Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களவு போய்க் கொண்டிருக்கும் தாய் நிலங்கள். கோ.நாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களவு போய்க் கொண்டிருக்கும் தாய் நிலங்கள். கோ.நாதன்:-

05 ஜனவரி 2014



War%20house_CI.jpg

வட, கிழக்கில் உள்ள தமிழ்க் கிராமங்கள் ஒவ்வொன்றும் மிகவும் துரிதமாக பறி போய்க் கொண்டிருக்கின்றன. நிலங்கள் வாங்குதல் அல்லது  பூர்விக நிலத்தைப் பெறுதல் என்ற பெயரில் நாட்டின் அத்தனை பகுதிகளிலிருந்தும்  இன்னுமொரு இனம் படை படையாக வந்து இறங்கிக்  கொண்டிருக்கின்றது. தமிழ் நிலங்களை எல்லாம் அபகரித்தும், அபகரித்திக் கொண்டும் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மக்களை ஏமாற்றி வழக்கு தொடுத்து அக்காணிகளுக்கு உரிமை நகல் பத்திரங்களை தயாரித்து அபகரிக்கின்றார்கள். பலவந்த முறையில்  ஆயுதங்களால் பயம்  காட்டி கட்டாய முறையில் காணிகளிலிருந்து  எழுப்புகின்றார்கள. எந்த சக்தியிடம் அதிகாரம் இருக்கின்றதோ அந்த சக்தி பலாத்கார முறையில் ஒரு சிறு குழுவை  அல்லது சிறு இனத்தை தனது கட்டமைப்புக்குள் ஆள நினைக்கின்றது.

தமிழ் நிலங்களில் வாழும் பழங்குடி  தமிழ் மக்கள் தமது பழம் பெரும் கிராமங்களை விட்டு அச்சத்தால் வெளியேறுகின்றனர். வெளியேற முடியாதவர்களை வலுக்கட்டாயமாக வெளி ஏற்றப்படுகின்றனர். வெளி ஏறும் மக்கள் தெருக்களிலும், பொது மைதானங்களிலும் நாடோடிகள் போல் வாழ்கின்றனர். இலங்கையில் இடம் பெற்ற போரின் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பான்மை இனத்தாலும், அவர்களோடு இணங்கிவாழும் சிறுபான்மை இனத்தாலும்  தொடர்ச்சியான துன்புறுத்தல்களை அனுபவித்து வந்துள்ளனர்.

தமது நகர்ப் புற வாழ்வை தொலைத்தும் தமது நிலங்களை யுத்தத்தின் காரணங்களால் இழக்க நேர்ந்த குரூர நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் தொழில் செய்யும் எந்த  நிலையிலும் இருக்க வில்லை. அந்தக் குடும்பங்களின் குடும்ப பொறுப்புகளை சுமந்தவர்கள் கடத்தியோ, காணாமல் போயோ, சந்தேக நபராகவோ கைது செய்து இதுவரை எவ்வித தகவல் இல்லாத நிலையில் வறுமை, பிள்ளை வளர்ப்பு, பணக் கஷ்டம் என பல்வேறு நிலைமையில் அவர்களிடம் இருந்த ஒரே ஒரு சொத்து காணிப்பத்திரமாக இருந்தது. அதனையும்  மிகுதி உயிரின் ஜீவனோயத்துக்காய் மிகக் குறைந்த விலைகளில்  இன்னொரு இனத்திடம் விற்றல் அல்லது அடகு வைத்தல் நடவடிக்கைகளில்  ஈடுபட  நிர்ப்பந் திக்கப்பட்டுள்ளார்கள். அதனை சாதகமாகப் பயன்படுத்திய நில விற்பனை செய்யும் கும்பல் பயமுறுத்தி சொற்ப பணத்தைக் திணித்து வாங்குகின்றார்கள் அடகு வைத்தவர்கள் தமது பணத்தை போருக்கு முன்னரும், பின்னரும் மீளச் செலுத்த செல்லும் போது இல்லாமல் செய்வதும், காட்டி கொடுத்து பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனக் கூறியும் நிலப்பத்திரங்களை பிடுங்கி எடுத்துள்ளனர்.

