Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள நாட்டில் எமது விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்த

Featured Replies

சிங்கள நாட்டில் எமது விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்: எஸ்.ஜெயானந்தமூர்த்தி

"சிங்கள நாட்டில் எமது தமிழீழ விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (21.08.06) சுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக நடைபெற்ற "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்று எஸ்.ஜெயானந்தமூர்த்தி பேசியதாவது:

"56 ஆண்டுகாலமாக தமிழர்களுடன் சிங்களவர்கள் பேச்சு நடத்தலாம்- தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு நடத்தி ஏமாற்றலாம்- பேச்சுக்கள் நடாத்தி காலத்தை கடத்தி தமிழ் மக்களை ஒடுக்கலாம்-நசுக்கலாம் என்று இருந்த காலம் மாறிவிட்டது.

"எங்களுடைய உரிமைக்காக- மக்களுக்காக- உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன்று தலைமை தாங்கி நடத்தும் எங்கள் தங்கத் தலைவனின் வருகைக்குப் பின்னால்தான் நாங்கள் இன்று விழிப்படைந்துள்ளோம். தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ்கின்றனர்.

"எமது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்காக 5 வருடகாலம் பேச்சுக்கள் நடாத்தப்பட்டு காலங்கள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டன.

"இன்று புலம்பெயர் வாழ் மக்கள் உரிமைகளை வெல்வதற்காக நமது போராட்டத்தை உலகம் அறியச் செய்வதற்காக ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.

"ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ததால் நிலைமை மிக மோசமடைந்து உச்சத்தை அடைந்துள்ளது.

"சமாதானமாக வாழ விரும்புகிறோம் என்று தாயகத்திலும்- புலம் பெயர் தமிழர்களும் சர்வதேச சமூகத்திடம் கூறியும் எடுபடவில்லை.

"தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவம் நிலை கொள்ள முடியாது- துண்டைக் கணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிற செய்தி விரைவில் வரும்.

"மட்டக்களப்பில் பாகுபாடும் பிரிவினையும் இல்லை- மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். எங்களது தேசியத் தலைமை ஒன்றுதான். அதன் கீழ் ஒன்றுபடுவதின் மூலமே தமிழீழத்தைப் பெற முடியும். எந்த ஒரு துரோகத்துக்கும் மக்கள் துணை போகமாட்டார்கள்.

"புலம்பெயர் மக்களிடம் கதைகளைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்துவதில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் கேணல் ஜெயம்- கேணல் பானு நிற்கிறார்கள். காலம் வரும்- செய்தி வரும்.

"மட்டக்களப்பு விளையாட்டு மைதானத்தில் புலிக்கொடி விரைவில் ஏறும். ஒன்றுபட்ட வடக்கு கிழக்காக எமது தாயகம் விடுதலை பெறும்.

"எமது தாயகத்தில் படைப் பிரிவு, கல்விப் பிரிவு என திறமையான கட்டமைப்புடன் சகல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கிறோம். எமது தமிழீழம் மலரும் வேளையில் எந்த நிர்வாக குழப்பமுமின்றி நிர்வாகம் சிறப்பாக நடத்த தயாராக உள்ளோம்.

"தரைப்படையாக இருந்த நாம் விமானப் படையாக வளர்ச்சியடைந்துள்ளோம். இந்த வளர்ச்சிக்கு சுவிஸ் மக்களின் உதவியும் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது.

"சிங்கள நாட்டில் எமது விமானப் படை குண்டைப் போடும் நிலைமை வந்தே தீரும். சிங்களப் படைகள் மீது வான் குண்டைப் போடுவது தவிர்க்க முடியாது" என்றார் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.

http://www.eelampage.com/?cn=28458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.