Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்பாட்டம்

Featured Replies

6 ஜனவரி 2014

 

img1140106034_1_1.jpg

 

நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலவீதி பெரியார்சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை நகர போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது. தீட்சிதர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் மேலரதவீதியில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.செந்தில் தலைமையில் மனித உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்த 58 பேரை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ தெரிவித்தது: தமிழகஅரசு, சுப்பிரமணியசாமி, தீட்சிதர்கள் ஆகிய மூவரும் கள்ளக்கூட்டு வைத்து உச்சநீதிமன்றத்தில் அரசு சரியாக வழக்குரைஞர் நியமித்து வாதாடாததால் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகஅரசின் இந்நடைமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தமிழகஅரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். தீண்டாமை, மொழி உரிமை ஆகியவற்றை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை திறக்க வேண்டும். அங்கு அப்புறப்படுத்தப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் அமைக்க வேண்டும். நடராஜர் கோயிலை மீண்டும் தமிழகஅரசு ஏற்று நடத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என சி.ராஜூ தெரிவித்தார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1401/06/1140106034_1.htm

Edited by துளசி

  • தொடங்கியவர்

தில்லை வழக்கு: அதிமுக அரசு அலட்சியம் என திமுக குற்றச்சாட்டு

 

131209133655_chidambaramtemplegoldensanc

 

சிதம்பரம் நடராஜர் ஆலயம் தொடர்பான வழக்கில் அஇஅதிமுக அரசு போதிய அக்கறை காட்டாததால் தான் இந்திய உச்சநீதிமன்றம் அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினை கையகப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை இரத்து செய்துவிட்டது என திமுக தலைவர் மு கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

 

கடந்த 2009-ல் திமுக ஆட்சி காலத்தின் போது தமிழக அரசால், கோயிலின் பணிகளை மேற்பார்வையிட அதிகாரி ஒருவரை நியமித்து உத்திரவிட்ட ஆணை செல்லாது, ஆனால் தீட்சதர்கள் நிர்வாகத்தின் மீது புகார் கூறப்படும் பட்சத்தில், அந்தப் புகார்களை விசாரிக்க தற்காலிக அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு எனவும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இது குறித்து இன்று செவ்வாய் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உத்திரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்பேயே எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோதே சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5–8–1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தீட்சிதர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். "கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலேயே கோயிலுக்குச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்" என்று அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது என நினைவுகூர்ந்திருக்கிறார்.

 

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கெதிராக தீட்சதர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் நிலையிலேயே தானும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியும் உடனடியாக தமிழக அரசு வீண் கால தாமதம் செய்யாமல், மூத்த வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்ததை இன்றைய தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் கருணாநிதி, ஆனால் அஇஅதிமுக அரசு "என்ன காரணத்தாலோ" இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே நேற்றைய தீர்ப்பு எனக்கூறியிருக்கிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140107_chidambaramdmk.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.