ஈழத்து தமிழர் வரலாறு உன்னிப்பாக பார்க்க தொடங்கியது போராட்ட வரலாற்றுக்கு பின்னர் தான் ஒவ்வொரு தமிழர் வரலாறும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வரலாறு சிறப்பு  மிக்க தமிழ் நிலங்களின் மீது உலக கழுகு  கண்களின் பார்வை திருப்பி விட்டது.  அதனால் அபிவிருத்தி வடிவத்தில் முக்கிய நிலப்பகுதிகளை சூறையாடி அணுத் தளங்களையும், தொழில்த் தளங்களையும் முக்கிய கேந்திரம் வாய்ந்த இடங்களில் அமைப்பதற்கு முனைகிறார்கள்.

நிர்கதியாக இருந்த தமிழ் மக்கள் இன்னொரு முறை இயற்கை அச்சுறுத்தும் காட்டுப் பகுதிகளுக்கு இடம்  பெயர்ந்து வாழ்கின்றனர். முரண்பாடு நிலவிய காலத்தில் தங்கள் பாதுகாப்பு சம்பந்தமாக நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த தமது கிராமங்களை விட்டு வெளியேற நிர்பந்திக்கப் பட்டார்கள். இந்த துரத்தியடிப்பு திட்டமிட்ட சில இனத்தார்களின் ஒத்துழைப்புகளுடன் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக்கரமித்த மற்றைய இனத்தவன் தமிழர்  பூர்வீக குடிமனைகள் மீது   துவேசத்தை வெளிப்படுத்த சுவடுகளாய் இருந்த ஆலயங்களும் அடையாளமில்லாது அழிக்கப்பட்டுள்ளது.


30 வருட  யுத்தக் காலங்களை விட யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமக்கு தமிழர்கள் வாழும்  பூமி வேண்டுமென்று கொள்ளைக் கூட்டமாக வந்து தமிழ் நிலங்களை சொந்தமாக்கி கொள்கின்றார்கள.; தமிழர்கள் பாரம்பரிய கிராமங்கள் தமிழர்களுக்கு அந்நிய பூமியாகிறது. தமிழர்கள் சொந்த கிராமங்கள் தற்பொழுது புதினம் பார்ப்பதற்கு கூட செல்ல முடியாத அபல நிலையிலுள்ளது.

வட கிழக்கு கரையோரமாக இடம் பெற்ற கடற் கோளினால் தமிழ் கிராமங்கள் பல காவு கொள்ளப்பட்டன. அதனால் மக்கள் இடம்பெயர்ந்து  சில மைல் தூரத்தில் புதிய குடியிருப்புக்களை அமைத்து கொண்டுள்ளனர் மற்றைய இனத்தின் கபட புத்திக்கு அடிமையான தமிழ் துரோகிகள் கடற்கரை நிலப் பகுதிகளை  பயம் காட்டி நிலங்களை ஒவ்வொரு துண்டு துண்டாக வாங்குகின்றார்கள். இந்த கபட செயற்பாட்டினால் அவர்களுக்கு சொற்ப பணத்தை கொடுத்து காணிப் பத்திரத்தையும் கைப்பற்றுகிறார்கள். தமிழ் நில வியாபாரிகள் இன்னொரு இனத்துக்கு பெரும் பணத்துக்கு விற்கின்றனர். வடகிழக்கில் முக்கால்வாசிப் பகுதி இப்படி கைமாறப்பட்டு விட்டது.

வாங்கப்பட்ட தமிழ் காணிகளில் புதிய புதிய சுற்றுலா விடுதிகளும், மது பானக்கடைகளும், விபச்சார விடுதிகளும் இயங்கி கொண்டியிருக்கின்றன.

அவர்கள் இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அருகாமையிலுள்ள காட்டுப் பகுதிகளையும் தடுப்பு வேலிகள் போட்டு அதற்கான பத்திரங்களையும் பெற்று இருக்கின்றார்கள். மிக முக்கியமான தமிழர் துறைமுகங்களாக பயன்படுத்தி வந்த துறைமுகங்களையும் கைப்பற்றியுள்ளனர். தமிழர்கள் ஆர்ப்பட்டங்கள் செய்தும் எவ்விதமான பயனும் அடையவில்லை. முன்னின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

வட கிழக்கு தமிழர்களின் எல்லா நிலமும், வளமும் களவாடப் பட்டுக் கொண்டுதான் இன்னும் இருக்கின்றது. எதிர்காலத்தில் தமிழர்கள் குந்தி இருப்பதற்கு ஒரு இடம் இல்லாமல் தான் போகப் போகின்றது. என்பது மட்டும் எல்லோருடைய மனதிலும் திகிலாய் ஓடிக் கொண்டிருக்கும்.......
 
 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101287/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.