Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கை போர்ப் பிரகடனம்

Featured Replies

திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது.

சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவிக்கிறது.

- அப்பாவித்தமிழ் மக்கள் 97 பேரை கொன்றொழித்து

- 215 பேரை காயப்படுத்தி

- மக்களின் சொத்துக்களை அழித்து

- 46 ஆயிரம் மக்களை இடம்பெயர்த்தி விட்டு

- சம்பூரை தரைமட்டமாக்கி விட்டு

அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று சிறிலங்கா அரசுத் தரப்பு அறிவிக்கின்றது.

ஆனால் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அமைதியாக இருப்பது ஏன்?

சிங்கள மக்கள் யாரும் கொல்லப்பட்டால் ஆதாரம் ஏதுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு குரல் எழுப்புகின்றவர்கள்-

- தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு

- அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டு

- நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு

அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதும் அமைதி காப்பது ஏன்?

என்று அந்த முறைப்பாட்டில் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் தொலைபேசியூடாக இன்று கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமிப்பது என்பது பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மதிக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

இருப்பினும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பதில் தாக்குதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் எங்கும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிகழ்வுப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய சிறிலங்கா அரசாங்க தலைவர் மகிந்த ராஜபக்ச, சம்பூரில் முன்னேறியிருப்பதாக அறிவித்தார் என்று ஏ.எஃப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தற்போது நடப்பது யுத்தம் அல்ல. தாக்குதல் நடவடிக்கைதான் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, "சம்பூரை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் அழித்தொழிப்பதனூடான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் மூலம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு ஊடகமான சண்டே லீடருக்கு அளித்த நேர்காணலில், சம்பூருக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்றும் இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுவது குறித்து எமது தலைமைப்பீடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இளந்திரையன் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=28646

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே கண்காணிப்பு குழு ஒன்டும் செய்யேலை என்டு சொல்லிக்கொண்டிருக்கிறதில அர்த்தம் இல்லை. இனி புலிகளின் பக்கத்திலிருந்து வெற்றிச் செய்திகள் வர வேண்டும் என்று எழிலன் அவர்களிற்கு தெரிந்திருக்க வேண்டும். பொறுமை பொறுமை என்று சொன்னார்கள். ஆனால் அது இயலாமை என்று மாற்றம் கொள்ளாமல் இருந்தால் சரி.

  • தொடங்கியவர்

இப்படியே கண்காணிப்பு குழு ஒன்டும் செய்யேலை என்டு சொல்லிக்கொண்டிருக்கிறதில அர்த்தம் இல்லை. இனி புலிகளின் பக்கத்திலிருந்து வெற்றிச் செய்திகள் வர வேண்டும் என்று எழிலன் அவர்களிற்கு தெரிந்திருக்க வேண்டும். பொறுமை பொறுமை என்று சொன்னார்கள். ஆனால் அது இயலாமை என்று மாற்றம் கொள்ளாமல் இருந்தால் சரி.

அதை தான் நானும் சொல்லுறன் ஆனால் யுத்த நிற்த்த பிரகாரம் ஓரு பகுதி மற்றவரின் நிலைகளை ஆதிக்கம் செய்ய கூடாது அவ்வாறு செய்தால் யுத்த நிறுத்தம் செல்லாது ஆகிவிட கூடும் அரசு சாம்பூரை புலிகள் விட்டிட்டு வந்த மாதிரி வரப்போவது இல்லை ஆக அரசே யுத்தநிறுத்தத்தை முறித்ததெ எனலாம் அதுக்காகவோ தெரியவில்லை :?: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சினை நன்கு முற்றி வெடிப்பதும் நன்றுதான். இன்னொரு தரம் இப்படி சமாதான நாடகம் ஆடவேண்டிய தேவையிருக்காது.

ஆனால் தமிழர் தரப்பில் இழக்கப்பட்டவை ஏராளம்.

பொறுமையின் எல்லை எதுவென்பதைத் தீர்மானிப்பது போராட்டத் தலைமைதான்.

இந்த நேரத்தில் சிங்களப்படையின் உளவுரண் நன்கு உயர்ந்துள்ளது. தமிழ்மக்களின் உளவுரன் பாதிக்கபட்பட்டுள்ளது.

புலிகள் பெரிய தாக்குதலைத் தொடுக்கும்பட்சத்தில் முதற்கட்டத் தாக்குதல்கள் நினைத்ததுபோல எளிதாக இராது, காரணம் அண்மையில் மிகஉயர்வடைந்துள்ள சிங்களப்படையின் உளவுரணே.

தாக்கியதும் ஓடிவிடுவார்கள் என்ற நிலையிலிருந்து இயன்றவரை தாக்குப்பிடிப்பார்கள் என்ற நிலைக்கு சிங்களப்படை வந்திருக்கும்.

ஆனால் முதல் வெற்றிகளின் பின் நிலைமை மாறும்.

