Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி படைத்தளம் அருகே மோதல்

Featured Replies

பலாலி படைத்தளம் அருகே இரவு 11:30 இருந்து 12:00 மணி வரை மோதல் சம்பவம் இடம் பெற்றதாக தமிழ்நெற் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்கதலை தொடர்ந்து படையினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19406

பலாலிக்கு அருகே நேற்றிரவு நேரடி மோதல்

பலாலியிலிருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள வளலாய்ப் பகுதியில் நேற்றிரவு நேரடி மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு 11.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை இந்த மோதல் நடைபெற்றுள்ளது.

சுமார் 30 நிமிட நேரங்களிற்கு மேலாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையுமு; குண்டு வெடிப்புக்களையும் தம்மால் கேட்ட முடிந்ததாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பலாலியில் உள்ள சிங்களப் படைததரப்பு நிலைமை தமது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடும் மோதல்.

-------------------------

இலங்கையில் கேந்திர முக்கிய திருகோண மலை துறைமுகம் அமைந்துள்ள கொடியார் குடாவின் தென்முனையில் இருக்கும் சாம்பூர் என்ற புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊரை குறிவைத்து ராணுவம் நேற்று தாக்கு தல் நடத்தியாகவும் இரு தரப்புக்கும் மோதல் கடுமையாக நடப்பதாகவும் நேற்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இதில் குறைந்தது நான்கு வீரர்கள் கொல்லப் பட்ட தாகவும் 41 பேர் காயம் அடைந்ததாக வும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் விடுதலைப் புலிகள் எந்த நேரத்தி லும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கொழும்பு அனைத்துலக விமான நிலையம் அருகில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த ஆயுதக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

கொழும்பு நகரப் பாதுகாப்புக்கு என ëஜனரல் லாரன்ஸ் பெர்னாண்டோ தலைமை யில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் கொழும்பு நகரில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

அவர்கள் கொழும்பின் முக்கியப் பகுதி களில் தடை ஏற்படுத்தி வாகன சோதனையை தீவிரமாக்கி உள்ளனர். உள்ளூர் போலிசாரு டன் முப்படை வீரர்களும் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் தொடர்ந்து நடத்தப்படும் என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்க கூறினார்.

சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக்க ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள் ளது. கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். 78 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது தொலைபேசி உரையாடல் களும் ஒட்டுக் கேட்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு பாதுகாப்புக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கை களுக்கான தலைவராக ëஜனரல் பெர் னாண்டோ நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், கொழும்பு நகரின் முக்கிய வீதிகளில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு முப்படைகளும் இலங்கை காவல்துறையினரும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்றார்.

போராளிகளின் தாக்குதலை எதிர் கொள்ள இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவையானதாக இருப்பதாக அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறினார்.

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் உதவி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த பெரும் பாலான அனைத்துலக அரசு சார்பற்ற நிறு வனங்கள், தங்கள் பணிகளை இடை நிறுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளன.

இந்த அரசு சார்பற்ற நிறுவனங்களின் முழுமையான வெளியேற்றத்தால் குடா நாட் டில் நடைபெற்று வந்த உதவி மற்றும் நிவாரணப் பணிகளும் மேம்பாட்டுத் திட்டங் களும் தடைபட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMILMURASU-SINGAPORE.

பலாலிக்கு அருகே நேற்றிரவு நேரடி மோதல்

பலாலியிலிருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள வளலாய்ப் பகுதியில் நேற்றிரவு நேரடி மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு 11.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை இந்த மோதல் நடைபெற்றுள்ளது.

சுமார் 30 நிமிட நேரங்களிற்கு மேலாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையுமு; குண்டு வெடிப்புக்களையும் தம்மால் கேட்ட முடிந்ததாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பலாலியில் உள்ள சிங்களப் படைததரப்பு நிலைமை தமது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது

http://sankathi.org/news/index.php?option=...id=249&Itemid=1

பலாலி விமானத் தளத்துக்கருகில் நிலக்கீழ் பதுங்கு குழிகளை படையினர் அமைத்து வருகின்றனர்.

பலாலி விமானத்தளத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமானத் தளத்துக்கருகில் நிலக்கீழ் பதுங்கு குழிகளை படையினர் அமைத்து வருகின்றனர். கடந்த 11ஆம் திகதி முதல் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த மோதலையடுத்து பலாலி விமானத்தளம் மீது புலிகள் ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதனால் படையினரின் விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.சில தினங்களுக்கு முன்னரே விமானங்கள் பலாலி விமானப்படைத்தளத்தில் தரையிறங்க ஆரம்பித்தன. நேற்று பலாலி விமானப் படைத்தளத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து ஆயுததளவாடங்கள் இறக்கப்பட்டதாகவும் காயமடைந்த படையினர் ஏற்றப்பட்டதுடன் படையினரது சடலங்களும் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ராய்ட்டர் செய்தி தெரிவிக்கின்றது. காயமடைந்த 12 படையினரே விமான மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இணைப்பு : newstamilnet.com

Tuesday, 29 Aug 2006 USA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.