Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் ஜெயலலிதா பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ADMKSL09022014.jpg

மதுரை,

முத்துராமலிங்க தேவரின் முக்கிய கொள்கையான காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விழாவில் பேசியதாவது:–

தேவரின் பொன்மொழிகள்

‘‘இங்கு பெருந்திரளாக கூடியுள்ள சகோதர சகோதரிகளே கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் அணிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்ட தேவர் திருமகனார் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர். மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் அயராது பாடுபட்டவர், தேவர் திருமகனார். ‘வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்’ என்று முழங்கியவர், அவர். அவரது பொன்மொழிகள் இக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன.

காங்கிரஸ் அல்லாத ஆட்சி

ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியவை அவருடைய முக்கிய கொள்கைகளாக இருந்தன. இந்த கொள்கைகளைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். உங்கள் ஆதரவுடன் தேவர் திருமகனாரின் கொள்கைகளை வென்றெடுக்க வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம் கனிந்து விட்டது என்று தெரிவித்து அந்த லட்சியத்தை அடைய நீங்கள் எங்களுக்கு என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு அவர் பகல் 2 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் தளம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கிருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார்.

விழாக்கோலம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வருகையையொட்டி பசும்பொன் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அவர் வந்து இறங்கிய ஹெலிகாப்டர்தளத்தில் இருந்து விழா நடந்த பசும்பொன் தேவர் நினைவகம் வரை சாலையின் இருபுறமும், விழா மைதானத்திலும் சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவை வரவேற்று ‘காவிரி தாயே’, ‘வருங்கால பிரதமரே வருக’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி, விழா மேடையில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுமக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு அதன்மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஹெலிகாப்டர் தளத்தில் ஜெயலலிதாவின் படத்துடன் கூடிய பெரிய அளவிலான 2 பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தன.

 

http://www.dailythanthi.com/2014-02-10-Jayalalitha-speech

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.