Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சளைக்காத சட்டப்போராட்டம்!

Featured Replies

ஜூனியர் விகடன் 26 Feb, 2014

சளைக்காத சட்டப்போராட்டம்!
=========================

''நெருப்பில் எரியும் உடல் விரைவில் வெந்து தணிந்துவிடுகிறது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தண்டனைக் கைதியின் உடலும் மனமும் தூக்கிலிடப்படும் நாள் வரை ஒவ்வொரு நொடியும் எரிகிறது; தவிக்கிறது; துடிக்கிறது. இந்தக் குரூரத்துக்கு நாகரிக சமூகத்தில் நிச்சயம் இடம் இருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டி மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதனை ஏற்று முருகன், சாந்தன், பேரறிவாளனை மட்டுமல்ல; ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இதனை சட்டமன்றத்தில் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த முடிவை மத்திய அரசு கடுமையாக எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



ராஜீவ் வழக்கில் மொத்தம் 26 பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 1998-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தமிழர் உயிர்காக்கும் நிதி திரட்டி இவர்களது அப்பீல் விவகாரத்தை பழ.நெடுமாறன் முன்னெடுத்தார். இதன்மூலமாக 22 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக நீதிபதிகள் குறைத்தார்கள். நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தார்கள். இந்த நால்வரும் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். அந்த மனு 1999-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக ஆளுநர் பாத்திமா பீவீக்கும் கருணை மனு அனுப்பினார்கள். அவர் தமிழக அமைச்சரவைக்கு அனுப்பினார். அன்று தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தார். நளினி தவிர மற்ற மூவரது கருணை மனுக்களையும் நிராகரிப்பதாக அமைச்சரவை முடிவுசெய்தது. இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பினார்கள். 2000-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் நாள் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகிய இருவரிடமும் நெடுமாறன், மணியரசன், தியாகு, கார்முகில் ஆகிய நால்வரையும் அழைத்துச் சென்று கோரிக்கை வைக்க ஏற்பாடு செய்தார் வைகோ. 'சிறையில் இருக்கும் நால்வரையும் விடுதலைசெய்ய வேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இதில் ஏதாவது முடிவெடுத்தால் காங்கிரஸுடன் மோத வேண்டி இருக்கும் என்பதால், பி.ஜே.பி. மௌனமாக இருந்தது. 2004-ல் ஆட்சி மாறி, காங்கிரஸ் அரசாங்கம் வந்தது. அவர்களும் இந்தக் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார். இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு தமிழக உள்துறையால் சொல்லப்பட்டது.

'தமிழக அரசே இவர்களை விடுதலை செய்யலாம்’ என்று அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்தபோது, 'இதற்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னார். மூவரும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை மனு தாக்கல் செய்தார்கள். இந்த மூவர் சார்பில் ஆஜர் ஆவதற்கு இந்தியாவின் மிக மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானியை வைகோ அழைத்து வந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், வேலூர் சென்று கைதிகள் மூவரையும் சந்தித்தார். 'இவர்கள் நிச்சயம் விடுதலை ஆவார்கள்’ என்று சொன்னார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'தூக்குத் தண்டனை விதிக்கத் தடை’ என்று அறிவித்தது. அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றினார்கள். அதிலும் ராம்ஜெத்மலானி ஆஜரானார். இதுவரை நடந்த 24 வாய்தாகளுக்கும் ராம்ஜெத்மலானி வந்தார். தமிழகத்தில் இருந்து வைகோ மற்றும் வழக்கறிஞர் தேவதாஸ் ஆகியோர் சென்றார்கள். ராம்ஜெத்மலானியின் வாதங்களைப் பார்த்த நீதிபதிகள், இனிமேல் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள் வந்தால், அதற்கு நீதிமன்றத்தில் ஆலோசனை சொல்லும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்கள். இந்த வழக்குதான் கடந்த 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

''இப்போது தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்படும் இந்த மூன்று பேரும் 23 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டதால், அவர்களின் ஆயுள் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்யலாம். இதுபற்றி மாநில அரசு உரிய முடிவை எடுத்துக்கொள்ளலாம். அப்படி மாநில அரசு முடிவெடுப்பதற்கு சட்டப்பிரிவு 432, 433-ஏ ஆகியவற்றில் இடம் உள்ளது. அல்லது, மாநில அரசு தனக்கு இருக்கும் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியும் அவர்களை விடுதலை செய்யலாம்'' என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நம்பிக்கை கீற்றை ஒளிர்விடச் செய்துள்ளது உச்ச நீதிமன்றம்!

- ஜோ.ஸ்டாலின்

https://www.facebook.com/permalink.php?story_fbid=259477090887425&id=227293240772477&substory_index=0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.