Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் இடம்பெயர்வும் வெளியுலகுக்கு தெரியாத உண்மைகளும்

Featured Replies

மூதூரிலிருந்து ஒரு நேரடி விளக்கம்

-கொத்தியார்-

மனித அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் அண்மையில் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வுகளில் முஸ்லிம்களையும் இடம்பெயர்வு தொட்ட பின்பே, இந்த அவலங்கள் அரசியல் வாதிகளுக்கும் அரச உயர் மட்டத்தினருக்கும் அகதிகள் பற்றிய அனுதாபம் ஏற்பட்டிருக்கின்றது.

ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்குப் பின்பு, பதில் நடவடிக்கையாக சம்பூர் பிரதேசத்தின் மீது நடத்தப்பட்ட வான் மற்றும் எறிகணை தாக்குதலால் மூதூர் கிழக்குப் பகுதியில் பதினொரு கிராம அதிகாரி பிரிவுகளில் வசித்த 18 ஆயிரத்து 360 மக்கள் இடம்பெயர்ந்து காடுகளில் தஞ்சமடைந்தனர். 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல குடிமனைகள், பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டன. இம்மக்கள் பட்ட அவலங்கள், இடம்பெயர்வுகள், இனம், பிரதேசம் பார்த்துப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்ட நிவாரணம் இருவாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதேகாலப் பகுதியில் பொருளாதாரத் தடை இராணுவத்தால் இறுக்கமாக்கப்பட்டது. மூதூர் நகருக்குள் தமிழ் மக்கள் செல்ல முடியாதபடி `கருணா குழு' என்ற பெயரில், முஸ்லிம் காடையர்களால் தமிழர்கள் 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மூதூர் நகருக்குள் ஏப்பிரல் மாதம் தொடக்கம் தமிழர்கள் வருவதை தடுப்பதற்காக, இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் படுகொலைகளை திட்டம் தீட்டி பாதுகாப்புப் பிரிவினரின் அனுசரணையில் முஸ்லிம் காடையர்கள், சரூக் தலைமையில் செய்து வந்தார்கள். பொலிஸ் இதுபற்றி வாய் திறக்கவேயில்லை.

மூதூர் நகரில் இயங்கும் அரச திணைக்களங்களால் 35 ஆயிரம் தமிழ் மக்கள் தங்கள் சேவையை பெறமுடியாமல் தடுக்கப்பட்டிருந்தனர். இதை பாதுகாப்புத் தரப்பினரோ அல்லது அரசியல் வாதிகளோ, அரசாங்கமோ கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மூதூர் நகருக்கு வந்தவர்கள் திரும்பிச் செல்வதில்லை. அப்படி ஒரு கொலைக்களமாக மூதூர் நகரம் தமிழ் மக்களுக்கு மூன்று மாதங்களாக மிரட்டிக்கொண்டிருந்தது.

இந்தப் படுபாதக செயல்கள் மனிதாபிமானம் மிக்க முஸ்லிம்களையும் வேதனைக்குட்படுத்தியது உண்மை. ஆனால் அவர்களால் இப்படுகொலைகளை கண்டித்துப் பேச முடியாத படி முஸ்லிம் இயக்கங்கள் (ஒஸாமா, ஜிகாத் மற்றும் சிறு குழுக்கள்) அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுத்திருந்தன. முன்னாள் மூதூர் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.நியாஸ் இடமாற்றம் பெற்றுச் செல்ல முஸ்லிம் பயங்கரவாத இயக்கம் ஒன்றின் அச்சுறுத்தலே காரணம். அந்த அளவு முஸ்லிம் பயங்கரவாத இயக்கம், மூதூர் நகரில் பாதுகாப்பு தரப்பினரின் அரவணைப்பில் செயல்பட்டு வருகிறது.

இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் இந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் சிலர், `கருணா' குழு என்ற பெயரில் மே மாதம் மக்கள் மத்தியில் பகிரங்கமாக பிரசன்னம் தந்து, முன்னாள் புளொட் உறுப்பினரும் பின்னர் E.N.D.L.F. இயக்கத்தில் இயங்கிய மூதூர் ரங்கா மற்றும் சுனில், சிறி உட்பட 30 பேர் கொண்ட குழு மூதூரில் இயங்குவதாக இனங்காட்டிய பின்பு ,மூதூரில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

உண்மையில் இக் கொலைகளுக்கு இக்குழுவில் இரண்டாம் தர தளபதியாக இணைந்து கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வைச் சேர்ந்த ஜனாப் சரூக் என்பவரே தமிழர் மீதான கொலைகளுக்கெல்லாம் தலைமை தாங்கிச் செய்து வருபவர் என்பது மூதூர் முஸ்லிம்களுக்கும் நன்கு தெரியும். இதை அவர்கள் பகிரங்கமாக சொல்ல முடியாது. காரணம், அவர்களுக்கு கொலை அச்சறுத்தல் மட்டுமல்ல, தமிழர் தரப்பில் கூட அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்ற கடந்த கால கசப்பான அனுபவங்கள் அவர்களை மௌனியாக்கியுள்ளது.

