Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே: தமிழக முதல்வரக்கு கடிதம் எழுதிய அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே: தமிழக முதல்வரக்கு கடிதம் எழுதிய அனந்தி 

[Tuesday, 2014-02-25 20:05:17]
Ananthi-sasitharan-200-seithycom.jpg

அண்மையில் ரஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டபின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாகதாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலகம் வாழ்தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

  

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ்பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்படவேண்;;டியவரே எனத்தெரிவித்துள்ளார் அனந்தி சசிதரன்.

தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவிற்கு அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கையினில்; தமிழகத்தில்; சிலதசாப்தகாலமாக அகதிமுகாம்களில் பல் வேறு துன்பதுயரங்கi சுமந்த படி பல்வேறுநெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தபடி அகதிகள் என்ற பெயரில் நிரந்தரமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பற்றிதங்கள் மேலான கவனத்திற்குகொண்டுவருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்புநிலமையினை தோற்றுவிக்கவேண்டும் என நாம் விரும்புகிறோம். உண்மையில் அவர்கள் அகதிகளும் அல்ல. அநாதைகளும் அல்ல சிங்கள அரசின் அளப்பரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்கமுடியாது உயிர்பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்துவந்தவர்கள்.

கடந்த நான்குதசாப்தங்களில் அவர்கள் வசதிகளற்ற அகதிமுகாம்களிலும் சிறப்புமுகாம் எனஅழைக்கப்படும் தடுப்புமுகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் இரகசியமானதல்ல. அவர்களும் அவர்களது உறவுகளும் சொந்தமண்ணிற்கு திரும்பி இயல்புவாழ்க்கைவாழும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ளவர்களின் துன்ப துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.இந்தநிலையில் தங்களால் சொந்தமண்ணிற்கு திரும்பும் வரையிலானகாலம் கனியும் வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனித உணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கானஅடிப்படைவசதிகளைஏற்படுத்திக் கொடு;க்கவேணடியது தமிழகஅரசினதும் முதல்வராகிய உங்களதும் மனிதநேயகடமையாகும் எனஎண்ணுகிறோம்.

மரணதண்டனைக் கைதிகளில் காட்டியமனிதநேயமும் நியாயஉணர்வும் ஈழத்தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளதென்றுள்ளது.

மாண்புமிகுமுதலமைச்சர்செல்வி ஜெயலலிதாஅவர்களுக்கு,

தமிழகஅரசுதலைமைச்செயலகம்,

சென்னை.

21.02.2014

அன்பிற்கும் மதிப்பிற்குமுரியஅம்மாஅவர்களுக்குவணக்கங்கள் பல,

நான் ஈழத்தின் வடமாகாணசபைஉறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்). அண்மையில் ரஜீவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனைவிதிக்கப்பட்டபின் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றுதமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படிமனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்தமுடிவுஉலகம் வாழ்தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியைஏற்படுத்தி இருக்கின்றது.

இது வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பதுஉண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ்பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்படவேண்;;டியவரே. இதேசமயம்; தமிழகத்தில்; சிலதசாப்தகாலமாக அகதிமுகாம்களில் பல் வேறு துன்ப என்றபெயரில் நிரந்தரமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாகவாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பற்றிதங்கள் மேலானகவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்புநிலமையினை தோற்றுவிக்கவேண்டும் எனநாம் விரும்புகிறோம்.

உண்மையில் அவர்கள் அகதிகளும் அல்ல. அநாதைகளும் அல்லசிங்களஅரசின் அளப்பரய கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது உயிர்பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்துவந்தவர்கள். கடந்த நான்கு தசாப்தங்களில் அவர்கள் வசதிகளற்றஅகதிமுகாம்களிலும் சிறப்புமுகாம் எனஅழைக்கப்படும் தடுப்புமுகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் இரகசியமானதல்ல.

அவர்களும் அவர்களதுஉறவுகளும் சொந்தமண்ணிற்குதிரும்பி இயல்புவாழ்க்கைவாழும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்குள்ளவர்களின் துன்துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ளமுடியும். இந்தநிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும்வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனிதஉணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக் கொடு;க்கவேணடியதுதமிழகஅரசினதும் முதல்வராகியஉங்களதும் மனிதநேயகடமையாகும் என எண்ணுகிறோம்.

மரணதண்டனைக் கைதிகளில் காட்டியமனிதநேயமும் நியாயஉணர்வும் ஈழத்தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தங்களுக்குஎனதுநன்றிகள்.

என்றும் உண்மையுள்ள,

ச,அனந்தி

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104418&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.