Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும்’ திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

Featured Replies

05.01.2014

 

romdoss0412.jpg

 

விழுப்புரம்

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று திண்டிவனத்தில் நடந்த மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

அரசியல் எழுச்சி மாநாடு

திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் வ.உ.சி. திடலில் நேற்று மாலை மாநில இளம்பெண்கள் அணி துணை செயலாளர் பொன்.மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா வரவேற்றார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம்பெண்கள் அதிக விதவைகளாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மதுதான். மதுவை குடிக்க சொல்கிற கட்சிகளை அப்புறப்படுத்தும் காலம் வந்தாச்சு. இதையெல்லாம் மாற்றும் முழுபொறுப்பு பெண்களிடம் உள்ளது.

தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்கள் கொடுக்கிற பணத்தை வாங்கிவிட்டு கவுரவத்தையோ, நட்பையோ விற்றுவிடாதீர்கள்.

ஓட்டு விற்பனைக்கு அல்ல

ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும், ‘எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்தையும், மானம், மரியாதையுடன் வாழ்கிறோம் என்ற வாசகத்தையும் பலகையில் எழுதி தொங்கவிடுங்கள். தமிழ்நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கு பதிலாக மதுவை கொடுத்து ஏழையை ஒழிக்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. கடந்த காலங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மது குடித்தார்கள். ஆனால் தற்போது பள்ளியில் படிக்கின்ற 13 வயது மாணவன் மது குடிக்கிறான்.

மதுக்கடைகள் மூடப்படும்

ஒரு முறை பா.ம.க.விற்கு வாக்களித்து கோட்டையில் உட்கார வையுங்கள். முதல்–அமைச்சரானதும், மதுவை ஒழிப்பது தான் முதல் கையெழுத்தாக போடுவோம். பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட சம்பவங்கள் குறையும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வி, கட்டணமில்லா கல்வி, சுமையில்லா கல்வியை இலவசமாக கொடுப்போம். சிறந்த மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு விதை, மருந்து, உரம் உள்ளிட்டவைகளை இலவசமாக கொடுப்போம். இதன் மூலம் தமிழ்நாடு வளர்ச்சியடையும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் செந்தமிழ்செல்வன், ஏழுமலை, கருணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, பா.ம.க. வேட்பாளர் வடிவேல்ராவணன், மாநில மகளிரணி தலைவர் நிர்மலா, செயலாளர்கள் காசாம்பு, சிலம்புச்செல்வி, மாவட்ட செயலாளர் மலர்சேகர், கவுன்சிலர்கள் ஜெயராஜ், சரவணன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.
 

http://www.dailythanthi.com/2014-01-04-%2527PMK-Our-government-has-closed-the-bars%2527

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.