிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றார்.

43aids2.jpg
பொடி மெனிக்கா வறுமையோடு வாழ்கிறார் என்பதை அவளின் முகமும் உடையும் அடையாளப்படுத்தியது. முகம் முழுவதிலும் சோகம் துன்ப ரேகைகளாக படர்ந்து விரிந்து இருந்தது. தயக்கத்துடன் தனது சோகக் கதையை தொடர்ந்தாள்.

எனக்கு திருமணம் முடிக்கும்போது வயது பதினேழு. எனது கணவர் சாந்த எனது கிராமத்தைச் சேர்ந்தவர். உறவுக்காரர். திருமணம் முடிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே வெளிநாட்டு வாய்ப்புப் பெற்று குவைத் சென்று நாடுத் திரும்பி இருந்தார். நாடு திரும்பி எனது கிராமத்திலேயே வெற்றிலை தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து வெற்றிலை செய்கையை மேற்கொண்டு வெற்றிலை வர்த்தகத்தில் ஈடுபட்டார்.

வெற்றிலைத் தொழில் இவருக்கு கை கொடுக்கவில்லை. பணத்தையும் இழந்தார். இந்நிலையில்தான் வெற்றிலைத் தோட்டத்தில் உரிக்கு தொழில் புரிய ஆரம்பித்தார் சாந்த.
 

அப்போது எனக்கு திருமணம் செய்யும் எண்ணத்தை எனது பெற்றோர் வெளியே விட்டனர். இறுதியில் பெரியோர்களின் ஆசியுடன் சாந்தவை திருமணம் முடித்தேன். திருமண வாழ்க்கை நல்ல முறையில் கழிந்தது. 2007 இல் முதலாவது குழந்தையும் கிடைத்தது. அவனுக்கு கௌதமன் எனப் பெயர் வைத்தோம்.

சாந்த நல்ல குணத்தைக் கொண்டவர். அடுத்த குழந்தை 2012 இல் கிடைத்தது. சாந்தவின் சிறிய வருமானத்தில் சிக்கனத்துடன் வாழப் பழகிக் கொண்டேன். சிக்கனம் எனக்கு கை கொடுத்தது. கடந்த மே மாதம் எங்களின் மூத்த மகனுக்கு தொடராக காய்ச்சல் நீடித்தது. கிராமத்து வைத்தியசாலையில் சிகிச்சை செய்தும் பயன் கிடைக்கவில்லை. டாக்டர் எனது மகன் கௌதமனை கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும்படி அறிவுரை வழங்கினர்.

கொழும்பு வைத்தியசாலையில் கௌதமன் தங்கி சிகிச்சை பெற்றும் பலன் கிட்டவில்லை. இங்கு ஒரு கிழமையின் பின்னர் கௌதமனின் குருதி எடுத்து பரிசோதனையை வைத்தியர்கள் மேற்கொண்டனர். மூன்று நாட்களின் பின்னர் குருதியின் பரிசோதனை வைத்தியரின் கைக்கு வந்தது.

அந்த வைத்திய அறிக்கையே எங்களின் குடும்பத்தை புரட்டிப் போட்டது. பின்னர் இளைய மகனதும் எனது கணவரின் குருதியும் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் இறுதியாக எனது குருதியையும் வைத்தியர்கள் பெற்றனர்.

நான் நினைத்தேன். மகனுக்கு டெங்கு காய்ச்சல் என்று. இறுதியில் குருதி பரிசோதனை அறிக்கை வந்ததுமே முழு மயான விபரம் தெரிந்தது. எங்கள் முழுக் குடும்பமும் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழ்ந்து கொண்டு இருப்பது. வைத்தியர் மிகவும் பணிவுடன் இரகசியமாக இச்செய்தியை சொல்ல அதை நான் கேட்டதும் அதிர்ந்துப் போய் விட்டேன். எவ்வாறு எச்.ஐ.வி. தொற்று எங்களுக்குள் சொல்லாமல், கொள்ளாமல் நுழைந்தது என்பது தெரியாது அதிரடியாக அதிர்ச்சிக்குள் நுழைந்தோம்.

எங்கள் இருவருக்குள்ளும் எதுவித தவறான உறவும் இல்லை. வறுமையில் வாடும் எங்களுக்கு மாற்று யோசனையை மேற்கொள்ள மனம் இடம் தருவதில்லை. சாந்தவும் வெளிநாட்டில் தான் வாழ்ந்த காலத்தில் தவறு செய்யவில்லை என சத்தியம் செய்து உறுதிப்படுத்தினார். இது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

இன்று நானும் சாந்தவும் மகன் கௌமனும் ஒன்றரை வயது பிரதீபும் எச்.ஐ.வி. தொற்றுக்கு மருந்து பாவித்து வருகின்றோம். எச்.ஐ.வி. எவ்வாறு நுழைந்தது என்பதே எங்கள் முன் நிற்கும் கேள்வியாகும். இந்த விபரம் கிராமத்தில் எவருக்கும் தெரியாது. குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியாது. டாக்டர்களின் மூலமாக பொசிட்டியூவ் வுமன் நெட்வேர்க் அமைப்பில் இணைந்து திருமதி பிரின்சி மங்கலிக்காவின் அனுசரணையில் வாழ்ந்து வருகின்றேன்.

இவ்வமைப்பின் தலைவியான இவரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப வைத்திய சிகிச்சைகளைப் பெற்று வருகின்றேன். குழந்தைகள் இருவரும் மருந்து பாவிக்கின்றனர். எங்களின் வசந்தமான வாழ்க்கைப் பாதை உடைந்துப் போய்விட்டது. மனம் உடைந்த நிலையில் வைத்தியர்களின் ஆலோசனைகளும், திருமதி பிரின்சி மங்கலிக்காவின் அறிவுரைகளும் வாழ வைக்கின்றது என்றார் பொடி மெனிக்கா. இவரின் வார்த்தைகளில் உண்மை தெரிந்தது என்பதை வாசகர்களுக்குக் கூறியே ஆக வேண்டும். அப்பாவியான இவள் மீது எவரும் குற்றம் சுமத்துவது பாவமான செயலாகும். குற்றம் புரிவது எளிது. குற்றம் சுமத்துவது கடினம். அதை நிரூபிப்பது அரிது.

ஏனென்றால் எவர் அதை நிரூபிப்பது? எல்லோருமே உலகில் தமக்குத் தெரியாமல் பல குற்றங்களைச் செய்து கொண்டே இருக்கின்றனர். இதுவும் குற்றமல்லவா?

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=48&display=0#sthash.e0AkbyaC.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பற்ற பல் பிடுங்குதல் மற்றும் ஊசி பாவனையாலும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.