Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கத் தீர்மானம் எதிர்ப்பதா? எரிப்பதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பாருங்கோ கொஞ்ச நாளா எங்கட தொப்புள்கொடி உறவுகள் தமிழகத்தில அமெரிகவுற்க்கு எதிர நல்ல போராட்டங்களை செய்து கொண்டு வருகினை . இது பிடிக்காமல் எங்கட நாடுகடந்த அரசாங்கம் போராடுற பொடியளுக்கு தொலைபேசி எடுத்து நீங்கள் அமெரிக்க தீர்மானத்தை இப்படி எரிக்கபுடது , கிழிக்க கூடாது நாங்கள் அந்த தீர்மானத்தை கொண்டுவர இரவுபகல வேலை செய்கிறம் வெளிநாட்டில [அப்ப நீங்கள் சொலுற வேலை குடிச்சு போட்டு கும்மாளம் அடிக்கிறது ] எண்டு சொல்லுகினை அது பத்தாது என்று தமிழகத்தில் சில வால் பிடிகளை வைசிருகினை அவை என்னடா நாக்கறுந்த நாடுகடந்த அரசாங்க அமைசர்கள் என்று தங்களை தானே சொளுரவையோட நேரடி தொடர்ப்பம் .

இந்த வால் பிடிகள் தமிழ் நாட்டில் மாணவர்களுக்கு சொல்லுறது உருத்திரகுமார் [ உளுந்தூர் பேட்டை உருத்திரகுமார் இலையங்கோ இது அமெரிக்காவில இருக்கிறார் தானே அவர் ] சில நாடுகளோட லாபி அரசியல் செய்து தமிழீழத்தை பொற வேலைகள் செய்கிறார் அதனால நீங்கள் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் , அவங்களுக்கு எதிராகவும் போரடதிங்கோ எண்டு இவை குடுத்த காசுக்கு கூவினை. ஆன ஒண்டு பாருங்கோ மாணவர்கள் நல்ல தெளிவா இருகிறங்கள் நாடுகடந்த அரசாங்கம் யாரால் எப்படி எபோது ஆரம்பிக்க பட்டது என்று உடனே கேள்வி கேகிறங்கள்.

இது பற்றி தமிழகத்தில் இருந்து உமர் அவர்கள் எழுதிய பதிவு :

அமெரிக்கத் தீர்மானம் எதிர்ப்பதா? எரிப்பதா?

தற்பொழுது அமெரிக்காவால் முன்மொழியப் பட்டிருக்கும் தீர்மானம் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் தரவல்லது அல்ல. அதனை எதிர்க்கலாம்; அதற்காக எரிக்கவெல்லாம் வேண்டாம் என்னும் ரீதியில் சிலர் பேசி வருகின்றனர். விவாதிக்க வேண்டிய அளவிலும், நடைமுறைப்படுத்தும் அளவிலும் இவர்கள் கூறுவது முக்கியமானதும் கூட. தீர்மானத்தை எரிப்பது என்பது இந்த ஆண்டு தொடங்கவில்லை எனினும், எரிக்கும் நடைமுறை எதனால் நிகழ்ந்தது என்பதை அறிந்து கொண்டால், தெளிவாக முடிவெடுக்க வசதியாக இருக்கும்.

பல்வேறு செய்தி ஊடகங்களும் எப்பொழுதுமே தவறான செய்திகளையே தங்களது ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றன என்பதை அனைவருமே அறிந்திருப்பீர்கள். அதிலும் குறிப்பாக இனப்படுகொலைக்கான விசாரணை கோரி நடைபெற்ற போராட்டத்தின் செய்தியை வெளியிடும்போது, இனப்படுகொலை விசாரணை குறித்த பதாகையின் படத்தை வெளியிட்டு, போர்க்குற்ற விசாரணை கோரி போராட்டம் நடந்தது என்று செய்தி வெளியிட்ட கூத்தெல்லாம் நடைபெற்றது.

