Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவா குறூப்பா நாமா? திருமறை கலாமன்றத்திற்கு வாருங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆவா குறூப்பா நாமா? திருமறை கலாமன்றத்திற்கு வாருங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை!

யோ.கர்ணன்

 

 

இப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இலக்கிய கூட்டங்களிற்கு செல்ல மிகுந்த தயக்கமாகவும் அச்சமாகவும் இருக்கின்றது. அச்சம் குறித்த விரிவான பதிவொன்று எழுதலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தயக்கம் குறித்து உடனடியாக எழுத வேண்டியதாகி விட்டது. இலக்கிய கூட்டங்களிற்கு செல்வதற்கு எதனால் தயக்க வேண்டியுள்ளது என்பது குறித்து இப்பொழுது சிறிய குறிப்பொன்று. அச்சம் குறித்து பின்னர் விரிவாக எழுத வேண்டும்.

 

அண்மையில் நண்பரொருவரிற்கு நேர்ந்த துயரமிது. யாழ்ப்பாணத்தில் அவர் புத்தக வெளியீடு நடத்தினார். அவர் பிறப்பில் ஒரு இந்துவாக இருக்க வேண்டும். இலக்கியவாதியாகிற்றே. இப்பொழுது ஒரு மதமும் கிடையாது. அதற்காக நாத்திகரும் கிடையாது. கவிதை எழுதுபவர்கள் ஜோல்னாப்பை வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியம் மாதிரியும், நான் தமிழ்சினிமா பார்ப்பதில்லை என்றோ, இவர்கள் எல்லாம் என்ன எழுதுகிறார்கள் என அடிக்கடி சொல்வது மாதிரியோ இதுவும் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது என்றார். கவிதை எழுதிக் கொண்டு கடவுளையும் கும்பிட்டால் மரியாதை கேடு என தீவிரமாக நம்புவதால் கடவுளை கும்பிடுவதை கட்டாயமாக நிறுத்திக் கொண்டு விட்டார்.

 

அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்கள் மிகச்சொற்பமானவர்கள். ஏழோ எட்டுப்பேர்தான். கூட்டத்தின் இடையில் வந்தவர்களிற்கு குளிர்பானம் வாங்க கூட்டம் நடந்த இடத்திற்கு முன்பாக இருந்த கடைக்கு சென்றிருக்கிறார். கடையிலிருந்த பார்க்க கூட்டம் தெரிந்திருக்கிறது. கூட்டத்திலிருந்தவர்கள் கைகளை ஆட்டி ஆக்ரோசாக கதைத்து கொண்டிருந்ததை ஊமைப்படம் பார்ப்பதை போல பார்த்து கொண்டிருந்த கடைக்காரர், நமது நண்பரிடம் கேட்டிருக்கிறார் “தம்பி.. ஜெகோவாவின் சாட்சிகளோ“ என. வாழ்க்கை வெறுத்தப் போய் திரும்பி வரும்பொழுதுதான் கவனித்திருக்கிறார், கூட்டம் நடந்த வளாக மதிலில் ஜெகோவாவின் சாட்சிகளின் கூட்டமொன்று எங்கோ நடப்பதற்கான சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

 

இப்படித்தான் இருக்கின்றது நண்பர்களே யாழ்ப்பாணத்தில் நமது புத்தக வெளியீட்டு நிகழ்வுகளின் துயரக்கதைகள். ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இப்படித்தான். பத்து பன்னிரண்டு பேர் வந்தாலே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். பெந்தகோஸ், ஜெகொவாவின் சாட்சிகள் கூட்டங்களிலெல்லாம் சற்று அதிக தலைகள் தென்படுகின்றது. இப்படியே நிலைமை நீடித்தால், ஏதேனும் குற்றச்செயலிற்கு திட்டமிடுகிறார்கள் என யாராவது காவல்த்துறைக்கு அறிவித்தாலும் நம்பிவிடுவார்கள்.

