Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் கெஜ்ரிவால் கலந்து கொண்ட மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

Featured Replies

டெல்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், மக்கள் குறைகளை தீர்க்க புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி சனிக்கிழமை தோறும் தலைமை செயலகம் முன்பு உள்ள மைதானத்தில் முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து (மக்கள் சபை கூட்டம்) மனுக்களைப் பெற்று குறைகளை தீர்த்து வைப்பார்கள் என்ற அறிவிக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் காலை 7 மணி முதலே மக்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். இதனால் டெல்லி தலைமை செயலகம் நோக்கி வரும் சாலைகள் மூடப்பட்டன.

என்றாலும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் நடந்தே வந்து சேர்ந்தனர். 9.30 மணிக்கு கெஜ்ரிவாலும், அவரது மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். மனுக்களைப் பெற தொடங்கினார்கள்.

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அங்கு அதிகாரிகளும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் கூட்டம் 1½ மணி நேரமே நடக்கும் என்று கூறப்பட்டதால் கெஜ்ரிவாலிடம் மனு கொடுக்க மக்கள் முண்டியடித்தனர்.

இதனால் கூட்டத்தில் தள்ளு முள்ளும், குழப்பமும் ஏற்பட்டது. மக்கள் வரிசையில் வராமல் குவிந்திருந்தால் குழப்பத்தை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை. நேரம் செல்ல, செல்ல குழப்பம் அதிகரித்தது.

இதையடுத்து கெஜ்ரிவாலை கூட்டத்தில் இருந்து வெளியேற போலீசார் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று கெஜ்ரிவாலும் அமைச்சர்களும் மக்கள் சபை கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

பிறகு கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:–

மக்கள் சபை கூட்டத்துக்கு இவ்வளவு மக்கள் திரள்வார்கள் என்று நான் கொஞ்சமும் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அரசு ஊழியர்கள் தான் அதிக அளவில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

மக்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரசின் கடமை. இந்த மக்கள் சபை கூட்டத்துக்கு சரியான ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே மக்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டு விடலாம் என்ற பயம் ஏற்பட்டது.

மீண்டும் ஓரிரு நாட்களில் இந்த கூட்டம் திட்டமிட்டு நடத்தப்படும்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

 

http://www.maalaimalar.com/2014/01/11141700/Kejriwal-asks-people-commute-a.html

  • தொடங்கியவர்

ஜனதா தர்பார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கேட்டார் அரவிந்த கெஜ்ரிவால்

 

டெல்லியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முதல்-மந்திரியுமான  கெஜ்ரிவால், தலைமை செயலகம் முன்பு உள்ள மைதானத்தில் இன்று மக்களின் குறைகளை தீர்க்க மனுக்களை  பெறும் ஜனதா தர்பார் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதற்காக காலை 7 மணியிலிருந்தே கூட்டம் குவியத்தொடங்கியது.

9.30 மணிக்கு  கெஜ்ரிவாலும், அவரது மந்திரிகளும் வந்து  மனுக்களை பெற தொடங்கினர். மனுக்கள் ஒரு மணிநேரமே வாங்கப்படும் என கூறியதால்
கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது ஒருவரை ஒருவர் முண்டியடித்து சென்றனர். இதனால் வரிசையில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கெஜ்ரிவாலும், அமைச்சர்களும் மக்கள் சபை கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்கள்.

இந்த நிலையில்,  ஜனதா தர்பார் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் நிகழ்ச்சி ரத்தானதற்காக  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த நிகழ்ச்சியை சரியாக கையாளாத எனது நிர்வாகத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இது போன்ற சம்பவங்களால் நான் ஜனதா தர்பாரை கைவிடப்போவதில்லை.அடுத்த முறை சிறந்த ஏற்பாடு இந்த நிகழ்ச்சிக்கு தேவைப்படுகிறது.மக்கள் கூட்டம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் கூடி விட்டது என்று தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி தலைவர் கூறும்போது: - இது போன்ற நிகழ்ச்சிகளை அரசு தேர்தலுக்காகத்தான் செய்கிறது.மக்களுக்காக அல்ல என்று தெரிவித்தார்.

 

http://www.dailythanthi.com/2014-01-11-Arvind-Kejriwal-apologises-for-chaos-at-AAP%2527s-first-%2527janta-darbar%2527-in-Delhi

  • தொடங்கியவர்

கேஜ்ரிவாலின் மக்கள் மன்றம் : அரசு ஊழியர்களிடம் இருந்து அதிக மனுக்கள்

 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜனதா தர்பாருக்கு இன்று புகார் கொடுக்க வந்தவர்களில் அரசு ஊழியர்களே அதிகமானோர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், புகார் மனுக்களில் அரசு ஊழியர்களின் மனுக்களே அதிகம். அதே போல தண்ணீர் மற்றும் மின்சாரம் குறித்த மனுக்களும் அதிகமாக வந்துள்ளன என்று கூறினார்.
 

http://www.dinamani.com/latest_news/2014/01/11/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D--/article1995068.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.