அதுபோன்ற ஒன்றுதான், கடந்த ஆண்டும் 2013ல் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக மாணவர்கள் மார்ச் 8 அன்று போராட்டத்தை தொடங்கியபோது, அவர்கள் முன்வைத்த 9 கோரிக்கைகளில் முதல் கோரிக்கையே, அமெரிக்கத் தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் அனைத்து ஊடகங்களும் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து மாணவர்கள் போராடுவதாக செய்தி வெளியிட்டனர். ஒவ்வொரு ஊடகத்தின் Input மற்றும் Assignment குழுக்களிடம் பேசி போராட்டம் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிரானது என்று தொடர்ந்து பேசி, பெரும்பாலான ஊடகங்கள் பிறகு மாற்றிக்கொண்டன. ஆனாலும், டெசோ நாடகக் குழுவோடு தொடர்புடைய சில ஊடக நிறுவனங்கள் மட்டும் தொடர்ந்து அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவதாக செய்தி வெளியிட்டு வந்தன.

அப்பொழுதுதான் செய்தித்திரிப்பை தடுப்பதோடு மட்டுமின்றி, இந்த எதிர்ப்பை இன்னும் வலிமையாகச் சொல்ல வேண்டும் என்னும் நோக்கில், அமெரிக்கத் தீர்மானத்தினை எரிப்பது என்னும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலில் சென்னையிலும், பிறகு சிதம்பரத்திலும் தொடங்கிய அந்த எரிப்புப் போர் அடுத்து தமிழகம் எங்கும் பரவியது. அதற்கு பிறகு திரித்து செய்தி வெளியிட்ட நிறுவனங்களும், அதற்கு மேல் திரிக்க இயலாமல் அமெரிக்கத் தீர்மான எதிர்ப்பு என்னும் சரியான கோரிக்கையை வெளியிடத் தொடங்கினர்.

2009ல் தெற்காசிய பிராந்தியத்தில் செயல்படும் ஒவ்வொரு அமெரிக்க தூதரக அதிகாரியும் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்த விவாதத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதை பல விக்கிலீக்ஸ் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், இங்கிருக்கக்கூடிய பலரும் அவர்களிடம் அளித்த தவறான தகவல்களின் அடிப்படையில், அவர்கள் தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை என (2009) பதிவு செய்திருந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டு அது போன்ற தவறான தகவல்கள் எதுவும் அவர்களுக்கு சென்று சேராமல், சரியான தகவல்களே சென்று சேர்ந்திருக்கின்றன. அதற்கு காரணம் ஒவ்வொரு பகுதியிலும் எரிக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மான நகல்களே. இதனை, அமெரிக்காவின் சார்பாக லாபி செய்யக்கூடிய சில காகித அமைப்புகளே கூறியிருக்கின்றன. அப்படியெனில், நாம் எதிர்க்கிறோம் என்பதை மிகச் சரியாக சொல்லவேண்டுமென்றால், வெறும் பதாகைகள் பிடித்து அல்ல அமெரிக்கத் தீர்மானத்தை எரித்தே சொல்ல வேண்டும். சமூக நீதிக்கு எதிரான சட்ட வரைவுகளை எரித்த புரட்சியாளர்களைக் கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்களாகிய நாமும், நமது விடுதலைக்கு எதிரான தீர்மான வரைவுகளை எரித்தே எதிர்ப்பினைப் பதிவு செய்வோம்..

தமிழர்கள் என்னும் வார்த்தையே இடம்பெறாமல், தமிழரின் தேசிய இன அடையாளத்தை மறுத்து முன்வைக்கப்படும் அமெரிக்கத் தீர்மானம் செத்துப் பிறந்த குழந்தை. அது வளர்ந்து, நமக்கு தீர்வு தரும் என்றெல்லாம் எண்ணாமல், செத்துப்பிறந்த குழந்தைக்கு பாடை கட்டி, ஊர்வலம் சென்று, எரித்து இறுதிச் சடங்கினை செய்ய வேண்டும், கடந்த ஆண்டு தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தோழர்கள் செய்தது போல.

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.