Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசே! எங்கள் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்யாதே; யாழில் விண் அதிர கோஷம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2a1736cc7a1926736e5e96d36b75ab11.JPG

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டம் பல்வேறு தடைகளை தாண்டி யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது.


இன்று காலை 10.30 மணிக்கு யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
நூற்றுக் கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

குடியேற்று குடியேற்று சொந்த நிலத்தில் குடியேற்று, எங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாதே!, எங்கள் இடத்தை எங்களிடம் தா!,காணாமல் போன உறவுகள் எங்கே?

எமது வளங்களை பறிக்காதே!,விலை வாசியை ஏற்றாதே!அன்நிய மீனவர்களை வெளியேற்று எங்கள் மீனவரை வாழ விடு, வலி.வடக்கில் மீள்குடியேற்று, எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லவிடு, போன்ற கோசங்கள், மற்றும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


அச்சுறுத்தல்கள்

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல வேண்டாம் என  நலன்புரி நிலைய மக்களை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களும் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாங்கள் வெகுவிரைவில் உங்கள் இடங்களை விட்டுவிடுவோம் எனவே போராட்டத்திற்கு போகாதீர்கள் அவ்வாறு மீறிப்போனால் நடப்பது வேறு என்றும் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு பேருந்துகளில் மன்னாரிலிருந்து வந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதன் காரணமாக இவர்கள் மன்னார் விடத்தல் தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்

இதேவேளை இன்றைய தினம் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக காலி, பொத்துவில், சிலாபம் போன்ற இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


 

2(44).jpg

 

5(26).jpg

 

6(13).jpg

 

4(39).jpg

 

DSCF4794.JPG



DSCF4808(2).jpg

http://www.onlineuthayan.com/News_More.php?id=507172650815520144

துணிந்து போராடும் உறவுகளுக்கு நன்றி.

செஞ்சேனை பங்கர் அமைச்சர் பெரிய மீன்பிடி கப்பல்கள் வைத்து எமது வளத்தை சுரண்டி சிறி லங்காவிற்கு ஏற்றுமதி செய்வதை பற்றி சிவப்பு தோழ எழுத்தாளர்கள் எழுதமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.