Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த மாத இறுதியில் மோடி தீவிர பிரசாரம்: ஆம் ஆத்மி சவாலை முறியடிக்க வியூகம்

Featured Replies

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால், பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் முடிவு செய்துள்ளன.

வரும் 17–ந்தேதி டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு இரு கட்சிகளும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஆண்டே பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எல்லா பணிகளையும் தொடங்கியது. இதனால் நாடெங்கும் ‘‘மோடி அலை’’ வீசுகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் நரேந்திர மோடியே பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் டெல்லி மாநிலத்தில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அமைந்த பிறகு, அந்த கட்சிக்கு நாடெங்கும் சற்று ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் அந்த கட்சி நாடெங்கும் 300–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது பா.ஜ.க.வின் வெற்றியை பாதிக்கலாம் என்ற சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் குடியரசு தினத்துக்குள் நாடெங்கும் 1 கோடி உறுப்பினர்களை பெற்று விட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முழுமையாக எதிர்கொள்ளும் அளவுக்கு ஆம்ஆத்மி கட்சியிடம் ஆள் பலம், பண பலம் இல்லாவிட்டாலும், அந்த கட்சி நிறுத்தும் வேட்பாளர்கள் தங்கள் வெற்றியை பாதிக்கும் வகையில் வாக்குகளைப் பிரித்து விடுமோ என்ற அச்சம் பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆம் ஆத்மி தனக்கு மிகுந்த சவாலையும் நெருக்கடியையும் ஏற்படுத்தி இருப்பதை நரேந்திர மோடி உணர்ந்துள்ளார். எனவே ஆம் ஆத்மியின் புதிய வேகத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று அவர் தன் திட்டமிடல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 10 நாட்களில் குஜராத் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியில் சுமார் 1½ லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இது மோடியை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளது. எனவே பிரசாரத்தை முற்றிலும் மாற்றி அமைக்க அவர் ஆலோசித்து வருகிறார்.

ஆம் ஆத்மி கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேரும் மாநிலங்களில் தனி கவனம் செலுத்த மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் அவர் டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ்வர்தனை குஜராத்துக்கு வரவழைத்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி கொடுப்போம் என்ற கோஷத்தை எல்லா ஊர்களிலும் எதிரொலிக்க செய்ய மோடி தனிக்குழு ஒன்று வைத்துள்ளார். படித்த இளைஞர்களைக் கொண்ட அந்த குழுவைக் கொண்டு ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுக்க மோடி ஆலோசித்து வருகிறார். அந்த பதிலடியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று டெல்லியில் வரும் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கும் கூட்டத்தில் மோடி விளக்கி சொல்வார் என்று தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த மாத இறுதியில் இருந்து பா.ஜ.க.வின் பதிலடி பிரசாரம் விறுவிறுப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பிரசாரத்தின் போது சாதாரண, நடுத்தர மக்களிடம் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்காதீர்கள் என்று வலியுறுத்தி ஆதரவு திரட்ட தீர்மானித்துள்ளனர்.

தற்போது கெஜ்ரிவாலும் ஆம்ஆத்மியின் மற்ற தலைவர்களும் மெல்ல மற்ற மாநிலங்களில் காலடி எடுத்து வைக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் அனல் பறக்கும் வித்தியாசமான பிரசாரத்தை தீவிரமாக நடத்தினால், கெஜ்ரிவாலும் மற்றவர்களும் டெல்லியை விட்டு வெளியில் வரமாட்டார்கள் என்று மோடி வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்.

அதன்படி இந்த மாத இறுதியில் இருந்து டெல்லியில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவுக்கு பிரசாரத்தில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி தலைவர்களை டெல்லிக்குள் முடக்கி நெருக்கடி கொடுப்பதுடன், டெல்லியில் உள்ள 7 எம்.பி. தொகுதிகளில் ஐந்து தொகுதிகளிலாவது வெற்றி பெற முடியும் என்று மோடி நம்புகிறார்.

மெட்ரோபாலிடன் நகரங்கள் தவிர சிறிய நகரங்களிலும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி உள்ளது. எனவே இந்த மாத இறுதியில் இருந்து எல்லா நகரங்களிலும் வி.ஐ.பி.க்கள், பணியில் உள்ளவர்கள், மாணவர்கள், பெண்கள் என்று 200 பேர் கொண்ட சிறு, சிறு கூட்டங்களை நடத்தி மோடி பற்றியும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டிய அவசியம் பற்றியும் விளக்க திட்டமிட்டுள்ளனர்.

15 மாநிலங்களில் உள்ள எல்லா நகரங்களிலும் இத்தகைய கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர 3டி தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உரையாற்ற மோடி திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய அதிவிரைவு பிரசாரம் மூலம் ஆம் ஆத்மி சவாலை முறியடித்து மக்கள் மனதை கவர முடியும் என்று மோடி நம்பிக்கையுடன் உள்ளார்.

நரேந்திர மோடி போலவே ஆம் ஆத்மியால் ஏற்பட்டுள்ள ஆபத்தை ராகுலும் உணர்ந்துள்ளார். இதனால்தான் அவர் இந்த மாத இறுதியில் 200 காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

ஆம்ஆத்மியின் முக்கிய கோஷமே ஊழல் ஒழிப்பு கோஷமாக உள்ளது. அந்த கோஷத்தை கையில் எடுக்க ராகுல் தீர்மானித்துள்ளார்.

ஊழல் ஒழிப்புக்கு வலு சேர்க்க அவர் பாராளுமன்ற கூட்டத் தொடரில் புதிய 2 மசோதாக்களை கொண்டு வர ஏற்பாடு செய்து வருகிறார். பிறகு அதை வைத்து நாடெங்கும் பிரசாரம் செய்ய ராகுல் முடிவு செய்துள்ளார்.

எனவே இந்த மாத இறுதியில் மோடி, ராகுல், கெஜ்ரிவால் மூவருமே ஊழலை ஒழிக்க முன்னுரிமை கொடுத்து பிரசாரத்தை தீவிரப்படுத்துவார்கள். இது இந்திய அரசியல் வரலாற்றில் புதிய கோணத்திலான அனல் பறக்கும் பிரசாரமாக இருக்கும்.

 

http://www.maalaimalar.com/2014/01/11120033/campaigning-Modi-Aam-Admi-chal.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.