Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்: வைகோ

Featured Replies

திருச்சி: ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.
 
ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் ‘நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
 
முதல் கட்டமாக மாவட்ட அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இறுதி போட்டி நடந்தது.
 
போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாநில அளவில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிறன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது.
 
விழாவுக்கு ம.தி.மு.க மாணவர் அணி மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் மண்டல அளவில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் உரையாற்றி தங்களது பேச்சுத்திறமையை வெளிப்படுத்தினார்கள்.
 
முதல் பரிசு ரூ.1லட்சம்
 
முதல் இடத்தை பிடித்த மாணவர் சரவண சித்தார்த்துக்கு ரூ.1 லட்சம், 2-வது இடத்தை பிடித்த ராமேசுவரம் மாணவி தஸ்லீமா நஸ்ரீனுக்கு ரூ.50 ஆயிரம், 3-வது இடத்தை பிடித்த திண்டுக்கல் மாணவர் பிரபாகருக்கு ரூ.25 ஆயிரம், 4-வது இடத்தை பிடித்த தாம்பரம் மாணவி இலக்கியாவுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசினை வைகோ வழங்கினார். மற்ற சாதனையாளர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார்.

மத்திய அரசு காரணம்
 

பின்னர் மாணவர்களிடையே பேசிய வைகோ கூறியதாவது: வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது இலங்கைக்கு ராணுவ உதவியோ, பணத்திற்காக ஆயுதமோ விற்பனை செய்யமாட்டோம் என அறிவித்தார். அவர் பிரதமராக இருக்கும் வரை இந்த உறுதிமொழியை பாதுகாத்தார். ஆனால் 2004-ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமர் ஆனதும் சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர்தான் காரணம்.

 

தோல்வி கிடையாது
 

டெல்லியில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசியபோது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். இதற்கு காரணமானவர்களை மக்கள் தீர்ப்பாயம் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டேன். ஈழப்போர் முள்ளிவாய்க்காலோடு முடிவு பெற்றுவிட்டது என நினைக்க வேண்டாம். முள்ளி வாய்க்கால் மூலம் புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. போராளிகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. தமிழீழம் அமைப்பதற்கு உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர்வதை நான் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும்.

 

ஊழலை வெல்ல வேண்டும்
 
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தட்டிக்கேட்க தயங்க கூடாது, ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் பாராளுமன்ற தேர்தல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எந்த களத்தில் இருந்தாலும் நாங்கள் முழு மன வலிமையோடு இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.
 
கட்சி சார்பற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய மாணவர்கள் அனைவரும் வைகோவினை தலைவர் என்றே அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வைகோவை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்..!


# எங்களிடம் இருக்கும் ஆயுத குவியலுக்கு நிகரானவர் வைகோ 
-தமிழ்ஈழ தேசிய தலைவர்



1. என்னோடு இருக்கும் 200 MPகளுக்கு சமமானவர் வைகோ 
- இந்திரா காந்தி

2.வைகோ வை போன்ற நேர்மையான தலைவர்களின் கைகளில் தான் எதிர்கால அரசியல் இருக்கிறது 
- வி பி சிங்

3.வைகோ வை போன்ற போராட்டட குணம் கொண்டவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது இல்லை 
-ராஜீவ் காந்தி

4.எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ 
-நரசிம்ம ராவ்

5.வைகோ வை போன்ற திறமைசாலிகள் மத்திய அமைச்சரவையை அலங்கரிக்க வேண்டும் 
-முரளி தியோரா

6.அரசியலை மக்கள் பணிக்கான தளமாக பார்ப்பவர் வைகோ 
-பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங்க் பாதல்

7.வைகோ வை என் நண்பனாக பெற்றது நான் செய்த பாக்கியம் 
-உமர் அபுல்லாஹ்

8.என் 70 ஆண்டு கால பொது வாழ்கையில் நான் சந்தித்த மிக சில லட்சியவாதிகளில் வைகோ முக்கியமானவர்
- ஹர்கிசன் சிங்க் சுர்ஜித்

9.பதவி வெறி பிடித்த அரசியல் வாதிகளுள் வைகோ மாறுபட்ட கொள்கைவாதி 
-சோம்நாத் சட்டர்ஜி

10.இந்திய வில் கொள்கை வலி அரசியலை முநேடுக்கும் அரசியல் தலைவர்களில் வைகோ வும் ஒருவர் அவரை என் மகனாகவே கருதுகிறேன் 
-அடல் பிகாரி வாஜ்பாய்

11.வைகோ வை போன்ற தலைவரை பெற்றதற்காக தமிழ் நாடு பெருமை கொள்ள வேண்டும் ,என்னை ஒவ்வொரு முறை சந்தித்த போதும் மக்கள் பிரச்னை குறித்தே கோரிக்கை வைப்பார் ,i salute vaiko 
-பிரதமர் மன்மோகன் சிங்க்

12.விலை போகாத போராளி வைகோ 
-அத்வானி

13.அண்ணா வின் கொள்கை விளக்கை ஏற்ற வந்த அன்பு தம்பி வைகோ 
-கருணாநிதி

வைகோ வின் மீது எனக்கு அன்பும் நன் மதிப்பும் எப்போதும் உண்டு 
-முதல்வர் ஜெயலலிதா

14.பெரியாரின் உண்மையான வழிதோன்றல் வைகோ 
-தமிழருவி மணியன்

15.முழுமையான தமிழ் இலக்கியங்களை கற்ற ஒரே அரசியல் தலைவர் வைகோ தான் 
-நெல்லை கண்ணன்

16.என் இருதய சிகிசைக்கு எல்லோரும் கை விட்ட பின்பு தன சொந்த பணத்தை குடுத்து என் உயிரை காபற்றியவர் வைகோ ,என் இதயம் சாகும் வரை வைகோ வைகோ என்று தான் துடிக்கும் 
-நடிகர் எஸ் எஸ் சந்திரன்

17.வைகோ ஒருவரை தான் எதிர்கால நம்பிக்கையாக பார்கிறேன் 
-நடிகர் மணிவண்ணன்

18.வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின் வாங்கியதே இல்லை .அவர் உண்மையான ,நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஒரு நல்ல தலைவர் .நமக்கான மாற்று அரசியலை முன்யேடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்
-கவிஞர் தாமரை

19.வைகோ அதிகாரத்துக்கு வரும் சமயம் தான் தமிழ் இனத்தின் இழி நிலை போக்க படும் -கொளத்தூர் மணி
20.வைகோ தமிழர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் 
-பழ.நெடுமாறன்

21.பெரியாருக்கு பின் நான் ஏற்று கொண்ட ஒரே தலைவர் வைகோ தான் 
-பெரியார்தாசன்



22.என்னை பாதித்த குருஞ்சிமலர் நாவலின் கதாநாயகன் அரவிந்தனை வைகோ வின் ருபத்தில் பார்க்கிறேன் 
-வலம்புரி ஜான்

1520812_592643587475264_171034573_n.jpg

https://www.facebook.com/photo.php?fbid=592643587475264&set=a.468364469903177.1073741828.468294273243530&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.