Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜநா தனது பணிகளை இலங்கையில் இடை நிறுத்த நேரிடலாம்

Featured Replies

கண்காணிப்புக்குழு இலங்கை அரசபடைகள் தான் 17 தன்னார்வ தொடர்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டிய நிலையில் கொலை செய்தவர்கள் பொறுப்பேற்காத நிலையில் தமது பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று நேற்று இரவு நியுயோர்க்கில் ஜநாவின் அவசர மனிதாபிமான பணிகளிற்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் எகர்லாண்ட் தெரிவித்துள்ளார்.

http://news.yahoo.com/s/nm/20060831/wl_nm/...m/srilanka_dc_8

உண்மையில் வேண்டப்பட்ட ஒரு நடவடிக்கை..... இதனாலாகப்பட்டது தமிழர் கொலைகளுக்கான காரணத்தை உறுப்பு நாடுகள் வேறுவிதமாக பார்க்கவேண்டி வரலாம்....!

எனக்கு விளங்காத விடயம் என்ன எண்டால் சர்வதேச போலீஸ்காறன் இப்பிடி இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தும் அறிக்கையை மகிந்தர் அங்க இங்கிலாந்தில் இருக்கும் போது வெளியிட்டதற்கான காரணம் என்ன....??? யாரை சமாதானப்படுத்த... இல்லை குடைய....??? அப்பிடி இல்லை எண்றால் அண்மைய கெடுபிடிகளால் ஆடியிருப்பார்கள் எண்று நினைத்த பகுதிக்கு சமதானப்படுத்தி படிய வைக்கும் வலையை வீசி உள்ளார்களா... ?????

இதில உலக போலீஸ்காறன் களுக்கு விடயம் எப்பிடி தெரியவரும் என்பவர்களுக்கு ஒரு தகவல்.... ஈழ கெடுபிடிகள் நோர்வேயால் இந்தியாவுக்கும், அமெரிக்க ஆசிய பிரதி நிதிக்கும் அறிக்கைகளாக போய்க்கொண்டு இருக்கின்றது...!

  • தொடங்கியவர்

சிங்கள பகுதியில் நடக்கும் ஜநா நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதால் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைவராது. நிப்பாட்டினா உண்மையில் பாதிக்கப்படப் போவது தமிழர்கள். அவர்களிற்கு தான் அவசர மனிதாபிமான உதவி தேவையானவர்கள். உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம் பெயர்ந்தவர்கள், சுனாமியல் இடம் பெயர்ந்தவர்கள் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒட்டுமொத்தமாக வடக்குகிழக்கில் பல லட்சம். ஜநாவிற்கு கீழ் தான் உலக உணவுத்திட்டம் வேறு நடத்தப்படுகிறது. சிங்கள அரசாங்கம் விடு தவறுகளினால் சர்வதேச அமைப்புகள் காட்ட நினைக்கும் எதிரொலியினால் கடசியில் தண்டிக்கப்படுவதும் தமிழர்கள் தான். இது பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை. இதை ஜநாவும் மற்றய சர்வதேச அமைப்புகளும் கருத்தில் கொண்டு தமது நடிவடிக்கைகளை நெறிப்படுத்த வேண்டும்.

நீங்கள் சொல்வதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன் குறுக்ஸ்.... ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் விளைவு என்ன என்பதை விட இலங்கை அரசாங்கத்தின் மீது எப்படியான அழுத்தத்தை கொண்டு வரும் என்பது மிக முக்கியம்...!

ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடுகள் யுத்தத்தால் பாதிக்கப்படும் நாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போனால் வரும் அவமானத்துக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாவர்.... அப்படியான நிலையை வரவிடாமல் தடுப்பது அவர்களின் மரியாதை பிரச்சினை...

தவிர இஸ்ரேலில் ஐநாவின் உறுப்பு நாடுகளின் அழுத்தத்துக்கு பணிய வேண்டிய நிலைக்கு இஸ்ரேல் வந்தது.... காரணம் இஸ்ரேலால் அவர்கள் நினைத்த வேகத்தில் சண்டையை முடிக்க முடியவில்லை... நாள்கள் இளுத்துக்கொண்டே போக வெளிநாட்டு அளுத்தங்கள் அதிகரித்தது... இஸ்ரேலை விடவலிமை குறைந்த இலங்கையால் ஐநாவை புறந்தள்ளி அப்பிடி தாக்கு பிடிக்க முடியுமா...??? (இண்றும் சர்வதேச உதவிகள் வேண்டித்தான் மகிந்தர் பிச்சை கேட்க்கும் நிலைதானே இருக்கின்றது)

  • தொடங்கியவர்

அவை தட்டிக் கொடுத்து உசுப்பேத்திவிட்ட இலங்கை அரசாங்கத்தோடை என்னவாதல் செய்யட்டும். எங்கட மக்களின் மனிதாபிமான அவலம் மேலும் மோசம் அடையாமல் நேரடி உதவிகளை வழங்க வேண்டும். சனம் பட்டினியாலை சாகும் பொழுது சிறீலங்காவின் இனவாத நச்சுப்பாம்பிற்கு ஜநா இராஜதந்திர மகுடி வாசிச்சு காரியம் நடத்த நினைப்பது நகைக்கிடமானது. ஒரு தோற்றுப்போன அரசாங்கத்தை அழுத்தங்கள் கொடுத்து சீர்திருத்துவது வழிக்கு கொண்டுவருவது என்பது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டியது. பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் மக்களிற்கு உதவிகள் தொடர்வது என்பது அவசரமான அத்தியாவசியமான நிர்ப்பந்தம். இதை எடுத்துக் கூறி எமக்கு நேரடியாக உதவிகள் கிடைக்கச் செய்வது எமது புலம்பெயர்ந்துள்ள அமைப்புகளின் கடமை.

தேசிய தொலைக்காட்ச்சியில உலர் உணவு தயாரிப்பு அவசிய தானியங்கள் உற்பத்தி.... முன்னேற்பாடுகள், எண்டு பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் உணவு தன்னிறைவு முன்னேற்பாடுகளை எல்லாம் போட்டுக்காட்டி வயித்தில பாலை வார்த்தவை.... ஆனாலும் இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் கஸ்ரப்பட போறது உண்மைதான்...!

நிவராணப் பணிகளை இடைநிறுத்தப் போவதாக ஐ.நா. எச்சரிக்கை

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளதையடுத்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.