Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடும் அமளிக்கு மத்தியில், தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

Featured Replies

gallerye_004053623_918743.jpg

 

 

கடும் அமளிக்கு மத்தியில், குரல் ஓட்டெடுப்பு மூலம், தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கான, திருத்த மசோதாக்கள் மீதான விவாதம், பொதுமக்களுக்கு தெரியாத வகையில், லோக்சபா, 'டிவி'யின் ஒளிபரப்பு, இருட்டடிப்பு செய்யப்பட்டது.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், லோக்சபாவில், தெலுங்கானா மசோதா நிறைவேறியுள்ளதன் மூலம், நாட்டின், 29வது, புதிய மாநிலமாக, தெலுங்கானா, உதயமாவது உறுதியாகி உள்ளது.ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வகை செய்யும், தெலுங்கானா மசோதாவை, பார்லிமென்ட்டில் நிறைவேற்ற, மத்திய அரசு, பல நாட்களாக முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதி, எம்.பி.,க்கள், பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டதால், முட்டுக்கட்டை நீடித்தபடியே இருந்தது.

களம் இறங்கியது:
இந்நிலையில், நேற்று அதிரடி முடிவாக, தெலுங்கானா மசோதாவை, லோக்சபாவில் கொண்டு வர தீர்மானித்து, மத்திய அரசு, முழுவீச்சில் களம் இறங்கியது. அதை அறிந்திருந்த, தெலுங்கானா எதிர்ப்பாளர்களும், போராட்டத்தில் குதித்தனர். நேற்று காலை, 11:00 மணிக்கு, கேள்வி நேரம் துவங்கியதும், வழக்கம் போல் அமளியும் துவங்கியது. சபையை நடத்த முடியாத அளவிற்கு, அமளி இருந்ததால், சில நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்ட சபை, பகல், 12:00 மணிக்கு மீண்டும் கூடியது; தெலுங்கானா மசோதாவை அறிமுகப்படுத்த, சபாநாயகர் மீரா குமார் முயற்சித்தார். அப்போது, சீமாந்திராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், புரந்தேஸ்வரி, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி ஆகியோர், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இவர்களோடு சேர்ந்து, மாநில பிரிவினைகளை ஏற்காத, திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளின் எம்.பி.,க்களும், ரகளையில் இறங்கினர்.இதனால் எழுந்த அமளியால், மதியம், 3:00 மணி வரை, சபையை, சபாநாயகர் ஒத்திவைத்தார்.மதிய உணவு இடைவேளைக்கு பின், மீண்டும் சபை கூடியது. அப்போது, தெலுங்கானா மசோதாவை, உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, தாக்கல் செய்தார்.அதை, தெலுங்கானா எதிர்ப்பாளர்கள் தடுக்க முன்வரலாம் என்ற அச்சத்தில், அவருக்கு பாதுகாவலர்கள் போல், தமிழக - எம்.பி.,க்கள் சிலர், நின்று கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு இல்லை:
அதைப் பார்த்த, ஆந்திர - எம்.பி., ஒவைஸி, "லோக்சபாவுக்குள், உள்துறை அமைச்சருக்கே, பாதுகாப்பு இல்லை. இது, வெட்கக் கேடானது. இப்படியொரு நிலையில், தெலுங்கானா மசோதாவை கொண்டு வருவது, தேவை தானா?” என்று, எதிர்ப்பு தெரிவித்தார்.சபையில் நடக்கும், எந்த நடவடிக்கைகளும், வெளியில் தெரிய வேண்டாம் என்பதற்காக, உடனடியாக, லோக்சபா, 'டிவி'யின், நேரடி ஒளிபரப்பு, தடை செய்யப்பட்டது. இதனால், திருத்தங்களில் என்ன அம்சங்கள் இருந்தன என்பது, சபையில் இருந்தவர்களுக்கும் தெரியவில்லை; வெளியில் இருந்தவர்களுக்கும் புரியவில்லை.உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர், ஏதோ பேசினர். அடுத்த வினாடியில், மசோதா நிறைவேற்றம் குறித்த பணிகள் துவங்கின.

அதிரடி:
அப்போது, ஏற்கனவே, சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, ஆந்திர - எம்.பி.,க்கள் சிலர், சபைக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாவலர்கள் தடுத்ததால், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 40க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கோரப்பட்டிருந்தன. அவை அனைத்தையும், ஒவ்வொன்றாக, ஓட்டெடுப்புக்கு விட, சபாநாயகர் தீர்மானித்தார். இருப்பினும், பாதி திருத்தங்கள், குரல் ஓட்டெடுப்பு மூலமாகவே, நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீதி திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. அது போல், உள்துறை அமைச்சர் தாக்கல் செய்த, தெலுங்கானா மசோதாவை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட, அத்தனை திருத்தங்களுமே, நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாக, ஷிண்டே கொண்டு வந்த, தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.