ஓயாதஅலைகள் -3 இன்போதும் படையினரின் உளவலிமை மிக உச்சக்கட்டத்திலும் தமிழரின் உளவலிமை குன்றியுமிருந்தது. ஒட்டுசுட்டான், கரிப்பட்ட முறிப்புப் படைநிலைகளில் புலிகளின் தாக்குதலை கடுமையாக எதிர்த்துச் சமரிட்டனர் படையினர். ஆனால் அத்தளங்கள் வீழ்ந்தபோது மிகுதிப்பகுதிகள் மிக இலகுவாக வீழ்ந்தன.

இப்போது நோர்வேயை நிர்ப்பந்திக்க வேண்டிய நேரம். சிங்களப்படைகள் உடனடியாக பின்வாங்க வேண்டும் அல்லது தாம் வெளியேறுவோம் என்று நோர்வேயைக் கொண்டு எச்சரிக்கைவிடவேண்டிய நேரம்.

அதற்கு சிங்களத்தரப்பிலிருந்து கிடைக்கும் காட்டமான எதிர்ப்பைக்கொண்டு நோர்வேயே தானாக ஓர் அறிக்கைவிட்டு விட்டு வெளியேற வேண்டிய நேரமிது.

பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

தன்திர நடவடிகை களில்இதுவும் ஒண்டிதான் ஒப்பந்தத கிளிக்க.

[திங்கட்கிழமை, 4 செப்ரெம்பர் 2006, 18:12 ஈழம்] [ச.விமலராஜா]

திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது.

சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவிக்கிறது.

- அப்பாவித்தமிழ் மக்கள் 97 பேரை கொன்றொழித்து

- 215 பேரை காயப்படுத்தி

- மக்களின் சொத்துக்களை அழித்து

- 46 ஆயிரம் மக்களை இடம்பெயர்த்தி விட்டு

- சம்பூரை தரைமட்டமாக்கி விட்டு

அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று சிறிலங்கா அரசுத் தரப்பு அறிவிக்கின்றது.

ஆனால் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அமைதியாக இருப்பது ஏன்?

சிங்கள மக்கள் யாரும் கொல்லப்பட்டால் ஆதாரம் ஏதுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு குரல் எழுப்புகின்றவர்கள்-

- தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு

- அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டு

- நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு

அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோதும் அமைதி காப்பது ஏன்?

என்று அந்த முறைப்பாட்டில் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் தொலைபேசியூடாக இன்று கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமிப்பது என்பது பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மதிக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைபிடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

இருப்பினும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு பதில் தாக்குதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் எங்கும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிகழ்வுப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய சிறிலங்கா அரசாங்க தலைவர் மகிந்த ராஜபக்ச, சம்பூரில் முன்னேறியிருப்பதாக அறிவித்தார் என்று ஏ.எஃப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தற்போது நடப்பது யுத்தம் அல்ல. தாக்குதல் நடவடிக்கைதான் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, "சம்பூரை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் அழித்தொழிப்பதனூடான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் மூலம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பு ஊடகமான சண்டே லீடருக்கு அளித்த நேர்காணலில், சம்பூருக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்றும் இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுவது குறித்து எமது தலைமைப்பீடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இளந்திரையன் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

http://www.eelampage.com/?cn=28646

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nallavan

தாக்கியதும் ஓடிவிடுவார்கள் என்ற நிலையிலிருந்து இயன்றவரை தாக்குப்பிடிப்பார்கள் என்ற நிலைக்கு சிங்களப்படை வந்திருக்கும்.

ஆனால் முதல் வெற்றிகளின் பின் நிலைமை மாறும்

தாக்குப்பிடிக்காமல் ஒடியவர்கள்தான். எங்கும் தாக்குப்பிடிக்கவில்லை. அவர்களின் வான்படை தாக்கியபின்னரேயே அவர்கள் முன்னேறுகிறார்கள். எமக்கு பொதுமக்களைப் பாதுகாக்கவும் அவசியமிருக்கிறது. அவனுகளுக்கு எம் பொதுமக்களை அழிப்பதினால் இலாபமயேயொழிய நட்டமில்லையே! இப்போ அவன் பலம் வானில் உள்ளது! மற்றப்படி அவனிடம் உளவலிமை இல்லை. உளவலிமை இருந்தால், ஏன் பொதுமக்களை கொல்லவேண்டும், அல்லது ஊரடங்கு, கொழும்பில் கடத்தல், காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவிகளைக் கைது செய்து தங்களின் பொய்ப் பரப்புரைக்கு உள்ளாக்குவது. இப்படியே பட்டியலிடலாம். ஒரு பின்னோக்கை நாம் அடைந்துவிட்டால், அடியடா பிடியடா என செயல் படாமல், இவ்வகைப் பின்னடைவுகளை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும். இப்போதைய நிலையில்தான் எமது ஆதரவு தலைமைக்குத் தேழ்வை. போர்களநிலைகள் அவர்களுக்குத்தான் தெரியும். எமக்கு யூகிக்கவே தெரியும்! எமது கடமைகளில் ஒன்று அந்த சிறுமிகளை விடுதலை செய்யக்கோரி ICRC யிடம் மனுக்களை அனுப்பி அவர்களின் விடுதலைக்கு வழி கோலுவதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.