Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வடபகுதி மீனவர்களை வைத்து மத்திய, மாகாண அரசுகள் பிழைப்பு நடத்துகின்றன'

Featured Replies

a00%283218%29.jpg

வடபகுதி மீனவர்களை வைத்து மத்திய, மாகாண அரசுகள் அரசியல் பிழைப்பு நடத்துவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகனால் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் இந்திய மீனவர்களால் எமது கடல் வளம் அழிக்கப்படவில்லையென்றும்  எமது தொப்புள்கொடி உறவுடன் வாழ்பவர்கள் அவ்வாறு நடக்க மாட்டார்களெனவும் மாறாக தென்பகுதி மீனவர்களும் வெளிநாட்டு மீனவர்களுமே எமது வளங்களை அழிக்கின்றனரென்ற கருத்தை தெரிவித்தார்.

இதற்கு ஒரு படி மேலே  மத்திய கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.02.2014 அன்று  வழங்கிய செய்தியில் இரு நாட்டு மீனவர்களின் உடன்பாட்டுடன் இப்பகுதியில் தொழில் புரியலாமென தெரிவித்திருந்தார்.

ஆனால், பேச்சுவார்த்தை ஆரம்பித்தவுடன் அமைச்சரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படுவதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுமென தெரிவித்திருந்தார்.

தற்போது இவர்களின் இவ்வாறான இந்திய மக்கள் மீதும் எல்லை மீறும் மீனவர்கள் மீதும் ஏற்பட்டுள்ள திடீர் காதல் ஏன் என்பதுடன்,  இதன் உள்நோக்கமும் அனைவருக்கும் தெரிகின்றது. இவர்கள் மீனவர்களை எந்தளவுக்கு புரிந்து வைத்துள்ளனர் என்பது தற்போது தெரிகின்றது.

வடபகுதி மீனவர்கள் கடந்த காலங்களில் இந்திய மீனவர்களின் தொழில் முறை மற்றும் அவர்களின் அத்துமீறிய வருகையை எதிர்த்து உண்ணாவிரதம், பாதயாத்திரை ,அமைதி ஊர்வலம், ஆர்ப்பாட்டப் பேரணியென முன்னெடுத்ததை இவர்கள் பிழையென கருதுகின்றார்களா?
மேலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை கொள்ளையிடுவதுடன், எமது கரைக்கு வந்து இளநீர் குடித்து விட்டு செல்லும் நிலை உள்ளதென தெரிவித்தது வெறுமனே மீனவர்களின் கைதட்டலை பெற்றுக்கொள்வதற்காகவா?  வடபகுதி மீனவர்களுக்காக இன்றுவரை இம்மாகாண சபையில் ஒரு தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? இவர்களின் பிரச்சினைகள் இச்சபையில் பேசப்பட்டுள்ளதா? எனவே, வடபகுதி மீனவர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்டவர்களை மீனவச் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.
 
 

கைதான மீனவர்கள்...    

 

DSCF6962%20copy.jpg
யாழ். நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  இந்திய மீனவர்கள் 32 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை  (03) இரவு கைதுசெய்தனர். (படங்கள்: சுமித்தி தங்கராசா)
DSCF6952%20copy.jpg
DSCF6963%20copy.jpg

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.