Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்ஸ் அப்பை வாங்கியது ஃ பேஸ்புக்

Featured Replies

வட்ஸ் அப் (Whats App) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக  அறிவித்துள்ளது.
 
facebook.jpg
 
மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப்.
 
தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
 
வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம், அதன் பயனர்களுக்கான பிரத்தியேக செயலியான ஃபேஸ்புக் மெஸென்ஜரை அறிமுகப்படுத்தியது. 
 
வட்ஸ் அப் -இன் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது அந்நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது.
 
தொடர்ந்து வட்ஸ் அப் தன்னிச்சையாக செயல்படும் என்றும், அதன் பிராண்ட் மாற்றப்படாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 
 
மேலும், வட்ஸ் அப் இணை நிறுவனர் யான் கூம் ஃபேஸ்புக்கின் வாரிய இயக்குநர்களில் ஒருவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஃபேஸ்புக் மெஸென்ஜரும் தனித்து செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நூறு கோடி மக்களை இணைக்கும் பாதையில் வட்ஸ் அப் பயணித்து வருகிறது. அந்த மைல்கல்லை எட்டும் எந்த சேவையும் மதிப்பு வாய்ந்தது என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

 

http://virakesari.lk/?q=node/361605

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தரை துடைக்கும் வேலைமுதல் வாட்ஸ் ஆப் நிறுவனர் வரை - சோதனையை சாதனையாக்கிய கோம்

 

இளைய சமூகத்தினர் மத்தியில் மிக பிரபலமான மொபைல் அப்ளிகேஷன் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான ஜான் கோம் தன்னுடைய இளைய வயதில் உணவிற்காக வரிசையில் காத்திருந்தும், வறுமையுடன் போராட தரை துடைக்கும் வேலையையும் செய்தும், தற்போது மிக பெரிய வெற்றி பெற்று சோதனையை சாதனையாக மாற்றியுள்ளார்.

img1140222015_1_1.jpg
 
உக்ரைனிலிருந்து பணம் இல்லாமல் தனது தாயாரோடு அமெரிக்காவிற்கு வந்த போது ஜான் கோம்மின் வயது 16.

சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், ஒரு மளிகை கடையில் தரையை சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்த கோம், ஒரு பழைய புத்தக கடையில் இருந்து கையேட்டை கடனுக்கு வாங்கி கம்யூட்டர் நெட்வர்கிங் படித்தார்.

இம்மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 38வது பிறந்தநாளை கொண்டாடும் கோம், 1997 ஆம் ஆண்டு சிலிகான் வாலியில் படித்துக்கொண்டிருந்த போது படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் மிகச் சிறந்த, நெருக்கமான நண்பர்களான பிறகு யாஹு நிறுவனத்திலேயே வேலையில் சேர்ந்தார் கோம்.

img1140222015_2_1.jpg
 

இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டில் கோமின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு, கோமின் வாழக்கைக்கு உறுதுணையாக இருந்து ஆக்டன் உதவி புரிந்துள்ளார்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர். ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல் ரிலாஸ்க் செய்துக்கொண்டனர். பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தனர், இருவரது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு ஆக்டனும், கோமும் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை நிறுவினர். மிக எளிமையாக பயன்படுத்தக்கூடிய இந்த மொபைல் அப்ளிகேஷனை உலகம் முழுவதும் 450 மில்லியன் மக்கள் உபயோகித்தனர்.

இதையடுத்து பேஸ்புக் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதோடு இல்லாமல் ஜான் கோமை பேஸ்புக்கின் இயக்குனர்களுள் ஒருவராக்கியுள்ளது.

பேஸ்புக்குக்கு தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துதான் கோம் கையெழுத்திட்டுள்ளார் எனவும், அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது எனவும் போர்பஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1402/22/1140222015_1.htm

 

Edited by Athavan CH

இவர் முதன் முதலாக 19 வயதில் தான் தனது சொந்த  கணனியை வாங்கி கொண்டார் என்றும்  தகவல்களில் இருக்கின்றன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.