Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெறுவேன்: கமல்ஹாசன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: "பத்மபூஷண் விருதைப்போல் பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?

பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை. செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகிறேன்.

தாமதமாக இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் விருதுதான் முதன்மையானது. மற்றதெல்லாம் அடுத்த கட்டம். இந்த விருதும் அப்படித்தான்.

சச்சின் டெண்டுல்கருக்கு 25 ஆண்டு கால சாதனைக்கு பாரத ரத்னா விருது கிடைத்தது. உங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளதே?

இது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கு சம்பளம் கேட்க கூடாது. கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி. இந்த விருதுக்கு மக்கள் என்னை தகுதியாக்கியது மாதிரி பாரத ரத்னா விருதுக்கும் ஒரு நாள் தகுதி பெற வைப்பார்கள்.

ரஜினிகாந்த் உங்களுக்கு வாழ்த்து சொன்னாரா?

இன்னும் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்.

பத்மபூஷண் விருதை யாருக்கு சமர்ப்பிப்பீர்கள்?

எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன். நிறைய பேர் என்னிடம் சம்பளம் வாங்கி கற்றுக் கொடுத்தனர். நிறைய பேரிடம் நான் சம்பளம் கொடுத்து கற்றுக்கொண்டேன். கே.பாலச்சந்தர், சண்முகம் அண்ணாச்சி போன்றோர் எனக்கு சம்பளம் தந்து கற்றுத்தந்தனர். இது மறக்க முடியாத நன்றிக் கடன். தீர்க்க முடியாத நன்றிக் கடன்.

விஸ்வரூபம் படத்தில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக இந்த விருதை நினைக்கிறீர்களா?

எனக்கு வரும் இகழ்வுகளை மட்டுமே என் தனிச்சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும்போது மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வேன்.

ஆஸ்கார் விருது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நாம் இந்த ஊரில் வியாபாரம் செய்கிறோம். நமக்கு ஐ.எஸ்.ஐ. தான் (தரச்சான்று) தேவை. அந்த நாட்டுக்கு போகும் போதுதான் யு.எஸ்.ஐ. வேண்டும். தேவைப்பட்டால் போய்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நான் தேவைப்பட்டாலோ எனக்கு அவர்கள் தேவைப்பட்டாலோ அது நடக்கும்.

இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

அந்த நிலையை அடைந்துவிட்டதற்கான ஆதாரமும் இருக்கிறது. அடையவில்லை என்பதற்கான அடையாளமும் இருக்கிறது. முழுவெற்றி பெறவில்லை. குறிப்பாக சாதி முறை இன்னும் ஒழியவில்லையே. சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதியாரின் பாப்பாக்களுக்கும் கொள்ளு பேத்தி வந்து விட்டார்கள் என்றாலும் சாதி ஒழியவில்லை. சாதி வெறி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?

இங்கு இருக்கும் எல்லோருமே அரசியல்வாதிகள்தான். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுகிறோம். கை விரலை கரையாக்கி கொள்கிறோம். அந்த கரைபோதும்.

விஸ்வரூபம்–2 படம் எப்போது வரும்?

படம் முடிந்து விட்டது. இசை மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன.

சுயசரிதை எழுதுவீர்களா?

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சுயசரிதையில் பொய்தான் எழுத வேண்டி வரும். உண்மை எழுதினால் பலரது மனம்தான் காயப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=23776

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.