ஆரவாரம்:
இதை கேட்டதும், தெலுங்கானாவுக்கு ஆதரவான, டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த, சந்திரசேகர் ராவ், நடிகை விஜயசாந்தி மற்றும் சில, எம்.பி.,க்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.அடுத்ததாக,ராஜ்யசபாவில், இந்த மசோதாவுக்கு, ஒப்புதல் பெற வேண்டுமென்ற அவசியம் இருந்தாலும், முதற்கட்டமாக, லோக்சபாவில் முட்டுக்கட்டை நீங்கி உள்ளதால், நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா உதயம் ஆவது, உறுதியாக விட்டது.உடனடியாக, ராஜ்யசபாவிலும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் கூறினார்.முக்கிய எதிர்க்கட்சியான, பா.ஜ., - எம்.பி.,க்கள், சபையில் மிகுந்த அமைதியுடன் இருந்தனர். பா.ஜ.,வின் சம்மதத்தை எப்படியோ பெற்றதால், தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

தெலுங்கானாவில்கொண்டாட்டம்:
தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, ஆந்திராவில், ஐதராபாத், வாரங்கல் உள்ளிட்ட தெலுங்கானா மாநில பகுதியில், கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.தெலுங்கானா ஆதரவாளர்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், திருவிழா போல், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். பல இடங்களில், வெற்றி ஊர்வலமும் நடத்தப்பட்டது. பிரபலமான தெலுங்கு சினிமா பாடல்களுக்கு, குத்தாட்டம் போட்டும், தெலுங்கானா ஆதரவாளர்கள் அசத்தினர்.

கிரண்குமார் ரெட்டி ராஜினாமா:
தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், ஆந்திர முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, கிரண் குமார் ரெட்டி, கடும் அதிருப்திஅடைந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் அமைக்க, துவக்கத்திலிருந்து, இவர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.மத்திய அரசின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள அவர், தன் ஆதரவாளர்கள் கூட்டத்தை, இன்று கூட்டியுள்ளார். இதன்பின், காலை, செய்தியாளர்களை சந்தித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அறிவித்தார்.பின், கவர்னர் மாளிகைக்கு சென்று, ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

'ஆந்திரா பந்த்' ஜெகன் அறிவிப்பு:
ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், ''தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது, திட்டமிட்ட ஜனநாயக படுகொலை. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக, ஜனநாயகத்துக்கு விரோதமான பல நடவடிக்கைகளை, அரசு கையாண்டுள்ளது. ஆந்திர மக்களின் விருப்பத்துக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, ஏற்க முடியாது. மத்திய அரசை கண்டித்து, ஆந்திரா முழுவதும், இன்று (நாளை) 'பந்த்' நடத்தப்படும்,'' என்றார்.

'பெப்பர் ஸ்பிரே' எம்.பி., அரசியலுக்கு முழுக்கு:
தெலுங்கானா மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவுக்குள், 'பெப்பர் ஸ்பிரே' அடித்தவர், காங்., - எம்.பி., ராஜகோபால். இதனால், இவர், காங்., கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில், எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலை விட்டே விலகுவதாகவும், நேற்று, அவர் அறிவித்தார். ஆந்திராவின், ராமச்சந்திரபுரம் தொகுதி, காங்., - எம்.பி., தோட்டா திரிமூர்த்திலுவும், கட்சியிலிருந்து விலகுவதாக, நேற்று அறிவித்தார்.

தெலுங்கானா மசோதாவை, அவசர அவசரமாக நிறைவேற்றுவதாக, யாரும் நினைக்க வேண்டாம். கடந்த, ஒன்பது ஆண்டுகளாகவே, இந்த பிரச்னையில், நிலவி வந்த, சிக்கலை தீர்க்கவும், ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திர சட்டசபையின் கருத்தையும், முறையாக கேட்டோம். சீமாந்திரா பகுதியின் தேவைகளையும், நாங்கள் நிச்சயம், மனதில் கொள்வோம். அந்த பகுதிக்கு, உரிய நிதி ஒதுக்கீட்டை, நிச்சயம் தருவோம்.
- சுஷில்குமார் ஷிண்டே ,மத்திய உள்துறை அமைச்சர்

