Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றவேண்டும்,

Featured Replies

சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்: ஜெயதேவ உயங்கொட

சிறிலங்காவின் தற்போதைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சிங்களப் பேராசிரியரான ஜெயதேவ உயங்கொட வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் ரெடிஃப் இணையத்தளத்துக்கு அவர் அளித்த நேர்காணல்:

இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காலனியாதிக்க காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை மறுசீரமைக்க வேண்டும்.

ஆனால் சிங்கள அரசியல் சக்திகள் அரச கட்டமைப்பை மாற்றத் தயாராக இல்லை. 25 ஆண்டுகாலம் இனப்பிரச்சனை நீடிக்கின்ற போதும் கூட சிங்கள அரசியல் சக்திகள் இம்முடிவுக்கு வரவில்லை.

தற்போதைய சிறிலங்கா அரசியல் யாப்பானது ஒற்றையாட்சியைத்தான் வரையறுக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளோ அதற்கு அப்பாலான பார்வையைக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பிலான நிலைப்பாட்டில் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பாரிய இடைவெளி உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கு மாகாண அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம் என்று முற்போக்கான சிங்கள அரசியல்வாதிகள் கூறுவதைக் கூட ஏற்கமாட்டார்கள். சமமான அதிகாரம் பகிரப்படுவதை சிங்களவர்கள் ஏற்கமாட்டார்கள்.

எந்த ஒரு அமைதி முயற்சியிலும் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். தற்போதைய அரசாங்கமாக இருக்கட்டும்- முன்னைய அரசாங்கமாக இருக்கட்டும்- விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களை நடத்தும்போது தெளிவான அரசியல்திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை.

தற்போதைய அரசாங்கமானது 2002 ஆம் ஆண்டு அமைதி முயற்சிகள் சீர்குலைந்த நிலையில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த அரசாங்கத்திடம் அமைதி முயற்சியை முன்னெடுக்கும் சவால் உள்ளது. ஆனால் தற்போதைய அரசாங்கமானது அத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நான் கருதவில்லை.

சிங்களவர்கள் அரசியல் உத்திரவாதத்தை கோருகின்றனர். தமிழர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளும் சிங்களவருடனான எந்த ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை கடந்த காலத்தினூடாக சுட்டிக் காட்டுகின்றனர். மொசாம்பிக் பிரச்சனையில் தென்னாப்பிரிக்க பிராந்தியத்திலிருந்து அரசியல் உத்திரவாதம் அளிக்கப்பட்டதைப் போல் தெற்காசிய பிராந்தியத்திலிருந்து அரசியல் உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர்.

தெற்காசியாவில் தனியரசு சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகள் நன்கு அறிவார்கள். ஒரு துணை அரசாங்கத்தை நோக்கியதாக அரசியல் உத்தியை கொண்டுள்ளனர். அது தமிழீழம் என்று அழைக்கப்படுமே தவிர தனியரசாக இருக்காது. இந்த யோசனையை சிங்களவர்கள் ஏற்பது மிகவும் கடினம்.

1987 மற்றும் 1990-களைப் போல் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. அவர்கள் அரச கட்டமைப்பிலும் தேசக் கட்டமைப்பிலும் ஈடுபாட்டுடன் உள்ளனர். தமிழர் விடுதலைப் போராட்டத்தின் இலக்குகளை சிறிலங்காவோ அல்லது பிரதேச- சர்வதேச இராணுவ கூட்டு மூலமாக சிதைக்கப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்றார் உயங்கொட.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.