இக் கொலைகளை செய்தவர்களில் ஏழு முஸ்லிம் நபர்கள் தற்போது பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 16.06.2006 ஆந் திகதி மூதூரில் இயங்கும் உள்ளூர் தொண்டு நிறுவனத்திடம் 25 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கிய வேளை, அந்த நிறுவனப் பொறுப்பாளர் சாதுரியமான முறையில் பொலிஸ் புலனாய்வுடன் தொடர்பு கொண்டு இவர்களைக் கைது செய்ய இரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் விசாரணையில் உள்ளார்கள். இதன்பின்பு தமிழன் மீதான படுகொலைகள் மூதூரில் நடப்பது குறையும் என்ற நிலை தோன்றிய வேளையில், எஞ்சிய முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்கும் அணியுடன் சேர்ந்து செயல்ப்பட்டு வந்தார்கள். 28.06.2006 ஆந் திகதி முஸ்லிம்களுக்கு நன்கு பரிச்சமான அரபா நகரூடாக அம்மன் நகரில் மரவள்ளி சேனையில் வைத்து ஒரு விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படி முஸ்லிம் பயங்கரவாதிகள் அரச படைகளுடன் `கருணா குழு' என்ற பெயரில் அப்பாவிதமிழ் மக்களைக் கொன்று குவித்து ஒரு அராஜக வேள்வியை நடத்தி கொண்டிருந்தது, வெளியுலகு அறிந்து கொள்ள முடியாத துர்பாக்கிய செவிட்டுத்தன்மை என்றே கூற வேண்டும்.

இதேவேளை, மூதூர் கிழக்குப் பகுதிகளில் வான் மற்றும் ஏறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தன. மூன்று மாத காலமாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களுக்கு இடர் நிவாரண அமைச்சர் எந்தப் பணியும் செய்யவில்லை. மூதூரில் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பின்பே இந்த அமைச்சுகளும் செயல்பட முன்வந்துள்ளன. ஆனாலும் வாகரைப் பகுதியில் தஞ்சமடைந்த மூதூர் கிழக்கு, வெருகல் பிரதேச மக்கள், சுமார் 52 ஆயிரம் மக்களுக்கு இடர் நிவாரண அமைச்சு இதுவரை என்ன செய்தது, மனிதாபிமானமிக்க உள்ளங்கள், இனம், மதம், மொழி கடந்து, ஒரு கணம் இவர்கள் நிலைமைகளை சிந்தித்து பாருங்கள்.

மூதூர் பிரதேசத்தில் தமிழர் மீது அரசாங்கமும் அதன் படைகளும் பொருளாதாரத் தடை உட்பட மனிதப் படுகொலைகளைச் செய்து வந்த வேளையில் மாவிலாறு அணையை மூடி தமிழ் மக்களின் அவலங்களை இதன் மூலம் வெளியுலகிற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில் அரசு இராணுவ நடவடிக்கை மூலம் கையாள நினைத்தது. இதுவும் இராணுவம் ஐ.தே.க. காலத்தில் இருந்து இத்திட்டம் யுத்த முனைப்புக்கான ஒரு காரணமாக இந்த மாவிலாறு பிரச்சினையை எடுத்துக் கொண்டது. இப்பகுதியில் படைகுவிப்புகளும் மூதூர் நகர் ஊடுருவல் அணியில் செயற்பாட்டு மையமாகவும் வைத்து மூதூர் கிழக்குப் பகுதிகளில் ஊடுருவி தாக்குவதும் சம்பூரை வெற்றுப் பூமியாக்கி அங்கு சென்று இராணுவத்தளம் அமைப்பதும் என்ற இராணுவ வியூகத்திற்கு மூதூர் முஸ்லிம்கள் வாழும் இடம் இராணுவத்தால் தெரிவு செய்யப்பட்டு செயற்பாடுகளும் நடந்து வந்தன.

இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்திருப்பதை மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் மூதூர் நகர் மீது விடுதலைப் புலிகளின் மட்டுப்படத்தப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. இது மூதூர் பிரதேச தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் செய்த வரலாற்றுக் கடமை என்பதுடன் பூகோள ரீதியிலோ அல்லது சமூக உறவுகளிலோ தமிழ் - முஸ்லிம் உறவு பிரிக்கப்பட முடியாத ஆத்மார்த்தமான உறவு என்பதை உணர்ந்து கொள்ளவும் வைத்தது.

மூன்றாம் தரப்பு என்பது தமிழர்களுடனோ சிங்களவருடனோ சாராமல் தனித்தரப்பாக நின்று செயற்படுவதாகும். மேலும், மூதூரில் மீளக் குடியமர அரசும் விடுதலைப் புலிகளுடனும் பேசி உத்தரவாதத்தைப் பெறுவதில் முஸ்லிம் தலைமைகள் அக்கறையுடன் செயல்படுவதில் தான் இப்படியான இடம்பெயர்வுகள் இனிமேலும் தொடராதிருக்கும் என்பதே அனைவரதும் நம்பிக்கையாகும்.

http://www.thinakkural.com/news/2006/9/3/a...es_page9918.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.