தெலுங்கானாவுக்கு ஆதரவு தருவதாக, வெளிப்படையாக, முன்பே அறிவித்து விட்டோம். எனினும், தெலுங்கானா உருவாக்கத்தை,காங்கிரஸ், சரியாக செய்யவில்லை. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை, கருத்தொற்றுமை அடிப்படையில், நாங்கள் உருவாக்கினோம். தெலுங்கானா விஷயத்திலோ, நிலைமை தலைகீழ். கடைசி நேரத்தில், சுய அரசியல் ஆதாயங்களுக்காக, தெலுங்கானா மாநிலத்தை, காங்கிரஸ் உருவாக்குகிறது.
- சுஷ்மா சுவராஜ் ,லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,

தெலுங்கானா கோரிக்கை, 60 ஆண்டு கால போராட்டம். நிறைய பேர், உயிர்த் தியாகங்கள் செய்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு என, வரலாறே உள்ளது. எனவே, நியாயமான அடிப்படையில் தான், தெலுங்கானா மாநிலம் உருவாகிறது. அதே நேரம், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள், எங்களது சகோதரர்களே. ஐதராபாத்தில் உள்ள, சீமாந்திரா மக்கள், அச்சப்படத் தேவையில்லை.
- ஜெய்பால் ரெட்டி,காங்., 'மாஜி' மத்திய அமைச்சர்

50 ஆண்டுகளாக தொடரும் தெலுங்கானா விவகாரம்:
புதிதாக உருவாகவுள்ள தெலுங்கானா, இந்தியா சுதந்திரம் பெற்றபோது,ஐதராபாத் சமஸ்தானத்தில் இடம் பெற்றிருந்தது.
*1948 செப்., 17ல், இந்தியாவுடன் ஐதராபாத் சமஸ்தானம் இணைக்கப்பட்டது. இதன் முதல்வராக, எம்.கே.வெல்லோடி பதவியேற்றார்.
*1953ல், கர்னூலை தலைநகராகக் கொண்டு, ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஐதராபாத் மாநிலத்தை, ஆந்திராவுடன் இணைக்க, அப்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. ஐதராபாத்தில் இருந்த தெலுங்கானா பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர்.
* மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, தெலுங்கு பேசும் மக்கள்தொகை வாரியாக, சென்னை மாகாணத்தில் இருந்து, சில பகுதிகள், ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. இறுதியாக, 1956 நவ., 1ல், ஒன்றுபட்ட ஆந்திரா உருவாக்கப்பட்டது. தலைநகராக ஐதராபாத் உருவானது.
*1969ல் தெலுங்கானா தனிமாநிலமாக உருவாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் போராடினர். 'தெலுங்கானா பிரஜா சமிதி' என்ற அமைப்பின் மூலம் போராட்டம் தீவிரமானது.
* 1972ல், தெலுங்கானாவுக்கு எதிராக, ராயலசீமா - கடலோர ஆந்திராவை உள்ளடக்கிய பகுதியில், 'ஜெய் ஆந்திரா' என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
*1999 வரை, தெலுங்கானா மாநிலபிரிவினை கோரப்படவில்லை.
*1999ல், மாநிலத்தில் தொடர்ந்து சந்தித்த, சட்டபை தேர்தல் தோல்விகளால், காங்கிரஸ், தெலுங்கானா கோரிக்கையை எழுப்பியது.
*2001ல், தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்குதேச கட்சியில் இருந்து விலகிய சந்திரசேகர ராவ், 'தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி' என்ற கட்சியை தொடங்கினார்.
*2010 பிப்., 3ல், தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து, மக்களின் கருத்துகளை அறிய, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி உருவாக்கப்பட்டது. இது, டிச., 30ல் அறிக்கை சமர்பித்தது.
*2013 ஜூலை, 30ல், தெலுங்கானா தனிமாநிலம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.டிச., 12ல், ஜனாதிபதி உத்தரவு படி, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான, 'ஆந்திரா மறுசீரமைப்பு மசோதா - 2013' ஆந்திர சட்டசபைக்கு அனுப்பப்பட்டது. ஜன., 30ம் தேதிக்குள் சபையில் விவாதித்து திருப்பி அனுப்ப வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்தது.
*2014 ஜன., 31ல், ஆந்திர சட்டசபை, மசோதாவை நிராகரித்து, திருப்பி அனுப்பியது.
*பிப்., 18ல், (நேற்று) லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
 

http://www.dinamalar.com/news_detail.asp?id=918743

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.