Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காக்கிசட்டை ரவுடிகளை பணி நீக்கம் செய்க - சென்னையில் 7.01.2014 கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

இடம்: சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்
காலம் 7.01.2014 செவ்வாய் காலை 10. மணி
தலைமை: திரு. பழ.நெடுமாறன் அவர்கள், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்சி அவர்கள் 20.12.2013 அன்று சென்னை இலயோலாக் கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறை யினர் ஈழ ஆதரவுத் தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் வேலையில் இறங்கினர்.

20.12.2013 நள்ளிரளிவு 2.00 மணிக்கு திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் அவர்களை அவரது இல்லத்தில் கைது செய்து, எங்கே கொண்டு போகிறோம் என்று அவருடைய குடும்பத்தினருக்குச் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டனர். கைது செய்த உடனே திரு கவுதமன் அவர்களின் கைப்பேசியைக் காவல் துறையினர் பிடுங்கிக் கொண்ட னர்.

தமிழின உணர்வாளரான தமிழினியன் அவர்களை அவரது இல்லத்தில் அன்று நள்ளிரவு 2.05 க்கு கைது செய்து காவல் வண்டியில் ஏற்றும் போது அவர் தந்தை யார் “இந்த நடுச்சாமத்தில் என் மகனை எங்கே அழைத்துக் கொண்டு போகிறீர்கள்” என்று கேட்டதற்கு காவல்துறையினர் விடை சொல்லவில்லை.

இலயோலாக் கல்லூரி மாணவர்கள் பார்வைதாசன், கவுதமன், ரேமண்ட், ரா. மோகனச்சந்திரன், சட்டக்கல்லூரி மாணவர் ஜோதிலிங்கம் ஆகியோரை கைது செய்த போது பெற்றோர்கள் அழ அழ, சரியான உடுப்புகள் கூட அணிய விடாமல் இழுத்துச் சென்றனர்.

பின்னர் அனைவரையும் இராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீபாலாஜி லாட்ஜ் என்ற தனியார் விடுதியில் ஓர் அறையில் அடைத்து வைத்தனர். அதன் பிறகு எல்லோரையும் அந்த இரவு நேரத்தில் காவல் ஊர்தி ஒன்றில் ஏற்றினர். அப்போது அங்கு வந்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் திரு ஞானசேகரன் தமிழினியனை வண்டியிலிருந்து இழுத்து வரச் செய்து தெரு விளக்குக் கம்பத்தின் கீழ் நிறுத்தி “ நீதான் பத்திரிகைகளுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தவனா” என்று திட்டிக் கொண்டே, அறைந்தார் முழங்காலை மடித்துக் கொண்டு ஓங்கி ஓங்கி மூன்று முறை உயிர் நிலையில் பலமாக மோதித் தாக்கினார். உயிர் போவது போல் வலி ஏற்பட்டு தமிழினியன் கதறிய போது, சூளைமேடு காவல் ஆய்வ்வாளர் ஸ்ரீகாந்த் கையை மடக்கிக் கொண்டு தமிழியன் முதுகில் ஓங்கி ஓங்கிக் குத்தினார். மற்ற காவல் துறையினரும் சூழ்ந்து கொண்டு தமிழினியனைத் தாக்கினர்.

தமிழினியன் வலிதாங்காமல் கதறுவதைக் கண்டு மனம் பொறுக்காமல், “ ஏன் இப்படி அந்தப் பையனை அடிக்கிறீர்கள் அவன் என்ன குற்றம் செய்தான்” என்று கேட்ட திரு கவுதமனை ஆபாசச் சொற்களால் திட்டி அவமானப் படுத்தினார்.

அதன்பிறகு வேப்பேரி காவல் நிலையத்தில் கொண்டு போய் அனைவரையும் அடைத்து விட்டார்கள். கைது செய்யப்பட்டோர் குடும்பத்தினரும் நண்பர்களும் அந்த நள்ளிரவிலிருந்து இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார்கள். வேப்பரி காவல் நிலையம் உட்பட பல காவல் நிலையங்களில் போய்க் கேட்டும் இங்கில்லை என்று காவல் துறையினர் கைவிரித்து விட்டார்கள்.

வேப்பரி காவல் நிலையத்தில் காலை 8 மணியிலிருந்து தாகத்திற்குத் தண்ணீர் கேட்ட மாணவர்களுக்கு 10.30 மணி வரை குடிநீர்த் தராமல் கொடுமைப்படுத்தினர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி சென்னையை விட்டுப் போன பிறகே இவர்களை விடுவித்தனர்.

இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பிரணாப் முகர்சிக்குக் கருப்புக் கொடி காட்டப் போவதாக மாணவர்கள் சிலர் காவல் துறையில் அனுமதிக் கேட்டார்களாம். காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் அம்மாணவர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டார்களாம். அதன் பின்னும் சென்னை மாநகரக் காவல்துறையினர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மனித உரிமைப் பறிப்பு தவறாக பயன்படுத்தி, வன்முறையாட்டம் போட்டுள்ளார்கள்.

தமிழீழ ஆதரவாளர்கள், தமிழின உணர்வு கொண்ட மாணவர்கள் ஆகியோரை அச் சுறுத்தி வைப்பதற்காக இந்த சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழக அரசுக்கு நமது கோரிக்கை.

சட்டவிரோதமாக நடந்து கொண்டு அப்பாவிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி, சட்டவிரோதமாகத் தனியார் இடத்தில் அடைத்து வைத்து கைது விவரத்தை வீட்டார்க்குச் சொல்ல மறுத்த நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ஞானசேகரன், சூளைமேடு ஆய்வாளர் ஸ்ரீ காந்த் உள்ளிட்ட காவல்துறையினரை உடனடியாக இடை நீக்கம் செய்து முறையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

மனித உரிமை, சனநாயக உரிமை ஆர்வலர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாக ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!
ஆர்பாட்டக் குழுவினர்

பங்கேற்போர்
தலைமை: திரு பழ.நெடுமாறன் அவர்கள்- தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

மல்லை சத்தியா
- துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க.
சீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர்.
த.வெள்ளையன் - தலைவர், த.நா.வ.பே.
பெ.மணியரசன் - தலைவர், த.தே.பொ.க
கோவை. இராமகிருட்டிணன் - பொதுச்செயலாளர், த.பெ.தி.க
விடுதலை இராசேந்திரன் - பொதுச்செயலாளர், தி.வி.க
தியாகு. - பொதுச்செயலாளர், த.தே.வி.க
சைதை கோ.சிவராமன் - பொதுச்செயலர், த.வா.க
SM பாக்கர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
குணங்குடி ஆர்.எம்.அனிபா - துணைத்தலைவர், த.மு.மு.க
குடந்தை அரசன் - தலைவர், வி.த.பு
கி.த.பச்சையப்பனார்
ஓவியர் வீரசந்தானம்
இயக்குநர் மு.களஞ்சியம்
தமிழ்நேயன்
திருமுருகன் காந்தி - ஒருங்கிணைப்பாளர்,
மே-17
வேலுமணி - பொதுச்செயலர், த.எ.இ
அருண்சோரி - தலைமைக்குழு, த.நா.ம.க
அதியமான் - தலைவர், த.மு.க.
செந்தில் - தலைவர், சேவ் தமிழ்
வழக்கறிஞர் தடா சந்திரசேகர்
வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் சங்கரசுப்பு
வழக்கறிஞர் கோ.பாவேந்தன்.
 
Joe britto
(facebook)
  • தொடங்கியவர்

1607053_691000600939552_788325878_n.png

 

(facebook)


கடந்த டிசம்பர் 20 அன்று ”இனப்படுகொலையாளன்” பிரணாப் முகர்ஜி” சென்னை இலயோலா கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு வருகை தரவிருந்ததை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி திரைப்பட இயக்குநர் திரு. வ.கவுதமன் மற்றும் இலயோலாக் கல்லூரி மாணவர் களான பார்வைதாசன், ரேமண்ட், கவுதம், மோகன வசந்த் ஆகியோரையும், ஜோதிலிங்கம் எனும் சட்டக் கல்லூரி மாணவரையும், பிரபாகரன், கனகராஜ் ஆகிய பொறியாளர்களையும், இனவுணர்வாளர் தமிழினியனையும் காவல் துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளது. இதில் இயக்குநர் கெளதமனை தகாத வார்த்தைகளால் திட்டியும், தமிழினியனை அடித்தும் துன்புறுத்தியுள்ளது.

வருங்காலத்தில் இது போன்ற அடக்குமுறைகளை நாம் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும். இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஒவ்வொருவரும் அடக்குமுறைக்கு ஆளாகும் சக தோழர்களோடு துணை நின்று அதனை எதிர்கொள்ள வேண்டியது அவசியமானது.

தோழர்களே!! கட்சி /இயக்க பாகுபாடின்றி அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுதிரள்வோம்.இந்த அநீதிக்கு எதிராக நாளை (7.1.2014) காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே17 இயக்கம் கலந்து கொள்கிறது. அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

 

1521548_10202907715997443_610035142_n.jp

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.