 

அண்மையில் நடந்த அனேகமான எல்லா புத்தக வெளியீடுகளிலும் இதுதான் கதை. கோவை நந்தனின் கழுகு நிழல் அறிமுக நிகழ்வும், அஜந்தகுமார் மற்றும் மயூரரூபன் ஆகியோரின் வெளியீட்டு நிகழ்வும்தான் விதிவிலக்கு. மற்றவற்றில் பெரும்பாலானவை ஏதோ குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தலைமறைவாக இருந்து திட்டமிடுபவையைப் போலத்தான் நடந்து முடிந்திருக்கின்றன.

 

ஆனாலும் இதில் தர்க்கரீதியில் இடிக்கும் விடயமொன்றுமுண்டு. நானறிந்த வரையிலும் யாழ்ப்பாணத்தில் ஏழோ எட்டோ “இலக்கியகுறூப்கள்“ உள்ளன. “ஆவா குறூப்“ மாதிரி இரகசியமாக இன்னும் ஏதேனும் இயங்குகின்றதா என்பது தெரியவில்லை. ஒரு குறூப்பின் நிகழ்வில் இன்னொரு குறூப் மெம்பர்ஸ் கட்டாயமாக கலந்து கொள்வதில்லை. நான் நினைக்கிறேன், எதிரெதிராக முட்டுப்பட்டால் ஒரு கொலை விழுவதற்கான சாத்தியங்கள் குறித்து அச்சமடைகிறார்களோ தெரியவில்லை. இது உண்மையெனில், “ஆவா குறூப்பை“ விடவும் நம்மவர்களின் இலக்கிய குறூப்கள் அல்லவா பயங்கரமானவை.

 

இந்த இடத்தில்த்தான் நமது நண்பர்களிற்கு முக்கியமான ஒரு உண்மையை நினைவூட்ட வேண்டியுள்ளது. இப்பொழுது நாம் எழுதுவதையெல்லாம் நான்காயிரம் பேர் படிப்பதில்லை. எப்படி பார்த்தாலும் நாற்பது பேர்தான். அது யாரெனில், மாறிமாறி குத்துவெட்டுப்படும் இந்த நாற்பது பேரும்தான். அடித்தாலும் பிடித்தாலும் நாம்தான் அண்ணன் தம்பிகள். இந்த உண்மை தெரிந்தால், நாம் எழுதுவதை நான்காயிரம் பேர் படிக்கும் பாவனையில் நடந்து திரிவதையும், நமக்கு நாமே ஒளிவட்டங்களையும். ரசிகர்களையும், எதிரிகளையும் கற்பனை பண்ணிக் கொண்டு அலைவதையும் விட்டுவிடுவோம்.

 

யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு நிகழ்வுகளிற்கு அறிவித்தல் விடுக்கும் போது, பல படைப்பாளிகளிடமிருந்து நான் எதிர்கொண்ட முதலாவது கேள்வி- “அவர் வருகிறாரா?” ”இவர் வருகிறாரா?”. கேட்கப்படுபவர்கள் அவர்களது எதிரிகள். அவர்கள் வந்தால் இவர்கள் வரமாட்டார்களாம். அப்படி ஒன்றும் இவர்களிற்குள் பங்காளிச்சண்டை கிடையாது. பேஸ்புக்கில் ஏதாவது குத்துவெட்டாக இருக்கும். மூன்றுபேர் லைக்கிட்டு உசுப்பேற்றிவிட்டிருப்பார்கள். அதன்பின், இந்த உலகமே தங்களைத்தான் கவனிக்கும் பாவனையில் இருவரும் நடந்து கொள்கிறார்கள். எதிரெதிராக சந்திப்பதைக்கூட நிறுத்திக் கொண்டு விடுகிறார்கள். இப்படியாக கற்பனை பண்ணிக் கொண்ட எதிரிகளின் காதகளிற்கு போய்ச் சேரட்டும் என பல நண்பர்கள் பேசிய டி.ராஜேந்தர் வசனங்களை விட கொடுமையான “பஞ்ச்களை“ சகித்து கொண்டிருக்கிறேன்.

