Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை முடிவில் தமிழ் விவசாயிகள்": ஒரு இடப்பெயர்வு கிராமத்த

Featured Replies

தற்கொலை முடிவில் தமிழ் விவசாயிகள்": ஒரு இடப்பெயர்வு கிராமத்தின் அவலம்

இலங்கையின் வடக்கு-கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்களின் அவலத்தை விவரிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி கிராம மக்களின் அவலம் அமைந்துள்ளது என்று தமிழ்நெட் இணையத்தளம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதலினால் நெற்செய்கைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் இப்போது பட்டினிக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து 24 தென்கிழக்குப் பகுதியில் வெல்லாவெளி கிராமம் அமைந்துள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

வெல்லாவெளியிலிருந்து தென்கிழக்கில் மண்டூர் கிராமம் 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இது சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது.

கடந்த ஓகஸ்ட் 13 ஆம் நாள் அதிகாலை நேரத்தில், மண்டூர் கிராமத்திலிருந்து வெல்லாவெளி நோக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்குத் துணையாக சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலையும் மோர்ட்டார் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

வெல்லாவெளி கிராமத்தில் உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததையடுத்து தப்பி ஓடினர். அருகாமையில் உள்ள தும்பன்கேணிக்கு அகதிகளாகச் சென்ற அம்மக்கள் அங்கிருந்த பாடசாலை ஒன்றில் தங்கினர்.

"எனது 4 பிள்ளைகளுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். அதிகாலை 4 மணி இருக்கும். பாரிய வெடிச்சத்தம் கேட்டு எழுந்தோம்" என்கிறார் திருமதி சந்திரகுமாரி கமலநாதன்.

"இராணுவத்தின் தாக்குதல் நடைபெறுவதை உணர்ந்தோம். எங்களுக்கு அருகாமையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதனால் அங்கே ஒரு களேபரமான சூழ்நிலை ஏற்பட்டது"

"அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. ஆகையால் நாங்கள் தப்பி ஓடினோம். வீட்டிலிருந்து எதுவித பொருளையும் எடுக்காமல் தப்பி தும்பன்கேணிக்கு வந்து சேர்ந்தோம்" என்றார் அவர்.

"இங்கும் கூட நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. நாங்கள் மிகவும் அச்சத்தில்தான் உள்ளோம். இங்கே பெருந்தொகையான எண்ணிக்கையில் நாங்கள் இருக்கிறோம். எந்த நேரத்திலும் எறிகணையோ விமானக் குண்டு வீச்சோ நடத்தப்படக்கூடும். ஆகையால் இரவு நேரங்களில் எமது உறவினர் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளில் சென்று தங்கிக் கொள்கிறோம்"

"அரசாங்கத் தரப்பிலிருந்தோ தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தவிர்த்த இதர அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ எமக்கு எதுவித நிவாரண உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. நாங்கள் இங்கு வந்த உடனேயே சமைத்த உணவுகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கொடுத்தனர்" என்றார் சந்திரகுமாரி.

"உணவுப் பொருட்களை வாங்குவதற்காக இங்கு வேலை தேடுகிறோம். ஆனால் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது பிள்ளைகளுக்கான பாடப் புத்தகங்களை கொண்டு வரவில்லை. எதிர்வரும் டிசம்பரில் அவர்களுக்கு க.பொ.த. சாதாரண தரம் தேர்வு நடைபெற உள்ளது. எங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளோம்" என்றார் அவர்.

சந்திரகுமாரியின் அச்சத்தை வெளிப்படுத்தும் வகையில் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரம் பிரிவைச் சேர்ந்த மாணவி கோகிலவதனி தெய்வநாயகமும் கருத்துகளைத் தெரிவித்தார்.

"எங்கள் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலினால் எமது பாடசாலை பாரிய சேதமடைந்தது. நாங்கள் வெளியேறியபோது என்னுடைய எந்தப் புத்தகத்தையும் எடுத்துவரவில்லை" என்றார் அவர்.

