Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிப்ரவரி 8-ல் சென்னை வருகிறார் நரேந்திர மோடி

Featured Replies

குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘’பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=114361

  • தொடங்கியவர்

சென்னையில் பிப்ரவரி 8–ந்தேதி நரேந்திர மோடி பொதுக்கூட்டம் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

 

சென்னை

 

சென்னையில் பிப்ரவரி 8–ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

பா.ஜனதாவில் இணைந்தனர்

 

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் பல கட்சியில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும் அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர்.

 

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகளும், சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் சி.கிருஷ்ணன் தலைமையில் வக்கீல்களும் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்கள் கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் துணைத்தலைவர் சக்கரவர்த்தி, மாநிலச்செயலாளர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம், அலுவலக செயலாளர் சர்வோத்தமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

 

இழப்பீடு தொகை

 

வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை முறையாக கொடுக்கப்படவில்லை. 60 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு என்றால் மட்டுமே பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பதை மாற்றி, தனிப்பட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் ஒப்பந்ததாரர்கள் மணல் விற்பனை செய்வதால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தற்போதைய மணல் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசே நேரடியாக மாவட்ட கலெக்டர் மூலம் மணல் விற்பனை செய்ய வேண்டும்.

 

நரேந்திரமோடி வருகை

 

சுவாமி விவேகானந்தரினன் 150–வது ஜெயந்தி விழா ஜனவரி 12–ந்தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினர் விவேகானந்தர் படத்திற்கு மாலை அணிவித்து, அவரை பற்றி சொற்பொழிவாற்றுவார்கள். அப்போது, மத்தியில் ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான அரசு அமைய வேண்டும் என்றும், அதற்கு நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்கப்படும்.

 

பிப்ரவரி மாதம் 8–ந்தேதி தமிழகத்திற்கு பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வருகிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:–

 

கூட்டணி பேச்சு

 

கேள்வி:– ம.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜனதா கட்சி பூர்வாங்க பேச்சு வார்த்தை நடத்தியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளாரே?.

பதில்:– அது உண்மைதான். இன்னும் 2 நாட்களில் ம.தி.மு.க.வுடன் அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.

 

கேள்வி:– தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷை இன்று (நேற்று) நீங்கள் சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறதே?.

பதில்:– தே.மு.தி.க.வுடன் முன்பு பேசினோம். ஆனால், இப்போது எதுவும் பேசவில்லை. இன்று நான் யாரையும் சந்திக்கவும் இல்லை.

 

எப்போது முடியும்?

 

கேள்வி:– பா.ஜனதா எந்த கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது?.

பதில்:– இந்திய ஜனநாயக கட்சியுடன் பேச்சு வார்த்தை முடிந்துள்ளது. ம.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை தொடர்கிறது. இதேபோல், தே.மு.தி.க., பா.ம.க., கொங்குநாடு முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

 

கேள்வி:– கூட்டணி பேச்சு வார்த்தை எப்போது முடியும்?.

பதில்:– இம்மாத இறுதியிலோ, அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை முடிந்துவிடும்.

 

கேள்வி:– நரேந்திரமோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா?.

பதில்:– கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

 

கேள்வி:– சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு கூறியுள்ளதே?.

பதில்:– இடஒதுக்கீடு இல்லை என்றால் பாதிப்பு ஏற்படும். இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.dailythanthi.com/2014-01-08-In-Chennai-February-8---on-Narendra-Modi-General-meeting

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.