 

இந்த நாற்பது பேரிற்கு அப்பால், நாற்பத்தியோராவது நாற்பத்தியிரண்டாவது நாற்பத்திமூன்றாவது ஆட்களையும் கண்டடைய வேண்டும் என்ற முயற்சியில் யாழ்ப்பாணத்தின் இளைஞர்கள் சிலர் முயற்சி செய்கிறார்கள். இலக்கிய குறூப்களை கடந்த முயற்சியில் அவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. எனக்கென்னவோ, விஜய், அஜித் ரசிகர்களை போல நடந்து கொள்ளும் நமது படைப்பாளிகளை மீட்டெடுக்க வந்த தேவகுமாரர்களாகவும் இந்த இளைஞர்கள் இருக்கலாம் என தோன்றுகிறது.

 

வரும் ஞாயிறன்று யாழ்ப்பாண இலக்கிய குவிய இள நண்பர்கள் படைப்பாளிகளை ஒன்று சேர்க்கும் முயற்சி ஒன்றில் இறங்கியிருக்கிறார்கள். சமகால இலக்கிய கருத்தாடல் ஒன்றை திருமறைகலாமன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கருத்தாடலின் முக்கிய நோக்கம் இலக்கியத்தை காப்பாற்றுவதென்பதெல்லாமல்ல. படைப்பாளிகளை ஒன்று சேர்ப்பது.

 

படைப்பாளிகளிடையேயான விவாதங்களை ஊக்குவிப்பது. இளையவர்களை மேலும் இலக்கியத்தின்பால் கவர்ந்திழுப்பது. இப்படியான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை. சின்னச்சின்ன அடையாளங்களிற்குள் தங்களை குறுக்கிக் கொள்வது படைப்பாளிகளின் படைப்பு எல்லைகளை குறுக்கிவிடலாம். இந்த எல்லைகளை கடந்த வாருங்கள் நண்பர்களே. நமது கிராமிய இலக்கிய சங்கங்கள் எல்லாம் தங்களது கிராமிய அடையாளங்களிற்கு அப்பாலும் சற்று தலைநீட்டி பார்க்கலாம். ஆனாலும் இலக்கியகுவிய நண்பர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமொன்றுமுண்டு. எல்லா இலக்கியமேடைகளிலும் ஒரே பேச்சாளர்கள் தோன்றிக் கொண்டிருந்தால் பார்வையாளர்கள் சலித்து விடக்கூடிய அபாயத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். கூட்டங்களிற்கு வருவோர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் இதற்கும் ஒரு பங்குண்டு என்பதை நினைவில் வைத்திருங்கள் நண்பர்களே.

 

முக்கியமாக, கண்ணில் தீ கொண்டலைவதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் இலக்கிய குறூப் நண்பர்கள் அனைவரும் கட்டாயம் வர வேண்டும். எதிரெதிர்க் குறூப்புகள் சந்தித்தால் என்ன ஆகுமென தெரியாமல் எத்தனை காலம்தான் நாம் இப்படி வெட்டிவெட்டி ஓடித் திரிவது. இரண்டில் ஒன்று ஆகட்டும். இப்படி சந்திக்கும் போது உயிர்ச்சேதமின்றி கூட்டம் முடிந்தால், ஜெகோவாவின் சாட்சிகளை விட அதிகமான இலக்கியவாதிகள் வாழ்ந்தார்கள் என காலம் ஒரு குறிப்பெழுதி விடட்டும். அல்லது, “ஆவா குறுப்பா” நாமா என்பதையாவது நிரூபித்து விடலாம். வாருங்கள் நண்பர்களே.

 

 

 

- See more at: http://yokarnan.com/?p=478#sthash.z01zzusH.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.