"புத்தகங்களை எடுத்து வந்திருந்தாலும் கூட இந்த இடத்தில் என்னால் அமர்ந்து என் படிப்பைத் தொடர முடியாத நிலைதான் உள்ளது. நீண்டகாலமாக மாலை பயிற்சி வகுப்புகளைச் செல்லவில்லை. எனது தேர்வுகளுக்கு அது உதவியாக இருந்தது. எப்போதும் எனக்கு அச்சமாக இருப்பதால் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது" என்கிறார் அம்மாணவி.

சமூக ஆர்வலரான கதிர்காமன் சதாசிவம் கூறுகையில், "வெல்லாவெளி, புன்னகுளம், பீலி ஆறு, போறுகாமம், பீலிவேம்பு மற்றும் விவேகானந்தபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 15க்கும் மேற்பட்ட முறை இடம்பெயர்ந்துள்ளனர்" என்றார்.

"சுரவணையடி ஊத்து, தும்பன்கேணி, காந்திபுரம், களுமுந்தன்வெளி, திக்கொடி மற்றும் முனைத்தீவு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக அகதிகளாகத் தஞ்சமடைந்து வந்துள்ளனர்"

"இனப்பிரச்சனை தொடங்கியது முதல் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்துக்கு இழப்பு ஏற்படும் போதெல்லாம் எங்களைத் தண்டிப்பதும் தாக்குவதும் எமது வீடுகளை விட்டு எம்மை வெளியேற்றுவதாகவும்தான் செயற்படுகின்றனர். நிச்சயமற்ற சூழ்நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதியுமற்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்" என்றார் சதாசிவம்.

"மாணவர்களால் படிக்க முடியவில்லை. இந்த வாழ்க்கையையே மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம். என்றுதான் முடிவோ?" என்றார் அவர்.

பயிர்செய்கை செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த மக்களை விரட்டியடிக்கும் நோக்கத்துடன்தான் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்று கதிர்காமன் சதாசிவம் குற்றம்சாட்டுகிறார்.

"மண்டூரில் உள்ள சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எமது கிராமம் மீது கடந்த காலங்களில் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்துக்குப் பின்னரும் கூட தங்களுடைய முன்னைய நிலையிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்துக்கு நகர்ந்து புதிய காவலரண்களை அமைத்துள்ளனர்" என்றார் அவர்.

"எமது பிரதான தொழில் நெற்செய்கைதான். ஒவ்வொரு குடும்பமும் 5 ஏக்கர் அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். எங்களது வாழ்க்கையில் அரிசிக்குப் பற்றாக்குறையே இருந்ததில்லை. ஆனால் ஒரு நெல்மணி கூட இல்லாமல் இப்போது வீட்டை விட்டு வெளியேறி இருப்பது கவலை தருகிறது" என்றார் சதாசிவம்.

"எங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மட்டும்தான் இப்போது உதவுகிறது. கடந்த காலங்களில் வோர்ல்டு விசன் போன்ற அமைப்புகள் உதவின. இம்முறை அவர்கள் வரவில்லை"

"இது அறுவடைக்காலம். ஆனால் எமது வயல்களில் அறுவடை செய்ய இயலாமல் உள்ளோம். நாங்கள் எப்போது திரும்புவோம் என்று யாரேனும் அறிவார்களா? எங்களது பயிர்செய்கை நாசமாகிவிட்டது. எப்படி நாங்கள் வாழப்போகிறோம்?"

"சில விவசாயிகள் பெரும் எண்ணிக்கையிலான ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர். பெருந்தொகையான கடன் வாங்கித்தான் அதையும் செய்துள்ளனர். அறுவடை செய்ய இயலாத நிலையில் எப்படி அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?"

"சிலர் விரக்தியின் நிலையில் நின்று தற்கொலை முடிவிலும் உள்ளனர்" என்றார் கதிர்காமம் சதாசிவம்.

http://www.eelampage.com/?cn=28480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.